Sunday, May 29, 2011

சமக.,வினர் கொண்டாட்டம்


ஆலங்குளம் : சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியின் வெற்றியை ஆலங்குளம் நகர சமக வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். அதிமுக கூட்டணியில் சமக தென்காசி, நான்குநேரி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தென்காசி தொகுதியில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியையும், அதிமுக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியையும் ஆலங்குளம் நகர சமகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு நகர சமக தலைவர் சோனா மகேஷ் தலைமை வகித்தார். சமக ஒன்றிய செயலாளர் ராபர்ட், அதிமுக நகர செயலாளர் சுப்பிரமணியன், தேமுதிக நகர செயலாளர் பழனிசங்கர், ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சமக இளைஞரணி குமரேசன், முத்துசாமி, ராஜா, தேமுதிக நிர்வாகிகள் திருமலை செல்வம், அல்போன்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சாத்தான்குளம்:  தேர்தல் முடிவு அன்று சாத்தான்குளம் ச.ம.க வினர்  ஒன்றிய தலைவர்  ஜான் ராஜா  மற்றும் ஒன்றிய பிரிதிநிதி லிங்கேசன் தலைமைஇல்  காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செய்து  காமராஜர் பேருந்து நிலையத்தில் உள்ள பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இந்த கொண்டாடத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் , தொண்டர்களும் , ச.ம.க தொண்டர்களும் பரவலாக கலந்து கொண்டனர்..



இது போலவே தமிழ்நாடு முழுவதும் ச.ம.க வினர்   கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து வெற்றியை கொண்டடி வருகிறார்கள்.

தென்காசியில் எம்.எல்.ஏ.அலுவலகம் புதுப்பொலிவுடன் பச்சை நிறத்தில் பளிச்சிடுகிறது

தென்காசி:தென்காசியில் எம்.எல்.ஏ.அலுவலகம் புதுப்பொலிவுடன் பச்சை நிறத்தில் பளிச்சிடுகிறது.தென்காசி எம்.எல்.ஏ.வாக ச.ம.க.தலைவர் சரத்குமார் வெற்றி பெற்றார். அவர் எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற பின்னர் நேற்று முதன் முதலாக தென்காசி தொகுதிக்கு வந்தார். சரத்குமாரை வரவேற்க எம்.எல்.ஏ.அலுவலகமும் தயார் நிலையில் உள்ளது.
தென்காசி தாலுகா அலுவலகம் அருகில் மேலவாலிபன்பொத்தைக்கு செல்லும் வழியில் எம்.எல்.ஏ.அலுவலகம் உள்ளது. பொதுப்பணித் துறையினர் எம்.எல்.ஏ.அலுவலகத்தை சுத்தப்படுத்தி பச்சை நிறத்தில் வர்ணம் தீட்டியுள்ளனர். கதவு, சன்னல்களுக்கு பெயிண்ட் அடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. எம்.எல்.ஏ.தனி அறையில் ஏ.சி.வசதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கம்ப்யூட்டர் பொருத்தி இணையதள வசதி அளிக்கப்பட உள்ளது.

அதிமுக அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம்

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்று சமக தலைவரும் தென்காசி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நடிகர் சரத்குமார் கூறினார்.

சரத்குமார் மற்றும் நாங்குநேரி தொகுதி சமக சட்டமன்ற உறுப்பினர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சனிக்கிழமையன்று நெல்லை வந்தனர். அவர்களுக்கு பாளை கேடிசி நகரில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் வக்கீல் கணேசன், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் லாரன்ஸ் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
என்னை அபார வெற்றிபெற செய்த தென்காசி தொகுதி மக்களுக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று (நேற்று) முதல் தொகுதியில் 5 நாட்கள் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வந்துள்ளேன். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. தென்காசி தொகுதியை பொறுத்தவரைக்கும் பல கோரிக்கைகள் உள்ளன. குறிப்பாக கருப்பாநதி திட்டம், தென்காசி தனி மாவட்டம், மேம்பால சர்வீஸ் ரோடு உள்ளிட்ட பணிகளை நிறைவேற்ற சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன்.
மேலும் தொகுதியில் உள்ள மக்கள் எந்நேரமும் என்னை தொடர்பு கொள்ள வசதிகள் செய்யப்படும். ஆலங்குளம் ஒன்றியத்தில் இன்று (நேற்று) வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஜெயலலிதா தலைமையிலாக அமைந்துள்ள அதிமுக அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம்.
குற்றால சீசன் விரைவில் தொடங்க உள்ளது, சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் நிறைவேற்றப்படும். குற்றாலத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குளத்தை மீட்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநில துணைப் பொதுச்செயலாளர் இளஞ்சேரன், மேற்கு மாவட்ட செயலளார் தங்கராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.