Tuesday, March 22, 2011

தமுமுக தலைமையகத்திற்கு சரத்குமார் வருகை

தமுமுக தலைமையகத்திற்கு  19-03-2011  மாலை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் நிர்வாகிகள் வருகை புரிந்தனர். அவர்களை தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி, பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது ஆகியோர் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். இச்சந்திப்பின் போது அதிமுக தலைமையிலான கூட்டணியின் தேர்தல் வியூகங்கள் பற்றி விவாதிக்கப்பட்டன.

சரத்குமார பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து தனது தேர்தல் பிரசாரத்தை பேசியதாவது,

நேற்று பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து தனது தேர்தல் பிரசாரத்தை துவங்கி பேசியதாவது,
தமிழகத்தில் அதிமுக சார்பில் அமைந்துள்ள கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கு இரண்டு இடங்கள் கொடுத்த ஜெயலிலாதவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சரத்குமார சினிமாவில் நடிப்பாரே, தொகுதியில் இருப்பாரா, இல்லை வெற்றி பெற்று விட்டு தொகுதியை விட்டு சென்று விடுவாரா என்ற எதிர்தரப்பு கேள்விக்கு முதலில் நான் பதில் கூறுகிறேன்.

தென்காசி சட்டசபை தொகுதியில் உள்ள பொது மக்களுக்கு ஜாதி மத வேறுபாடின்றி அனைவருக்கும் பயன்படும் விதமாக 24 மணி நேரமும் செயல்படகூடிய தனிசெல் தொலைபேசி எண் இயங்கும். அந்த எண்ணில் நீங்கள் தொடர்பு கொண்டால் உங்களுக்கான எந்த பிரச்சனைக்கும் உங்களோடு நின்று வெற்றிகரமாக முடித்துத் தருவேன்.

உறதியாகவும், நிச்சயமாகவும் சொல்லிக் கொள்கிறேன், நான் வாரத்தில் நான்கு நாட்கள் தென்காசி தொகுதியில் தங்கியிருப்பேன். இந்க தொகுதியை தமிழகத்தின் சிறந்த தொகுதியாகவும், தொழில்வளம்,கல்வி வளம் நிறைந்த தொகுதியாகவும் அனைவரும் பாராட்டு விதத்தில் மாற்றிகாட்டுவேன்.

தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் கருணாநிதியின் குடும்ப ஆட்சியையும், ஊழலையும், மணல் கொள்ளை ஆட்சியையும் கூண்டோடு ஓழித்து ஜெயலலிதாவின் தலைமையில் நல்லாட்சி அமைத்திட அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்றார்.

சரத்குமார் பாவூர்சத்திரம் வந்தபோது அவருடைய மனைவி ராதிகாவும் வந்திருந்தார்.

பின்னர் இரவு 11.30 மணிக்கு ஐந்தருவி இசக்கி ரிசர்ட்டில் நிருபர்களுக்கு சரத்குமார் பேட்டியளித்தார். அவர் கூறுகையில், தேர்தல் வாக்குறுதிகளாக இலவச பொருட்களை அறிவித்துள்ளனர். தொடர்ந்து இலவசம் என்று அறிவித்து வருகின்றனர். இதனை நம்பி மககள் வாககளித்து ஏமாற மாட்டார்கள். ஓட்டு வங்கியை குறிவைத்து அரசியலை நடத்தி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

லஞ்சம் கொடுப்பதற்கு சமம்தான் இலவசங்களை தருவதாக அறிவிப்பது. தேர்தல் ஆணையம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காமராஜர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வண்ணம் சிலர் அக்கட்சியின் பெயரை கள்ங்கப்படுத்தி வருகின்றனர். எங்கே இருக்கிறது அந்தக் கட்சி. அந்த கட்சி அனுமதி பெற்ற கட்சியா....தேர்தலில் வெற்றி தோல்வி என்பது ஜனநாயக முறை. அதை விடுத்து அவமானம் ஏற்படுத்த துடிப்பது நாகரீகம் அல்ல. அவர்கள் போட்டியிடும் சின்னத்தில்,தொகுதியில் வெற்றி பெறட்டு்ம். அதை விடுத்து என்னை தோற்கடிப்பேன், என்று மல்லுகட்டுகின்றனர். யாராக இருந்தாலும் முதுகில் குத்தாமல் நேருக்கு நேர் மோதி பார்க்கட்டும். அதுதான் வீரனுக்கு அழகு.

தொன்காசி தொகுதியில் 4 நாள் தங்கியிருந்து பணியாற்றுவேன். ச.ம.க. 3 மாதத்துக்கு முன்பே சர்வதிகார ஆட்சியை அகற்றிட வேண்டும் என்ற முடிவோடு கொள்கை,கூட்டணி பற்றி அறிவித்தது. அப்படிதான் தற்போது கூட்டணி அமைந்துள்ளது.

சரத்குமார் மீது போலீசார் இரண்டு இடங்களில் வழக்குபதிவு

திருநெல்வேலி :
 சைகை காட்டிச்சென்ற நடிகர் சரத்குமார் மீது போலீசார் இரண்டு இடங்களில் வழக்குபதிவு செய்தனர்.  நேற்றுமுன்தினம் இரவில் தென்காசியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் நடிகர் சரத்குமார் தென்காசியில் இருந்து குற்றாலம்நோக்கிசென்றார். அப்போது இரவு 10 மணி கடந்துவிட்டது. ஓட்டுகேட்கமாட்டேன், தலைவர்களின் சிலைகளுக்கு மாலையணிவித்துவிட்டு செல்வதாக கூறிச்சென்றார். தென்காசியில் வருவாய் ஆய்வாளர் சவுந்தரராஜன் புகாரின் பேரிலும், குற்றாலத்தில் எஸ்.ஐ.,சமுத்திரம் புகாரின் பேரிலும் இரண்டு இடங்களிலும் வழக்குபதிவு செய்யப்பட்டது. சரத்குமார், நெல்லைமாவட்ட அ.தி.மு.க.,செயலாளர் செந்தூர்பாண்டியன் ஆகியோர் மீது 143 (கூட்டமாக வருதல்), 188 (தடையை மீறி வருவதல்) ஆகிய செக்ஷன்களில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

தென்காசி, மார்ச் 22: தேர்தல் விதிமுறைகளை மீறியதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மீது தென்காசி போலீஸôர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  
திருநெல்வேலி புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலர் பி.செந்தூர்பாண்டியன் உள்ளிட்ட மேலும் 200 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  தென்காசி தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, அக் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் முதன்முறையாக தென்காசி நகர் பகுதிக்கு தனது ஆதரவாளர்களுடன் திங்கள்கிழமை வந்தார். தென்காசி கீழப்புலியூரில் உள்ள தேவர் சிலை, தென்காசி மலையான்தெருவில் உள்ள தேவர் சிலை, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  அப்போது இரவு 10 மணியை தாண்டியிருந்ததாலும், வெடிகள் வெடித்தும், மேள தாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டதாலும், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக சரத்குமார், புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலர் பி.செந்தூர்பாண்டியன் மற்றும் 200 பேர் மீது தென்காசி போலீஸôர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

 குற்றாலம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட நன்னகரத்தில் அம்பேத்கர் சிலை, குற்றாலத்தில் அண்ணா சிலைக்கு ச.ம.க., அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர். அவர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக குற்றாலம் போலீஸôர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.