Wednesday, April 6, 2011

ச.ம.க.வில் இணைந்த நா.ம.க. வேட்பாளர் பரமசிவன்

தென்காசி: தென்காசி தொகுதி நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர் பரமசிவன் நேற்று அக்கட்சியில் இருந்து விலகி சமத்துவ மக்கள் கட்சியில் இணைந்தார்.


தென்காசி தொகுதியில் நாடாளும் மக்கள் கட்சியின் சார்பில் பரமசிவன் என்பவர் போட்டியிடுகிறார். நேற்று அவரும், 100-க்கும் மேற்பட்டோரும் சேர்ந்து சமக தலைவர் சரத்குமாரை சந்தித்து நமகவில் இருந்து விலகி சமகவில் சேர்ந்தனர்.


இது குறித்து பரமசிவன் கூறியதாவது,

கட்சி தலைவர் கார்த்திக் 2 தடவை பிரசாரத்திற்கு வருவதாக கூறினார். ஆனால் அவர் வராமல் புறக்கணித்து வருகிறார். அவரை நம்பி எப்படி தேர்தலில் போட்டியிட முடியும். அதனால்தான் அக்கட்சியில் இருந்தும், தேர்தலில் இருந்தும் விலகி சமகவி்ற்கு ஆதரவு தெரிவித்து இணைந்துள்ளேன் என்றார்.
English summary
Tenkasi NMK candidate Paramasivan has resigned from the party and joined Sarathkumar's SMK. He has even withdrawn from the election to support SMK. 
 

No comments:

Post a Comment