மதுரை:"அனைத்து தொகுதிகளிலும் ஜாதியை மறந்து, யார் வல்லவர், நல்லவர் என்பதை அறிந்து ஓட்டளிப்பது' என்று, நாடார் இளைஞர் பேரவை முடிவு செய்துள்ளது.இப்பேரவையின் பொதுக்குழு கூட்டம் மதுரையில் நேற்று, பொதுச் செயலர் வி.என். ராஜசேகரன் தலைமையில் நடந்தது.
கூட்ட முடிவுகள் குறித்து, அவர் கூறியதாவது:பெருந்தலைவர் மக்கள் கட்சியினர், அனைத்து நாடார் சங்கங்களையும் அழைத்துப் பேசி, தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு எடுத்ததாகக் கூறியுள்ளனர். ஆனால், எங்களை அழைக்கவில்லை. மறுநாள் என்னை தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டனர். எங்களிடம் கலந்து ஆலோசிக்காத போது, ஆதரவு கேட்பது என்ன நியாயம்?எங்களையும் அழைத்தால் "சீட்' பிரச்னை எழும் என கருதியே, புறக்கணித்துள்ளனர். அக்கட்சி நிர்வாகிகள் சிலர் சுயநலமிக்கவர்கள். இதன் காரணமாக, அனைத்து தொகுதிகளிலும் யார் வல்லவர், நல்லவர் என்பதை அறிந்து, ஜாதியை மறந்து, ஓட்டளிப்பது என தீர்மானித்துள்ளோம். மாற்று கட்சிகள் ஆதரவு கேட்கும்பட்சத்தில், பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும்.இவ்வாறு ராஜசேகரன் கூறினார்.பொருளாளர் பால்பாண்டி, துணை செயலர் அருண், நகர் தலைவர் சிவபாலன், செயலர் திருப்பதி, தங்கராஜ் உடனிருந்தனர்.
கூட்ட முடிவுகள் குறித்து, அவர் கூறியதாவது:பெருந்தலைவர் மக்கள் கட்சியினர், அனைத்து நாடார் சங்கங்களையும் அழைத்துப் பேசி, தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு எடுத்ததாகக் கூறியுள்ளனர். ஆனால், எங்களை அழைக்கவில்லை. மறுநாள் என்னை தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டனர். எங்களிடம் கலந்து ஆலோசிக்காத போது, ஆதரவு கேட்பது என்ன நியாயம்?எங்களையும் அழைத்தால் "சீட்' பிரச்னை எழும் என கருதியே, புறக்கணித்துள்ளனர். அக்கட்சி நிர்வாகிகள் சிலர் சுயநலமிக்கவர்கள். இதன் காரணமாக, அனைத்து தொகுதிகளிலும் யார் வல்லவர், நல்லவர் என்பதை அறிந்து, ஜாதியை மறந்து, ஓட்டளிப்பது என தீர்மானித்துள்ளோம். மாற்று கட்சிகள் ஆதரவு கேட்கும்பட்சத்தில், பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும்.இவ்வாறு ராஜசேகரன் கூறினார்.பொருளாளர் பால்பாண்டி, துணை செயலர் அருண், நகர் தலைவர் சிவபாலன், செயலர் திருப்பதி, தங்கராஜ் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment