இந்தியாவின் கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணையை தன் சொந்த செலவில் கட்டி முடித்த இங்கிலாந்து நாட்டு பொறியாளர் பென்னிகுயிக் நினைவை போற்றும் வகையில் மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சட்டமன்ற உறுப்பினர் நடிகர் சரத்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயர் பென்னிகுயிக்கு லோயர் கேம்பில் ரூ.1 கோடி செலவில் சிலையும் மணிமண்டபமும் அமைக்க இருப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.
முல்லைப் பெரியாறு அணை கடந்த 1887-ல் கட்டத் தொடங்கி 1895-ல் கட்டி முடிக்கப்பட்டது. கட்டத் தொடங்கிய பின்பு நிதி பற்றாக்குறையால் அணை பாதியிலேயே நின்று விட்டதையறிந்த பென்னி குயிக் மிகவும் வருந்தி இங்கிலாந்தில் உள்ள தனது சொத்துக்களை விற்றார்.
பின்பு அதன் மூலம் கிடைத்த பணத்தில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி அணையின் நீர் பாசனத்தை தமிழகத்தின் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு திருப்பி விட்டார்.
இதனால் தமிழகத்தின் விவசாயத்திற்கும், குடிநீர் பிரச்சினையையும் தீர்த்து வைத்த ஆங்கிலேயர் பென்னிகுயிக் அவர்களுக்கு சிலையும், மணிமண்டபமும் அமைப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பதற்கு சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முல்லை பெரியாறு அணைப்பிரச்சினையில் இரு மாநிலங்களுக்கு இடையே நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையில் கருத்து வேற்றுமை நீங்கி நட்புறவில் எந்த பாதிப்பும் இல்லாமல் சுமூகமான நல்லிணக்கம் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.
பொதுவாக மணிமண்டபம் அமைப்பது நமது தேசத்தலைவர்களுக்கும், தியாகிகளுக்கும் தான் என்ற மரபில் இருந்தது. ஆனால் தமிழக மக்களின் விவசாயத்திற்கு தண்ணீரும், குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்த்த கர்னல் பென்னிகுக் என்ற தனி மனிதனுக்கு நன்றி கடனாக இன்று சிலையையும், மணிமண்டபமும் அமைக்க அறிவிப்பு வெளியிட்டிருப்பதற்கு பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்வதில் தமிழகமே பெருமையடைகிறது என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயர் பென்னிகுயிக்கு லோயர் கேம்பில் ரூ.1 கோடி செலவில் சிலையும் மணிமண்டபமும் அமைக்க இருப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.
முல்லைப் பெரியாறு அணை கடந்த 1887-ல் கட்டத் தொடங்கி 1895-ல் கட்டி முடிக்கப்பட்டது. கட்டத் தொடங்கிய பின்பு நிதி பற்றாக்குறையால் அணை பாதியிலேயே நின்று விட்டதையறிந்த பென்னி குயிக் மிகவும் வருந்தி இங்கிலாந்தில் உள்ள தனது சொத்துக்களை விற்றார்.
பின்பு அதன் மூலம் கிடைத்த பணத்தில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி அணையின் நீர் பாசனத்தை தமிழகத்தின் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு திருப்பி விட்டார்.
இதனால் தமிழகத்தின் விவசாயத்திற்கும், குடிநீர் பிரச்சினையையும் தீர்த்து வைத்த ஆங்கிலேயர் பென்னிகுயிக் அவர்களுக்கு சிலையும், மணிமண்டபமும் அமைப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பதற்கு சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முல்லை பெரியாறு அணைப்பிரச்சினையில் இரு மாநிலங்களுக்கு இடையே நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையில் கருத்து வேற்றுமை நீங்கி நட்புறவில் எந்த பாதிப்பும் இல்லாமல் சுமூகமான நல்லிணக்கம் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.
பொதுவாக மணிமண்டபம் அமைப்பது நமது தேசத்தலைவர்களுக்கும், தியாகிகளுக்கும் தான் என்ற மரபில் இருந்தது. ஆனால் தமிழக மக்களின் விவசாயத்திற்கு தண்ணீரும், குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்த்த கர்னல் பென்னிகுக் என்ற தனி மனிதனுக்கு நன்றி கடனாக இன்று சிலையையும், மணிமண்டபமும் அமைக்க அறிவிப்பு வெளியிட்டிருப்பதற்கு பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்வதில் தமிழகமே பெருமையடைகிறது என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

