Saturday, January 22, 2011

பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்: சரத்குமார் கோரிக்கை

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர். சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.50 நேற்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்து அறிவிக்கலாம் என்று முடிவெடுத்த பிறகு 6 முறைகளும், மொத்தத்தில் இது வரை கடந்த ஒரு ஆண்டுக்குள் 9 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
நகரங்கள் முதல் கிராமங்கள் வரை இருசக்கர வாகனங்கள் பயன்படுத்தும் கோடிக் கணக்கான நடுத்தர மக்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாவது டன் மன உளைச்சலுக்கும் ஆளாகி இருக்கிறார்கள். இது போன்ற நிலை தொடர்ந்து நீடித்தால் அரசுகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள்.   எனவே, இந்த விலை உயர்வை கடந்த முறை உயர்த்தியதை தவிர்த்து நேற்று அறிவித்த விலை உயர்வையாவது எண்ணை நிறுவனங்கள் திரும்பப்பெற வேண்டும். அனைத்து பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, நேற்றைய பெட்ரோல் விலை உயர்வு மேலும் விலைவாசி உயர்வுக்கு காரணமாக அமைந்து விடும் என்பது உறுதி.
வளரும் நாடுகளுக்கு சப்ளையாகும் கச்சா எண்ணையின் விலையை வருகிற ஐந்து ஆண்டுகளுக்கு உயர்த்தக்கூடாது என்று வேண்டுகோள் வைக்க வேண்டும். இதற்கு, மத்திய அரசும் பிரதமர் மன்மோகன் சிங்கும் உடனடி நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.   இதேபோல சபரிமலை விபத்தில் உயர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment