தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:-
எட்டு ஆண்டுகளுக்கு பின் ரயில் பயணக் கட்டண உயர்வு மற்றும் வழக்கமான அறிவிப்புகளை ரயில்வே பட்ஜெட் கொண்டுள்ளது. சாதாரண மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் சாதாரண வகுப்பு கட்டணங்களை உயர்த்தி இருக்க வேண்டாம்.
தமிழகத்தை பொருத்தவரை முன்பு அறிவிக்கப்பட்ட பணிகள் மித வேகத்தில் நடைபெற்று வருகின்றன. அல்லது தொடங்கப்படாமல் அறிவிப்பாகவே உள்ளன.
குறிப்பாக, நெல்லை , தென்காசி அகல ரயில்பாதை, நெல்லையில் இருந்து பிற பெரு நகரங்களுக்கு புதிய ரயில் சேவைகள், நெல்லை , சென்னை இருவழிப்பாதை என பல திட்டங்களை கூறலாம்.
சென்னை ராயபுரம் புது டெர்மினல் அமைய இருப்பது, சென்னை , பெங்களூரு தினசரி மாடி ரயில், வாரத்தில் சென்னை , பூரி மார்க்கத்தில் ரயில், மதுரை , திருப்பதி ரயில் சேவை அதிகரிப்பு என பல அறிவிப்புகளும், நடப்பாண்டில் 1 லட்சம் பேருக்கு வேலை என்ற அறிவிப்பும் வரவேற்கதக்கவை. பல இடங்களில் ரயில்வே மேம்பால பணிகள் மிகவும் மிதமான வேகத்தில் நடந்து வருகிறது
அந்த வகையில் தென்காசி ரயில்வே மேம்பால பணியும் தடைபட்டுள்ளது. ரயில்வே அமைச்சகம் இப்பணியை விரைந்து முடித்து, அப்பகுதி போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும்.
பல திட்டங்கள் அறிவித்திருந்தாலும், அவைகளை உரிய காலத்தில் நிறைவேற்றி பயணிகளின் வசதிகளையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.
மொத்தத்தில் இந்த பட்ஜெட் ஒரு சராசரி பட்ஜெட் என்ற அளவிலேயே அமைந்திருப்பது வருத்தம் அளிப்பதாக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
எட்டு ஆண்டுகளுக்கு பின் ரயில் பயணக் கட்டண உயர்வு மற்றும் வழக்கமான அறிவிப்புகளை ரயில்வே பட்ஜெட் கொண்டுள்ளது. சாதாரண மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் சாதாரண வகுப்பு கட்டணங்களை உயர்த்தி இருக்க வேண்டாம்.
தமிழகத்தை பொருத்தவரை முன்பு அறிவிக்கப்பட்ட பணிகள் மித வேகத்தில் நடைபெற்று வருகின்றன. அல்லது தொடங்கப்படாமல் அறிவிப்பாகவே உள்ளன.
குறிப்பாக, நெல்லை , தென்காசி அகல ரயில்பாதை, நெல்லையில் இருந்து பிற பெரு நகரங்களுக்கு புதிய ரயில் சேவைகள், நெல்லை , சென்னை இருவழிப்பாதை என பல திட்டங்களை கூறலாம்.
சென்னை ராயபுரம் புது டெர்மினல் அமைய இருப்பது, சென்னை , பெங்களூரு தினசரி மாடி ரயில், வாரத்தில் சென்னை , பூரி மார்க்கத்தில் ரயில், மதுரை , திருப்பதி ரயில் சேவை அதிகரிப்பு என பல அறிவிப்புகளும், நடப்பாண்டில் 1 லட்சம் பேருக்கு வேலை என்ற அறிவிப்பும் வரவேற்கதக்கவை. பல இடங்களில் ரயில்வே மேம்பால பணிகள் மிகவும் மிதமான வேகத்தில் நடந்து வருகிறது
அந்த வகையில் தென்காசி ரயில்வே மேம்பால பணியும் தடைபட்டுள்ளது. ரயில்வே அமைச்சகம் இப்பணியை விரைந்து முடித்து, அப்பகுதி போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும்.
பல திட்டங்கள் அறிவித்திருந்தாலும், அவைகளை உரிய காலத்தில் நிறைவேற்றி பயணிகளின் வசதிகளையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.
மொத்தத்தில் இந்த பட்ஜெட் ஒரு சராசரி பட்ஜெட் என்ற அளவிலேயே அமைந்திருப்பது வருத்தம் அளிப்பதாக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

No comments:
Post a Comment