ஆம்னி பஸ் விபத்தில் உயிரிழந்த பயணிகளின் குடும்பத்தினருக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, வேலூர் அருகே அவலூரில் ஏற்பட்ட பஸ் விபத்தில் தீயில் கருகி 22 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சாலை வசதிகள் மேம்பட்ட பிறகு வேகக் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் வாகனங்களால் இதுபோன்ற விபத்துகள் அதிகம் நடைபெறுகிறது. சமீபத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் அமைச்சர் ஒருவரை இழக்க நேரிட்டது.
வேகக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கும் விழிப்புணர்வு பிரசாரத்தை வாகன ஓட்டுநர்களிடம் முனைப்புடன் செயல்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, வேலூர் அருகே அவலூரில் ஏற்பட்ட பஸ் விபத்தில் தீயில் கருகி 22 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சாலை வசதிகள் மேம்பட்ட பிறகு வேகக் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் வாகனங்களால் இதுபோன்ற விபத்துகள் அதிகம் நடைபெறுகிறது. சமீபத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் அமைச்சர் ஒருவரை இழக்க நேரிட்டது.
வேகக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கும் விழிப்புணர்வு பிரசாரத்தை வாகன ஓட்டுநர்களிடம் முனைப்புடன் செயல்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.