Monday, August 1, 2011

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்எல்ஏ அறிக்கை

சென்னை, ஆக.1:திமுகவின் முக்கிய நிர்வாகிகள் நடத்திய நில மோசடிகளை அறிந்து மக்கள் கொதித்துப்போய் இருக் கிறார்கள்.
.
இதனால் திமுகவிற்கு ஏற் பட்டுள்ள களங்கத்தில் இருந்து தப்பிக்க மக்களை திசை திருப்புவதற் காக திமுகவினர் போராட்டம் நடத்து கிறார்கள் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு:சமச்சீர் கல்வியை தமிழ்நாட்டில் கொண்டுவருவதை பெரும்பாலோர் வரவேற்ற போதிலும், கடந்த திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வி கொண்டுவர திட்டங்கள் தீட்டப்பட்டபோது சமச்சீர் கல்வி வேண்டும், வேண்டாம் என்ற இருவேறு கருத்துக்கள் சமச்சீர் கல்வியை அமல்படுத்தும் முன்பு அனைத்துப்பள்ளிகளின் பாடங்கள் ஒரே மாதிரியாக இருப்பதோடு

மட்டுமல்லாமல், பள்ளியின் கட்டமைப்பு வசதி, அடிப்படை தேவைகள், போதுமான ஆசிரியர்கள் என அனைத்து பள்ளிகளையும் அதாவது தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளையும் மேம்படுத்த வேண்டும் என்றும், சமச்சீர் கல்வி பாடங்கள் மாணவர்களின் உயர் கல்விக்கேற்ப தரமானதாக அமைந்திட வேண்டுமென்றும் தெரிவித்திருந் தோம். சமச்சீர்கல்வி பாடத்திட்டங்கள் மாணவர்களின் எதிர்கால உயர் கல் விக்கு ஏற்ப தரமானதாக அமைந்திட வேண்டும் என்பதற்காகத்தான் முதல்வர்  ஒரு புதிய குழு அமைத்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

ஏதோ கடந்த ஆட்சியாளர்கள் கொண்டுவந்த திட்டங்களை அமல் படுத்தக்கூடாது என்ற நோக்கத்தில் தமிழக அரசு செயல்படுவதாக புரிந்துகொண்டு சமச்சீர்கல்வி அமல் படுத்துவதில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.

சமச்சீர் கல்வி பிரச்சினையை அரசியலாக்கப் பார்க்கிறார்கள். தூண்டி விடுகிறார்கள். உச்சநீதிமன் றத்தில் இது குறித்த வழக்கில் உரிய தீர்ப்பு கிடைக்கும் வரைகூட அவர் களால் காத்திருக்க முடியவில்லை.நில அபகரிப்பு மோசடிகளில் தவறு செய்தவர்களை தண்டனை பெற்றே தீர வேண்டும்,  திமுகவின் முக்கிய நிர்வாகிகள் இவர் நடத்திய நில மோசடிகளை அறிந்து மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.

இந்த குற்றச்சாட்டுகளில் இருந்தும் திமுகவிற்கு ஏற்பட்டுள்ள நிரந்தர களங்கத்தில் இருந்தும் தப்பிப்பதற் காக மக்களைத் திசைதிருப்ப சமச்சீர் கல்வி பொய்வழக்கு என்று போராட் டம் நடத்துகிறார்கள்.ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப் பட்டபோதும், தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் கொலை செய்யப்பட்டபோதும்கூட வேடிக்கை பார்த்தவர்கள் இன்று போராட்டம் நடத்துகிறார்கள். குழந் தைகளின் கல்வியோடு விளையாடி சமச்சீர் கல்வி பிரச்சினையை வெறும் அரசியலாக்க வேண்டாம். உரிய நட வடிக்கைகளை உரிய நேரத்தில் தமிழக முதல்வர் எடுப்பார் என்பது உறுதி.இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.