Thursday, July 26, 2012

23 தமிழக மீனவர்களையும் உடனே விடுவிக்க- ஆர்.சரத்குமார் கோரிக்கை

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்களையும் உடனே விடுவிக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான ஆர்.சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுபற்றி தென்காசி.எம்.எல்.ஏ. சரத்குமார் கூறியிருப்பதாவது:- மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 23 பேர்களை இலங்கை அரசு கைது செய்து சிறையில் அடைத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அவர்களை விடுவிக்க இந்திய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலங்கையில் போர் முடிந்த பிறகு அங்குள்ள இலங்கை மீனவர்களும் மீன்பிடி தொழிலில் ஈடுபட துவங்கி விட்டனர். எனவே நமது மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்ட வேண்டியது இந்திய அரசின் கடமையாகும். அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்துவது, தூதுவரை அனுப்புவது, என்று பிரச்சினைகளை தள்ளிப்போடுவதே மத்திய அரசின் செயலாக இருந்து வருகிறது.
...
தமிழர்களை வஞ்சித்து வரும் இலங்கை அரசும், இலங்கைக்கு துணை போகும் மத்திய அரசும், பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படாது.

நாட்டுபடகு கடலுக்கு செல்லும் நாட்களில் இயந்திர படகு மீன்பிடிக்க செல்லக்கூடாது. அது போன்று இலங்கை மீனவர்களும், தமிழக மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி மீன்பிடிப்பதில் ஒழுங்கு முறைகளை ஏற்படுத்தி கொண்டால் இது போன்ற பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்பட்டு விடும். எனவே இருநாட்டு மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்திடும் வாய்ப்பை இந்திய இலங்கை அரசுகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இலங்கை சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 23 மீனவர்களையும் மேலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழர்களையும் விடுவிக்க உடனடியாக மத்திய அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள 5 மீனவர்களையும் பிடித்து அவர்கல் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளார்கள். அவர்களையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்களையும் உடனே விடுவிக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான ஆர்.சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுபற்றி தென்காசி.எம்.எல்.ஏ. சரத்குமார் கூறியிருப்பதாவது:- மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 23 பேர்களை இலங்கை அரசு கைது செய்து சிறையில் அடைத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அவர்களை விடுவிக்க இந்திய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலங்கையில் போர் முடிந்த பிறகு அங்குள்ள இலங்கை மீனவர்களும் மீன்பிடி தொழிலில் ஈடுபட துவங்கி விட்டனர். எனவே நமது மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்ட வேண்டியது இந்திய அரசின் கடமையாகும். அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்துவது, தூதுவரை அனுப்புவது, என்று பிரச்சினைகளை தள்ளிப்போடுவதே மத்திய அரசின் செயலாக இருந்து வருகிறது.
...
தமிழர்களை வஞ்சித்து வரும் இலங்கை அரசும், இலங்கைக்கு துணை போகும் மத்திய அரசும், பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படாது.

நாட்டுபடகு கடலுக்கு செல்லும் நாட்களில் இயந்திர படகு மீன்பிடிக்க செல்லக்கூடாது. அது போன்று இலங்கை மீனவர்களும், தமிழக மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி மீன்பிடிப்பதில் ஒழுங்கு முறைகளை ஏற்படுத்தி கொண்டால் இது போன்ற பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்பட்டு விடும். எனவே இருநாட்டு மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்திடும் வாய்ப்பை இந்திய இலங்கை அரசுகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இலங்கை சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 23 மீனவர்களையும் மேலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழர்களையும் விடுவிக்க உடனடியாக மத்திய அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள 5 மீனவர்களையும் பிடித்து அவர்கல் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளார்கள். அவர்களையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

குற்றாலத்தில் சரத்குமாரின் சொந்த செலவில் கட்டப்பட்டுள்ள காசு போட்டு பயன்படுத்தும் கழிவறை


குற்றாலம்: குற்றாலத்தில் தென்காசி எம்.எல்.ஏ.வும், சமக தலைவருமான சரத்குமாரின் சொந்த செலவில் கட்டப்பட்டுள்ள காசு போட்டு பயன்படுத்தும் கழிவறை மக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறக்கப்பட உள்ளது.

தென்காசி எம்.எல்.ஏ.வும், சமக தலைவருமான சரத்குமார் ரூ.7.50 லட்சம் செலவில் குற்றலாத்தில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக காசு போட்டு பயன்படுத்தும் கழிவறையை கட்டியுள்ளார்.

மெயினருவி அருகே சுமார் 45 சதுர அடியில் அமைக்கப்பட்டு்ள்ள இந்த கழிவறையை பராமரிக்க மனிதர்கள் தேவையில்லை.
...
இரண்டு ரூபாய் அல்லது இரண்டு 1 ரூபாய் நாணயத்தை செலுத்தினால் தானாகவே கதவு திறந்து கொள்ளும். பின்னர் உள்ளே உள்ள கதவை திறந்து கொள்ளலாம்.

கழிவானது சுமார் 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பைபர் டேங்கில் சேகரிக்கப்படுகிறது. அதில் உள்ள பாக்டீரியா தொழில் நுட்பமானது கழிவுகளை சுத்தப்படுத்தி மற்றொரு டேங்கிற்கு வெறும் தண்ணீராக மட்டும் செல்கிறது.

இந்த தண்ணீரை மீண்டும் உபயோகப்படுத்தும் அளவுக்கு மறு சுழற்சி செய்யலாம்.
தற்போது குற்றாலத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவறையில் இந்த மறுசுழற்சி முறை மட்டும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. கழிவறையில் தண்ணீர், மின்விசிறி வசதி ஆகியவை உள்ளன. கழிவறையை உபயோகப்படுத்துபவர்கள் சுத்தப்படுத்த மறந்தாலும் தானாகவே சுத்தப்படுத்திக் கொள்ளும் வகையில் சென்சர் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இந்த கழிவறை மக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறக்கப்பட உள்ளது.