சென்னை, ஜன.1 - புயல் மற்றும் மழையால் உயிரிந்தோர் குடும்பங்களுக்கு சரத்குமார் எம்.எல்.ஏ இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- கடந்த இரண்டு தினங்களாக தானே புயல் உருவாகி தமிழகத்தில் குறிப்பாக வட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் சேதம் விளவித்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. முதலமைச்சர் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அவசரக்கூட்டம் நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டதன் காரணமாக மேலும் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் தவிர்க்கப்பட்டிருக்கிறது என்றே கருதலாம்.
புயல் நிவாரணப்பணிகளுக்கு தமிழக அரசு ரூபாய் 150 கோடி ஒதுக்கியிருக்கும் அதே வேளை நிவாரணப் பணிகளை மேலும் திவீரமாக்க வேண்டும் உயிரிழந்தோர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
புயல் நிவாரணப்பணிகளுக்கு தமிழக அரசு ரூபாய் 150 கோடி ஒதுக்கியிருக்கும் அதே வேளை நிவாரணப் பணிகளை மேலும் திவீரமாக்க வேண்டும் உயிரிழந்தோர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment