Saturday, March 17, 2012

ரயில்வே பட்ஜெட் வருத்தம் அளிக்கிறது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிக்கை:-

தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:-

எட்டு ஆண்டுகளுக்கு பின் ரயில் பயணக் கட்டண உயர்வு மற்றும் வழக்கமான அறிவிப்புகளை ரயில்வே பட்ஜெட் கொண்டுள்ளது. சாதாரண மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் சாதாரண வகுப்பு கட்டணங்களை உயர்த்தி இருக்க வேண்டாம்.

தமிழகத்தை பொருத்தவரை முன்பு அறிவிக்கப்பட்ட பணிகள் மித வேகத்தில் நடைபெற்று வருகின்றன. அல்லது தொடங்கப்படாமல் அறிவிப்பாகவே உள்ளன.

குறிப்பாக, நெல்லை , தென்காசி அகல ரயில்பாதை, நெல்லையில் இருந்து பிற பெரு நகரங்களுக்கு புதிய ரயில் சேவைகள், நெல்லை , சென்னை இருவழிப்பாதை என பல திட்டங்களை கூறலாம்.

சென்னை ராயபுரம் புது டெர்மினல் அமைய இருப்பது, சென்னை , பெங்களூரு தினசரி மாடி ரயில், வாரத்தில் சென்னை , பூரி மார்க்கத்தில் ரயில், மதுரை , திருப்பதி ரயில் சேவை அதிகரிப்பு என பல அறிவிப்புகளும், நடப்பாண்டில் 1 லட்சம் பேருக்கு வேலை என்ற அறிவிப்பும் வரவேற்கதக்கவை. பல இடங்களில் ரயில்வே மேம்பால பணிகள் மிகவும் மிதமான வேகத்தில் நடந்து வருகிறது

அந்த வகையில் தென்காசி ரயில்வே மேம்பால பணியும் தடைபட்டுள்ளது. ரயில்வே அமைச்சகம் இப்பணியை விரைந்து முடித்து, அப்பகுதி போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும்.

பல திட்டங்கள் அறிவித்திருந்தாலும், அவைகளை உரிய காலத்தில் நிறைவேற்றி பயணிகளின் வசதிகளையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.

மொத்தத்தில் இந்த பட்ஜெட் ஒரு சராசரி பட்ஜெட் என்ற அளவிலேயே அமைந்திருப்பது வருத்தம் அளிப்பதாக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

ராஜினாமா செய்ய நான் ரெடி - நீங்க ரெடியா? - விஜயகாந்துக்கு சரத்குமார் சவால்!

கோவில்பட்டி- மார்ச் 17 - சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்விக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ., நடிகர் குண்டுகல்யாணம், இயக்குநர் ஆர்.வி .உதயக்குமார் ஆகியோர் மைப்பாறை, நடுவிற்பட்டியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ்ஈடுபட்டனர். அப்போது சரத்துகுமார் எம்.எல்.ஏ.பேசுகையில் மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தந்து கொண்டியிருக்கிறது தமிழக அரசு. தேர்தலின் போது கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அவர் இன்றைக்கு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களும் தொலை நோக்கம் கொண்டவை. நாளைய இந்தியா இளைஞர்கள் கையில் தான் உள்ளது என்பதனை அறிந்த தமிழக முதல்வர் தரமான கல்வி, கல்விகேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம் ஆகியவற்றை இளைஞர்களுக்கு உருவாக்க வேண்டும் என்றநோக்கத்தில் செயல்பட்டு கொண்டியிருக்கிறார்.

தமிழகத்தில் இன்றைக்கு நிலவும் மின்தட்டுப்பாட்டிற்கு காரணம் திமுக தான். அவர்கள் ஆட்சியில் இருந்த போது புதிய மின்திட்டங்கள் எதுவும் உருவாக்கபடவில்லை மற்றும் பழைய மின்திட்டங்களை பாராமரிப்பு செய்யாமல் இருந்ததே காரணம்.இந்த நிலையை மாற்ற தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்தி பல புதிய மின்திட்டங்களை துவங்கியுள்ளார்.அதனால் மின்தட்டுப்பாடு விரைவில் சரியாகும்
அதிமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற்று விட்டு குறை கூறும் விஜயகாந்த் ரிசிவந்தியம் தொகுதியில் ராஜினமா செய்யவேண்டும், நானும் தென்காசியில் ராஜினமா செய்கிறேன். இருவரும் ரிசிவந்தியத்தில் எதிர்த்து நின்று போட்டியிடுவோம். அதில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்ப்போம். நான் நிற்க தயார்? விஜயகாந்த் தயாரா?. இன்றைக்கு தமிழக மக்களின் வாழ்க்கை முன்னேற்த்திற்காக பல நல்ல திட்டங்களை தரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்தியாவின் பிரதமராகும் தகுதியுடையவர். அப்படி பட்டவரின் கரத்தை வலுப்படுத்த சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுகவை அமோகா வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.      

அப்போது, தமிழக அமைச்சர் ரமணா, எம்.எல்.ஏக்கள் கடம்பூர் செ.ராஜு (கோவில்பட்டி), எர்ணாவூர் நாராயணன் (நான்குநேரி), தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலர் இராமானுஜம்கணேசன், நகர எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலர் கணேசன், மாவட்ட விவசாய அணி இணை செயலர் ராமச்சந்திரன், ஒன்றிய ஜெ. பேரவை செயலர் ்ஸ்வரப்பாண்டியன், அதிமுக நிர்வாகிகள் அமிர்தராஜ்பாண்டியன்,அல்லிக்கண்ணன், அல்லித்துரை, செண்பகராமன், ரவி,ஆரோக்கியராஜ் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.

முதல்வர் ஜெயலலிதா தயவில் வெற்றி பெற்றுவிட்டு தற்போது அவரை குறித்து குறை கூறும் விஜயகாந்த் ராஜினாமா செய்ய தயாரா என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சவால் விடுத்துள்ளார்.

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்விக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறியதாவது,

தேர்தலின் போது கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. நாளைய இந்தியா இளைஞர்கள் கையில் தான் உள்ளது என்பதை அறிந்து, தரமான கல்வி, கல்விகேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம் ஆகியவற்றை இளைஞர்களுக்கு உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்கத்தில் செயல்பட்டு வருகின்றார்.

இந்தியாவிற்கே பிரதமராகும் தகுதி ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு. தமிழகத்தில் இன்றைக்கு நிலவும் மின் தட்டுப்பாட்டிற்கு காரணம் திமுக அரசு தான். அவர்கள் ஆட்சியில் இருந்த போது புதிய மின்திட்டங்கள் எதுவும் உருவாக்கபடவில்லை மற்றும் பழைய மின்திட்டங்களை பாராமரிக்காமல் இருந்ததே காரணம்.

இந்த நிலையை மாற்ற தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்தி பல புதிய மின்திட்டங்களை துவங்கியுள்ளார். அதனால் மின் தட்டுப்பாடு விரைவில் சரியாகும். அதிமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற்று விட்டு, முதல்வர் ஜெயலலிதா குறை கூறும் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் ராஜினமா செய்ய வேண்டும். நானும் தென்காசியில் ராஜினமா செய்கிறேன்.

இருவரும் ரிஷிவந்தியத்தில் எதிர்த்து நின்று போட்டியிடுவோம். அதில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்ப்போம். போட்டிக்கு நான் தயார்? விஜயகாந்த் தயாரா? என்றார்.