Friday, March 25, 2011

வெற்றிவாய்ப்பு பிரகாசம் - சரத்குமார் பேட்டி


தென்காசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் சமக தலைவர் சரத்குமார் கூறியதாவது: தென்காசி தொகுதிக்கு தேவையானதை அறிந்து  செய்யப்படும். உழைப்புக்கு என்றுமே வெற்றி கிடைக்கும். தென்காசி தொகுதியில் வெற்றி வாய்ப்பு சிறப்பாக உள்ளது என்றார்.
பின்னர் மேலரதவீதியில் தலைமை தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பேசும்போது, ''ஜெயலலிதா விடுத்துள்ள தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு தேவையான பொருட்கள் எவை என்பதை அறிந்து தெரிவித்துள்ளார். நான் மட்டும் வெற்றி பெற்றால் போதாது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிக்கு வரவேண்டும்'' என்றார்.

நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர்  கரு.நாகராஜன், துணை பொதுச்செயலாளர் ஆர்கே காளிதாஸ், மாவட்ட செயலாளர் தங்கராஜ்உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் செந்தில் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment