தென்காசி:தென்காசியில் எம்.எல்.ஏ.அலுவலகம் புதுப்பொலிவுடன் பச்சை நிறத்தில் பளிச்சிடுகிறது.தென்காசி எம்.எல்.ஏ.வாக ச.ம.க.தலைவர் சரத்குமார் வெற்றி பெற்றார். அவர் எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற பின்னர் நேற்று முதன் முதலாக தென்காசி தொகுதிக்கு வந்தார். சரத்குமாரை வரவேற்க எம்.எல்.ஏ.அலுவலகமும் தயார் நிலையில் உள்ளது.
தென்காசி தாலுகா அலுவலகம் அருகில் மேலவாலிபன்பொத்தைக்கு செல்லும் வழியில் எம்.எல்.ஏ.அலுவலகம் உள்ளது. பொதுப்பணித் துறையினர் எம்.எல்.ஏ.அலுவலகத்தை சுத்தப்படுத்தி பச்சை நிறத்தில் வர்ணம் தீட்டியுள்ளனர். கதவு, சன்னல்களுக்கு பெயிண்ட் அடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. எம்.எல்.ஏ.தனி அறையில் ஏ.சி.வசதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கம்ப்யூட்டர் பொருத்தி இணையதள வசதி அளிக்கப்பட உள்ளது.
தென்காசி தாலுகா அலுவலகம் அருகில் மேலவாலிபன்பொத்தைக்கு செல்லும் வழியில் எம்.எல்.ஏ.அலுவலகம் உள்ளது. பொதுப்பணித் துறையினர் எம்.எல்.ஏ.அலுவலகத்தை சுத்தப்படுத்தி பச்சை நிறத்தில் வர்ணம் தீட்டியுள்ளனர். கதவு, சன்னல்களுக்கு பெயிண்ட் அடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. எம்.எல்.ஏ.தனி அறையில் ஏ.சி.வசதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கம்ப்யூட்டர் பொருத்தி இணையதள வசதி அளிக்கப்பட உள்ளது.

No comments:
Post a Comment