சென்னை : ‘‘தமிழக அரசின் திட்டங்களால் விவசாய புரட்சி ஏற்படும்’’ என்று சரத்குமார் கூறினார். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், சட்டப்பேரவைக்கு வெளியே நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: வேளாண்மை துறை மானிய கோரிக்கையில் பல்வேறு அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனால், வேளாண் துறையில் புரட்சி ஏற்படும். விவசாயம் செழிக்கும். பேரவையில் திமுக உறுப்பினர் துரைமுருகன், அநாகரிகமாக நடந்துகொண்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது.
அவர், பேரவை தலைவரை பார்த்து பேசாமல் உறுப்பினர்களை பார்த்து பேசினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர், அவரது தொகுதி பிரச்னை குறித்தோ அல்லது பொதுமக்கள் பிரச்னை குறித்தோ பேச வேண்டும் என்றுதான் கூறினேன். யாரையும் அநாகரிகமாக பேசவில்லை.
மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் 20 வருடங்களாக சிறையில் உள்ளனர். நளினிக்கு தூக்கு தண்டனையில் இருந்து மன்னிப்பு அளித்து ஆயுள் தண்டனையாக குறைத்ததுபோல இந்த 3 பேருக்கும் தூக்கு தண்டனையை குறைக்கவேண்டும் என்பதுதான் மக்கள் எண்ணம். எனவே, இந்த கோரிக்கை குறித்து சட்டவிதிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அவர், பேரவை தலைவரை பார்த்து பேசாமல் உறுப்பினர்களை பார்த்து பேசினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர், அவரது தொகுதி பிரச்னை குறித்தோ அல்லது பொதுமக்கள் பிரச்னை குறித்தோ பேச வேண்டும் என்றுதான் கூறினேன். யாரையும் அநாகரிகமாக பேசவில்லை.
மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் 20 வருடங்களாக சிறையில் உள்ளனர். நளினிக்கு தூக்கு தண்டனையில் இருந்து மன்னிப்பு அளித்து ஆயுள் தண்டனையாக குறைத்ததுபோல இந்த 3 பேருக்கும் தூக்கு தண்டனையை குறைக்கவேண்டும் என்பதுதான் மக்கள் எண்ணம். எனவே, இந்த கோரிக்கை குறித்து சட்டவிதிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
