Friday, February 10, 2012

சங்கரன்கோவில் தேர்தல்: சரத்குமார் அ.தி.மு.கவுக்கு ஆதரவு

சென்னை, பிப். 11 - சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வை ஆதரித்து தேர்தல் பணியாற்ற சமத்துவ மக்கள் கட்சி சார்பில் குழு ஒன்றை அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அமைத்துள்ளார். அந்த குழுவில் நாங்குநேரி சட்டப் பேரவை உறுப்பினர் நாராயணன், பொதுச் செயலாளர் நாகராஜன், கொள்கை பரப்பு செயலாளர் ஜெயபிரகாஷ், துணை பொதுச் செயலாளர் சுந்தரேசன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடுவர் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி எம்எல்ஏ ஏ.நாராயணன் மகள் திருமணம்

சென்னை, பிப்.3: முதல்வர் ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ஏ.நாராயணன் தனது மனைவி லதாவுடன் சந்தித்து தனது மகளின் திருமணத்துக்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்த வேண்டும் என அழைப்பு விடுத்து திருமண அழைப்பிதழை வழங்கினார்.இந்த சந்திப்பின்போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.சரத்குமார் உடன் இருந்தார்.

சென்னை: சமத்துவ மக்கள் கட்சி துணைத் தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், லதா தம்பதியரின் மகள் சகிலா, திருச்சி கே.ஏ.எஸ்.ராம்தாஸ், ராஜேஸ்வரி தம்பதியரின் மகன் கே.ஏ.எஸ்.ஆர்.பிரபு திருமணம் திருவேற்காடு கருமாரி அம்மன் கோயிலில் நேற்று காலை நடந்தது. மணமக்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை அருகே வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் எம்எல்ஏ, அவரது மனைவி ராதிகா ஆகியோரும் மணமக்களை வாழ்த்தினர். இராவணன் மசாலா குழுமத்தின் தலைவர் ராமசாமி, தமிழ்நாடு நாடார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் எச்.ஸ்டீபன், வண்ணாரப்பேட்டை அனைத்து வியாபாரிகள் சங்க பொருளாளர் கே.எஸ்.மூர்த்தி, பொதுச் செயலாளர் விவேக் சிவசாமி, சமக மாநில அமைப்பு செயலாளர் பாவூர் சத்திரம் ஆர்.கே.காளிதாஸ், துறைமுகம் பகுதி வடசென்னை மாவட்ட நாடார் பேரவை தலைவர் கே.மகராஜன், கராத்தே ச.ரவி, மற்றும் சமக நிர்வாகிகள், வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள், பல்வேறு கட்சியினர் மணமக்களை வாழ்த்தினர். திருமணத்துக்கு வந்தவர்களை எர்ணாவூர் ஏ.நாராயணன், சென்னை டீலக்ஸ் ஓட்டல் இயக்குனர் என்.கார்த்திக் வரவேற்றனர்.