Saturday, March 17, 2012

ரயில்வே பட்ஜெட் வருத்தம் அளிக்கிறது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிக்கை:-

தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:-

எட்டு ஆண்டுகளுக்கு பின் ரயில் பயணக் கட்டண உயர்வு மற்றும் வழக்கமான அறிவிப்புகளை ரயில்வே பட்ஜெட் கொண்டுள்ளது. சாதாரண மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் சாதாரண வகுப்பு கட்டணங்களை உயர்த்தி இருக்க வேண்டாம்.

தமிழகத்தை பொருத்தவரை முன்பு அறிவிக்கப்பட்ட பணிகள் மித வேகத்தில் நடைபெற்று வருகின்றன. அல்லது தொடங்கப்படாமல் அறிவிப்பாகவே உள்ளன.

குறிப்பாக, நெல்லை , தென்காசி அகல ரயில்பாதை, நெல்லையில் இருந்து பிற பெரு நகரங்களுக்கு புதிய ரயில் சேவைகள், நெல்லை , சென்னை இருவழிப்பாதை என பல திட்டங்களை கூறலாம்.

சென்னை ராயபுரம் புது டெர்மினல் அமைய இருப்பது, சென்னை , பெங்களூரு தினசரி மாடி ரயில், வாரத்தில் சென்னை , பூரி மார்க்கத்தில் ரயில், மதுரை , திருப்பதி ரயில் சேவை அதிகரிப்பு என பல அறிவிப்புகளும், நடப்பாண்டில் 1 லட்சம் பேருக்கு வேலை என்ற அறிவிப்பும் வரவேற்கதக்கவை. பல இடங்களில் ரயில்வே மேம்பால பணிகள் மிகவும் மிதமான வேகத்தில் நடந்து வருகிறது

அந்த வகையில் தென்காசி ரயில்வே மேம்பால பணியும் தடைபட்டுள்ளது. ரயில்வே அமைச்சகம் இப்பணியை விரைந்து முடித்து, அப்பகுதி போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும்.

பல திட்டங்கள் அறிவித்திருந்தாலும், அவைகளை உரிய காலத்தில் நிறைவேற்றி பயணிகளின் வசதிகளையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.

மொத்தத்தில் இந்த பட்ஜெட் ஒரு சராசரி பட்ஜெட் என்ற அளவிலேயே அமைந்திருப்பது வருத்தம் அளிப்பதாக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

ராஜினாமா செய்ய நான் ரெடி - நீங்க ரெடியா? - விஜயகாந்துக்கு சரத்குமார் சவால்!

கோவில்பட்டி- மார்ச் 17 - சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்விக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ., நடிகர் குண்டுகல்யாணம், இயக்குநர் ஆர்.வி .உதயக்குமார் ஆகியோர் மைப்பாறை, நடுவிற்பட்டியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ்ஈடுபட்டனர். அப்போது சரத்துகுமார் எம்.எல்.ஏ.பேசுகையில் மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தந்து கொண்டியிருக்கிறது தமிழக அரசு. தேர்தலின் போது கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அவர் இன்றைக்கு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களும் தொலை நோக்கம் கொண்டவை. நாளைய இந்தியா இளைஞர்கள் கையில் தான் உள்ளது என்பதனை அறிந்த தமிழக முதல்வர் தரமான கல்வி, கல்விகேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம் ஆகியவற்றை இளைஞர்களுக்கு உருவாக்க வேண்டும் என்றநோக்கத்தில் செயல்பட்டு கொண்டியிருக்கிறார்.

தமிழகத்தில் இன்றைக்கு நிலவும் மின்தட்டுப்பாட்டிற்கு காரணம் திமுக தான். அவர்கள் ஆட்சியில் இருந்த போது புதிய மின்திட்டங்கள் எதுவும் உருவாக்கபடவில்லை மற்றும் பழைய மின்திட்டங்களை பாராமரிப்பு செய்யாமல் இருந்ததே காரணம்.இந்த நிலையை மாற்ற தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்தி பல புதிய மின்திட்டங்களை துவங்கியுள்ளார்.அதனால் மின்தட்டுப்பாடு விரைவில் சரியாகும்
அதிமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற்று விட்டு குறை கூறும் விஜயகாந்த் ரிசிவந்தியம் தொகுதியில் ராஜினமா செய்யவேண்டும், நானும் தென்காசியில் ராஜினமா செய்கிறேன். இருவரும் ரிசிவந்தியத்தில் எதிர்த்து நின்று போட்டியிடுவோம். அதில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்ப்போம். நான் நிற்க தயார்? விஜயகாந்த் தயாரா?. இன்றைக்கு தமிழக மக்களின் வாழ்க்கை முன்னேற்த்திற்காக பல நல்ல திட்டங்களை தரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்தியாவின் பிரதமராகும் தகுதியுடையவர். அப்படி பட்டவரின் கரத்தை வலுப்படுத்த சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுகவை அமோகா வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.      

அப்போது, தமிழக அமைச்சர் ரமணா, எம்.எல்.ஏக்கள் கடம்பூர் செ.ராஜு (கோவில்பட்டி), எர்ணாவூர் நாராயணன் (நான்குநேரி), தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலர் இராமானுஜம்கணேசன், நகர எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலர் கணேசன், மாவட்ட விவசாய அணி இணை செயலர் ராமச்சந்திரன், ஒன்றிய ஜெ. பேரவை செயலர் ்ஸ்வரப்பாண்டியன், அதிமுக நிர்வாகிகள் அமிர்தராஜ்பாண்டியன்,அல்லிக்கண்ணன், அல்லித்துரை, செண்பகராமன், ரவி,ஆரோக்கியராஜ் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.

முதல்வர் ஜெயலலிதா தயவில் வெற்றி பெற்றுவிட்டு தற்போது அவரை குறித்து குறை கூறும் விஜயகாந்த் ராஜினாமா செய்ய தயாரா என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சவால் விடுத்துள்ளார்.

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்விக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறியதாவது,

தேர்தலின் போது கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. நாளைய இந்தியா இளைஞர்கள் கையில் தான் உள்ளது என்பதை அறிந்து, தரமான கல்வி, கல்விகேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம் ஆகியவற்றை இளைஞர்களுக்கு உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்கத்தில் செயல்பட்டு வருகின்றார்.

இந்தியாவிற்கே பிரதமராகும் தகுதி ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு. தமிழகத்தில் இன்றைக்கு நிலவும் மின் தட்டுப்பாட்டிற்கு காரணம் திமுக அரசு தான். அவர்கள் ஆட்சியில் இருந்த போது புதிய மின்திட்டங்கள் எதுவும் உருவாக்கபடவில்லை மற்றும் பழைய மின்திட்டங்களை பாராமரிக்காமல் இருந்ததே காரணம்.

இந்த நிலையை மாற்ற தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்தி பல புதிய மின்திட்டங்களை துவங்கியுள்ளார். அதனால் மின் தட்டுப்பாடு விரைவில் சரியாகும். அதிமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற்று விட்டு, முதல்வர் ஜெயலலிதா குறை கூறும் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் ராஜினமா செய்ய வேண்டும். நானும் தென்காசியில் ராஜினமா செய்கிறேன்.

இருவரும் ரிஷிவந்தியத்தில் எதிர்த்து நின்று போட்டியிடுவோம். அதில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்ப்போம். போட்டிக்கு நான் தயார்? விஜயகாந்த் தயாரா? என்றார்.

Tuesday, March 13, 2012

விஜயகாந்துக்கு சரத்குமார் சவால்

 அதிமுக ஆதரவுடன் வெற்றி பெற்ற 29 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்து விட்டு மீண்டும் தேர்தலை சந்திக்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் தயாரா என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் எம்எல்ஏ சவால் விடுத்துள்ளார்.
.
சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக வேட்பாளரை பெறும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அவர் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.முத்துச்செல்வியை ஆதரித்து அமைச்சர் கே.டி.பச்சமால் தலைமையில் சேர்ந்தமரம் பகுதியில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் எம்எல்ஏ கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் பேசும் போது, தமிழக மக்கள் தமிழகத்தில் நடைபெற்ற ஊழல் ஆட்சியை ஒழித்துக் கட்டி ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தீர்கள். அதற்காக என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக ஒரே ஊழலில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்து உலக சாதனை படைத்ததோடு அவர்களின் கட்சி கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா இன்றும் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தும் அவர்கள் உங்களிடம் ஓட்டு கேட்க வருகின்றனர்.
மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு முழு காரணமே திமுக அரசுதான். திமுக ஆட்சிக்காலத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொழிற்சாலை தொடங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாக போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்கள்.
ஆனால் அந்த தொழிற்சாலை தொடங்குவதற்கு மின்சாரம் தேவை என்பதை சிறிதும் சிந்திக்காமல் எந்தவித திட்டமிடலும், தொலைநோக்கு பார்வையும் இல்லாமல் செயல்பட்டதுதான் இந்த மின்பற்றாக் குறைக்கு காரணம். மேலும் திமுக ஆட்சியின் போது வடசென்னையில் உள்ள அனல் மின் நிலையமும், தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையத்திலும் சரியான முறையில் பராமரிக்காமல் உற்பத்தி குறைவானது.
முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றவுடன் திமுக அரசு விட்டுச் சென்ற 1 லட்சம் கோடி கடனையும் சுமந்து கொண்டு பாராமுகமாக இருக்கும் மத்திய அரசின் நிதியுதவியும் இல்லாமல் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
அத்துடன் இந்தியாவிலேயே தமிழகத்தை முதல் மாநிலமாக கொண்டு வரவும் முதல்வர் ஜெயலலிதா கடுமையாக உழைத்து வருகிறார். மின் தட்டுப்பாட்டை போக்குவதற்காக அனல் மின் நிலையங்களை பராமரிக்கவும், உடன்குடி அனல் மின் நிலைய
திட்டத்தை கொண்டு வரவும் துரித நடவடிக்கை எடுத்து வருகிறார்.  அத்துடன் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குகிறார்.
இன்றைக்கு அதிமுக ஆதரவுடன் 29 எம்எல்ஏக்களை பெற்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் கவர்னர் ஆட்சி வந்தால் தேர்தலில்  போட்டியிடுவோம் என்று கூறுகிறார். நான் கேட்கிறேன். 29 எம்எல்ஏக்களை நீங்கள் அதிமுக ஆதரவுடன்தான் பெற்றுள்ளீர்கள். முதலில் 29 பேரும் ராஜினாமா செய்து விட்டு தனியாக போட்டியிட்டு ஜெயித்து காட்டுங்கள். 
தமிழக மக்களுக்காக உழைத்து வரும் முதல்வர் ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் முத்துச்செல்வியை அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற இரட்டை இலை         சின்னத்தில் அனைவரும் வாக்களியுங்கள் என்று பேசினார்.இக் கூட்டத்தில் அமைச்சர் ராஜா செந்தூர்பாண்டி, சமத்துவ மக்கள் கட்சி துணைத் தலைவர் ஏ.நாராயணன் எம்எல்ஏ, பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், கொள்கை பரப்புச் செயலாளர் ஜெயபிரகாஷ், இலக்கிய அணி செயலாளர் விவேகானந்தன், மாவட்ட செயலாளர் தங்கராஜ், சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளர் ராயப்பன், அதிமுக ஒன்றிய செயலாளர் முருகையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சரத்குமார் எம்எல்ஏ இன்று சங்கரன்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட தளவாய்புரம், செந்தட்டி, வேப்பங்குளம், நெடுங்குளம், நெசவாளர் காலனி, என்ஜிஓ காலனி, புளியப்பட்டி ஆகிய இடங்களில் அதிமுக வேட்பாளர் முத்துச் செல்விக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரித்தார்.

Saturday, March 3, 2012

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் சமத்துவ மக்கள் கட்சியில் 9 குழுக்கள் அமைப்பு

சென்னை, மார்ச்.- 3 - சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச் செல்வியின் வெற்றிக்கு பாடுபட சமத்துவ மக்கள் கட்சி சார்பில் 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் முத்துச்செல்வியின் வெற்றிக்காக தேர்ல் பணிகளில் ஈடுபட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பகுதி வாரியாக 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் விபரம் வருமாறு:-

மேல நீலித நல்லூர் ஒன்றியம் (மேற்கு பகுதி) - மாநில துணைத் தலைவர் நாராயணன் எம்.எல்.ஏ, மாநில இளைஞரணி செயலாளர் எஸ்.வி.கணேசன், எம்.விசுவாசம், வி.எம்.ராயப்பன், எம்.பி.ராமராஜா, ஜே.ராம் கபிலன், குமுதா, சுரேஷ் கண்ணன், செல்லப்பெருமாள். மேல நீலித நல்லூர் ஒன்றியம் (மேற்கு) - மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன்,  மாநில அமைப்புச் செயலாளர், ஆர்.கே.காளிதாஸ், ஜே.ராபர்ட்சன், ஆர்.வி.ராமர், எல்.அகஸ்டின் தங்கராஜ், பி.தமிழழகன், சோனா மஹேஷ், ஆல்வின். மேல நீலித நல்லூர் கிழக்கு (கிழக்கு) ஆர்.ஜெயப்ரகாஷ் மாநில கொள்கைபரப்பு செயலாளர், நெல்லை கணேசன், மணி, கணபதி தேவர், வெள்ளைத்துரை பாண்டியன், கே.பி.காலசாமி, ராஜசேகரப் பாண்டியன், பி.ஆர்.எல்.காமராஜ்.

சங்கரன்கோவில் நகரம் (1 முதல் 15 வார்டு வரை) - என்.எம்.எஸ்.விவேகானந்தன் மாநில கலை இலக்கிய அணி செயலாளர், கனகவேல், ஆறுமுகசாமி, துரைராஜ், பஞ்சாங்கம், ராஜேஸ்வரி, பாலகணேஷ், சேவுகபாண்டி, ஜெயலட்சுமி.

குருவிக்குளம் (தெற்கு) - என்.சுந்தர் தென் மண்டல செயலாளர், எஸ்.சுதாகர் மாநில தொழில்சங்கத்தலைவர், ரஞ்சித், முருகன், காமராஜ், செல்வம், வினோத்குமார், சேர்மன். குருவிக்குள் (வடக்கு) - ஜி.ஈஸ்வரன் மதுரை மண்டல செயலாளர், ஜெயக்குமார், நாகமணி, ராஜபாண்டி, மாடசாமி, ஜே.ஆர்.எஸ்.ராஜரத்தினம், டேவிட், கணேசன்.

மேலநீலித நல்லூர் (கிழக்கு) - டி.ஆர்.தங்கராஜ் மாவட்டச் செயலாளர், டி.டி.என்.லாரன்ஸ் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர், புலிப்பாண்டியன் (எ) சுப்பையா, கே.விஜயன், முத்துராம், மூர்த்திப் பாண்டியன், ராம்குமார், எஸ்.அந்தோனியம்மாள், ராமர்.


சங்கரன்கோவில் நகரம் (16 முதல் 25 வார்டு வரை) - கே.வி.கே.துரை மாவட்ட இளைஞரணி செயலாளர், முத்துராஜ், திருமலைசாமி, ஐயப்பசாமி, முருகேசன், அருணா, சீனிவான், அருணாச்சலம், இருளப்பன். சங்கரன்கோவில் ஒன்றியம் - கனகவேல், மகாலிங்கம், ஜெயக்குமார், பி.ஆர்.எல்.ஆறுமுகம், இலக்கியன், கார்த்திக், ராம்குமார், மகேஷ்.

மேலும் தேர்தல் பிரச்சாரப்பணிக்காக கட்சியின் அவைத்தலைவர் வி.செல்வராஜ்  ஐ.ஏ.எஸ் அரசியல் ஆலோசகர் ரவீந்திரன் துரைசாமி, துணைப் பொதுச்செயலாளர்கள், ஏ.என்.சுந்தரேசன், திண்டுக்கல் இரா.மணிமாறன் முன்னாள் எம்.எல்.ஏ, என்.என்.சண்முகசுந்தரம் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சரத்குமார் அறிக்கையில் கூறியுள்ளார்.