Wednesday, May 30, 2012

பெட்ரோல் விலை உயர்வை முழுமையாக வாபஸ் பெற வேண்டும்-மத்திய அரசுக்கு சரத்குமார் கோரிக்கை

சென்னை : பெட்ரோல் விலை உயர்வை முழுமையாக வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:  மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் சமீபத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 7.50 வரை உயர்த்தி நாட்டு மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளனர்.

இந்நிலை யில் மத்திய நிதியமைச்சர், பெட் ரோல் மீது மாநிலங்கள் விதித்து வரும் வரியை குறைக்க வேண்டும் என்று கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, பெட்ரோல் விலை உயர்வை தடுக்க மாற்றுவழி காண்பதை விட்டுவிட்டு மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றி வைப்பதில் எந்தவித நியாயமுமில்லை. அது தவறான பொருளாதார மேலாண்மையும் கூட என்பதை சுட்டிகாட்டுவதுடன் மத்திய அரசையும் கண்டிக்கிறோம். எனவே, மத்திய அரசு உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை முற்றிலும் உடனடியாக வாபஸ் பெறவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.