Saturday, December 25, 2010

சமத்துவ மக்கள் கட்சின் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்திகள் :

அனைத்து இடர்களில் இருந்தும் மீண்டு அமைதி வாழ்க்கை வாழ்வதற்கு, சமத்துவம் இப் புவி எங்கும் தலைதொன்குவதற்கு, அன்பென்னும் அஸ்திவாரத்தை பலப்படுத்துவதற்கு, இப்புனித நன்னாளாம் கிறிஸ்துமஸ் திருநாளில் நம் அனைவரும் உறுதி ஏற்போம். அன்பின் சின்னமாக திகழும் ஏசு பிரானின் ஆசியும் , அருளும் நலிந்தோருக்குக்கும், ஏழைகளுக்கும், ஆதரவு அற்றோருக்கும் முழுமையாக கிடைத்து , அவர்கள் வாழ்வில் ஒளிபிறக்க  வேண்டும் என்று இந்த நன்னாளில் நம் அனைவரும் பிராத்தனை செய்வோம் . கிறிஸ்துமஸ்  பண்டிகையை கொண்டாடும் என் சகோதர சகோதிரிகளுக்கு இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை என் சார்பிலும் சமத்துவ மக்கள் கட்சி சார்பிலும் தெரிவித்து கொள்கிறேன்..

தேதி : 25/12/2010
- சரத்குமார்.
தலைவர் , சமத்துவ மக்கள் கட்சி