சென்னை, பிப். 11 - சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வை ஆதரித்து தேர்தல் பணியாற்ற சமத்துவ மக்கள் கட்சி சார்பில் குழு ஒன்றை அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அமைத்துள்ளார். அந்த குழுவில் நாங்குநேரி சட்டப் பேரவை உறுப்பினர் நாராயணன், பொதுச் செயலாளர் நாகராஜன், கொள்கை பரப்பு செயலாளர் ஜெயபிரகாஷ், துணை பொதுச் செயலாளர் சுந்தரேசன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடுவர் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment