Monday, June 18, 2012

தென்காசி அரசு மருத்துவமனையில் செடி அல்ல.. மரத்தையே நட்டு வைத்து பூங்கா

தென்காசி: தென்காசி எம்எல்ஏ சரத்குமார் தென்காசி அரசு மருத்துவமனைக்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுக்க முயற்சி எடுத்து வருகிறார். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 30 லட்ச ரூபாய் செலவில் நடமாடும் டயாலிசிஸ் இயந்திரத்தை தென்காசி அரசு மருத்துவமனைக்கு வழங்கினார். மேலும் படுக்கைகள், மின் விசிறி, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஆகியவற்றை வழங்கியுள்ளார். இதையடுத்து மருத்துவமனைக்கு வருகை தரும் நோயாளிகள் சுகாதாரமாக இருக்கும் வகையில் மருத்துவமனை வளாகத்தில் 15 லட்ச ரூபாய் செலவில் பூங்கா ஒன்றும் அமைத்து வருகிறார்.

இந்த பூங்காவில் செடி வைத்து அது மரமாக வளரும் வகை காத்திருக்க முடியாது என்பதால் மரமாகவே கொண்டு வந்து நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நடப்படுகிறது. இதே போன்று இ டாய்லட் எனப்படும் எலக்ட்ரானிக் கழிப்பறை வசதியையும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த வசதிகள் அனைத்தையும் அரசிடம் கோரிக்கை வைத்து அதற்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்காமல் தனது சொந்த செலவில் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, June 3, 2012

தேமுதிகவினருக்கு நாகரீகமோ,சட்டமோ தெரியாது : சரத்குமார்

ஜனநாயகத்தை தெரிந்துகொண்டு தேமுதிகவினர் அரசிலுக்கு வரவேண்டும் என்றார் சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சரத்குமார்.

புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டை மானை ஆதரித்து சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டபோது
பேசியது.
புதுக்கோட்டை தொகுதிக்குள்பட்ட கறம்பக்குடி ஒன்றியத்தில் சூரக்காடு கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்ட சரத்குமார், அடுத்ததாக புதுப்பட்டியில் பிரசாரம் மேற்கொள்ள அங்குள்ள கடைவீதியில் பிரசார வாகனத்தை நிறுத்திவிட்டு பிரசாரத்தை தொடக்கினார். அப்போது, அவ்வழியாக பிரசாரம் மேற்கொள்ளவரவிருந்த தேமுதிக பிரேமலதாவை வரவேற்க ஏராளமான தொண்டர்கள் கொடியுடன் காத்திருந்தனர்.அப்போது, சரத்குமார் பேசத்தொடங்கியதும் தேமுதிக கொடியை உயர்த்திப்பிடித்தபடி விஜயகாந்த் வாழ்க என்று தொண்டர்கள் முழக்கமிட்டனர்.
அதைத்தொடர்ந்து பேசிய சரத்குமார்,
 ’தேமுதிகவினருக்கு நாகரீகமோ,சட்டமோ தெரியாது.  அதை தொண்டர்களுக்கு சொல்லிக்கொடுக்க கட்சியின் தலைமையும் சரியாக இல்லை.
யாருடைய சுதந்திரத்தையும் யாரும் பறிக்கமுடியாது. தேமுதிக 29 சட்டப்பேரவை உறுப்பினர்களை பெற்றிருக் கிறார்கள் என்றால் அது அதிமுக போட்ட பி்ச்சை என்பதை உணரவேண்டும். பகுத்தறிவு, நேர்மை, நீதி, ஜனநாயகம் இவற்றையெல்லாம் தெரிந்துகொண்டு தேமுதிகவினர் அரசியலுக்கு வரவேண்டும்.
புதுக்கோட்டையில் 1.20 லட்சம் வாக்குள் வித்தியாசத்தில அதிமுக வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. அதேபோல், தேமுதிகவுக்கு ஏற்படபோகும் படுதோல்வியையும் யாராலும் தடுக்க முடியாது.
மக்களுக்கு எதிராக ஆட்சி செய்த திமுகவை வீழ்த்தி தொலை நோக்கு சிந்தனையுடன் மக்களுக்காக பணியாற்றும் அதிமுகவை மக்கள் ஆதரி்க்க வேண்டும்என்றார். அதைத்தொடர்ந்து வெட்டன்விடுதி, வானக்கண்காடு, கருக்காகுறிச்சி, முள்ளங்குறிச்சி, அதிரான்விடுதி, மழையூர், தீத்தானப்பட்டி, மாங்கோட்டை,ஆண்டிக்கோன்பட்டி, களபம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின்போது சமக, அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தென்காசி அரசு மருத்துவமனைக்கு ரூ.30 லட்சத்தில் டயாலிசிஸ் வாகனம் வழங்கிய சரத்குமார்

தென்காசி: தென்காசி எம்.எல்.ஏ.வும் சமக தலைவருமான சரத்குமார் ரூ.30 லட்சம் செலவில் டயாலிசிஸ் வாகனம் ஒன்றை தென்காசி அரசு மருத்துவமனைக்கு வழங்கியுள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இக்காய்ச்சலால் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

கடையநல்லூர், வடகரை, தென்காசி, புளியங்குடி, விகேபுரம், சுரண்டை என அனைத்து பகுதிகளிலும் இக்காய்ச்சல் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தென்காசி, நெல்லை ஆகிய இரு பகுதி மருத்துவமனைகளிலும் தனி வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தென்காசி மாவட்ட மருத்துவமனையில் ரத்தம் சேமிக்கவும், ரத்தத்தை சுத்தீகரித்து நோயாளிகளுக்கு ஏற்றவும் போதிய வசதி இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது.

இதனை போக்கும் வண்ணம் தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், சமக தலைவருமான சரத்குமார் தனது சொந்த பணத்தில் ரூ.30 லட்சம் செலவில் தென்காசி மாவட்ட மருத்துவமனைக்கு டயாலிசிஸ் செய்யும் கருவி பொருத்தப்பட்ட வாகனம் வழங்கினார். தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜய், அமைச்சர் செந்தூர் பாண்டியன் ஆகியோரிடம் அந்த வாகனத்தின் சாவியை அவர் வழங்கினார்.

பின்னர் அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் துரையப்பா, சரத்குமார் மற்றும் மருத்துவமனை உயர் அதிகாரிகள் தென்காசி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். முன்னதாக விழிப்புணர்வு பேரணியும் நடந்தது