சென்னை, ஜன. 24-
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நேற்று தமிழக அரசு சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் சிறு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளித்தது. அப்படி மருந்து அளித்த 2 மணி நேரத்திற்குள் காஞ்சி மாவட்டம் படப்பையில் 2 வயது குழந்தை திடீரென உயிர்நீத்த பரிதாபம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருவள்ளூர் மாவட்டத்தில் 4 குழந்தைகள் தடுப்பு ஊசி போட்ட உடன் இறந்திருக்கிறார்கள். பொது மக்கள் இதுபோன்ற நிகழ்வுகளால் அச்சமும் ஐயமும் கொள்வதை தவிர்க்க முடியாது. ஏற்கனவே போலி மருந்துகள், காலாவதியான மருந்துகள் அதிர்ச்சியில் இருந்து மீண்டபாடில்லை. அரசு மீண்டும் மெத்தனமாக இருந்துவிடாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
நோய் தடுப்பு மருந்தே உயிர்க்கொல்லியாக மாறுவதை போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் அரசு மீது மக்கள் நம்பிக்கை இழப்பதோடு, அரசு வழங்கும் மருத்துவ உதவிகளை பெற்றுக் கொள்ள அச்சப்பட்டு தயங்கும் சூழ்நிலையும் உருவாகலாம். எனவே அரசு மருத்துவ சேவைகளின் மூலம் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நேற்று தமிழக அரசு சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் சிறு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளித்தது. அப்படி மருந்து அளித்த 2 மணி நேரத்திற்குள் காஞ்சி மாவட்டம் படப்பையில் 2 வயது குழந்தை திடீரென உயிர்நீத்த பரிதாபம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருவள்ளூர் மாவட்டத்தில் 4 குழந்தைகள் தடுப்பு ஊசி போட்ட உடன் இறந்திருக்கிறார்கள். பொது மக்கள் இதுபோன்ற நிகழ்வுகளால் அச்சமும் ஐயமும் கொள்வதை தவிர்க்க முடியாது. ஏற்கனவே போலி மருந்துகள், காலாவதியான மருந்துகள் அதிர்ச்சியில் இருந்து மீண்டபாடில்லை. அரசு மீண்டும் மெத்தனமாக இருந்துவிடாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
நோய் தடுப்பு மருந்தே உயிர்க்கொல்லியாக மாறுவதை போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் அரசு மீது மக்கள் நம்பிக்கை இழப்பதோடு, அரசு வழங்கும் மருத்துவ உதவிகளை பெற்றுக் கொள்ள அச்சப்பட்டு தயங்கும் சூழ்நிலையும் உருவாகலாம். எனவே அரசு மருத்துவ சேவைகளின் மூலம் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்
No comments:
Post a Comment