Wednesday, July 27, 2011

சுரண்டையில் தேவர் சிலை அமைக்க சரத்குமார் எம்எல்ஏ நிதி

சுரண்டை: நெல்லை மாவட்டம் சுரண்டையில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அமைக்க தென்காசி எம்எல்ஏ சரத்குமார் ரூ. 1 ல்டசம் நிதியுதவி அளித்துள்ளார்.

சுரண்டை, கீழசுரண்டை, பங்களா சுரண்டை, ஆலடிப்பட்டி ஆகிய பகுதிகளில் சரத்குமார் எம்எல்ஏ வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது பொதுமக்கள் அவரிடம் மனுக்கள் கொடுத்தனர். தொடர்ந்து சுரண்டை தேவர் சமுதாய திருமண மண்டபத்தில் வைத்து முத்துராமலிங்க தேவர் உருவ சிலை அமைக்க சமுதாய நிர்வாகிகளிடம் சரத்குமார் எம்எல்ஏ ரூ.1 லட்சம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தொழில் அதிபர் எஸ்வி கணேசன், சமத்துவ மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் காளிதாசன், மாவட்ட செயலாளர் தங்கராஜ், துணை செயலாளர் கண்ணன், தொகுதி செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், நகர செயலாளர் செந்தூர்பாண்டியன், ஓன்றிய சமக செயலாளர் ராமராஜா, துணை செயலாளர் ராமர், நகர செயலாளர் செல்வராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.