தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட அதிமுக கூட்டணி கட்சிகள் வரவேற்றுள்ளன
சரத்குமார்: 2012 ஆகஸ்ட் மாதத்திலிருந்து தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது என்ற அறிவிப்பு நமது மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல வழிவகுக்கும். முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வைப்பதாகவும், தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும் விதமாகத் தொலைநோக்குப் பார்வையுடன் இந்த நிதிநிலை அறிக்கை உள்ளது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

