Monday, July 4, 2011

நெல்லையில் அரசு பொருட்காட்சி-சரத்குமார் எம்எல்ஏ கலந்து கொள்கின்றனர்

திருநெல்வேலி : நெல்லையில் அரசு பொருட்காட்சி இன்று (3ம் தேதி) ஆரம்பமாகிறது. துவக்க விழாவில் 3 அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். நெல்லை டவுன் மாநகராட்சி திடலில் அரசு பொருட்காட்சி இன்று (3ம் தேதி) ஆரம்பமாகிறது. மாலை 5 மணிக்கு நடக்கும் துவக்க விழாவில் பொருட்காட்சியை அமைச்சர் செந்தமிழன் துவக்கி வைத்து தலைமை வகிக்கிறார். கலெக்டர் நடராஜன் வரவேற்கிறார். செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் ராசாராம் விளக்கவுரை ஆற்றுகிறார். அமைச்சர்கள் கருப்பசாமி, சுப்பையா முன்னிலை வகிக்கின்றனர்.
இதில் சரத்குமார் எம்எல்ஏ உட்பட எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். பி.ஆர்.ஓ இளங்கோ நன்றி கூறுகிறார்.
இப்பொருட்காட்சி மொத்தம் 45 நாட்கள் நடக்கிறது. இதில் பல்வேறு அரசு துறைகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் 27 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படுகின்றன. தினமும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment