சென்னை, மார்ச் 19-
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறார்.அதிமுக கூட்டணியில் அவரது கட்சிக்கு தென்காசி, நாங்குநேரி ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், தென்காசியில் சரத்குமாரும், நாங்குநேரியில் எர்ணாவூர் நாராயணனும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சரத்குமாரும் எர்ணாவூர் நாராயணனும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணனை சந்தித்துப் பேசினர்.
சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி க்கு ஒதுக்கப்பட்டுள்ள 2 இடங்களில் தென்காசியில் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமாரும், நாங்குநேரியில் எர்ணாவூர் நாராயணனும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தென்காசி, நாங்குநேரி தொகுதிகளில் அகில இந்திய சமத்துவக் கட்சி போட்டியிடுகிறது.
கட்சியின் உயர் நிலைக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி தென்காசியில் நானும் (சரத்குமார்), நாங்குநேரியில் கட்சியின் தலைவர் ஏ. நாராயணனும் போட்டியிட இருக்கிறோம்.
அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெற எங்கள் கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் பாடுபடுவார்கள் என்று கூறியுள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறார்.அதிமுக கூட்டணியில் அவரது கட்சிக்கு தென்காசி, நாங்குநேரி ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், தென்காசியில் சரத்குமாரும், நாங்குநேரியில் எர்ணாவூர் நாராயணனும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சரத்குமாரும் எர்ணாவூர் நாராயணனும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணனை சந்தித்துப் பேசினர்.
சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி க்கு ஒதுக்கப்பட்டுள்ள 2 இடங்களில் தென்காசியில் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமாரும், நாங்குநேரியில் எர்ணாவூர் நாராயணனும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தென்காசி, நாங்குநேரி தொகுதிகளில் அகில இந்திய சமத்துவக் கட்சி போட்டியிடுகிறது.
கட்சியின் உயர் நிலைக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி தென்காசியில் நானும் (சரத்குமார்), நாங்குநேரியில் கட்சியின் தலைவர் ஏ. நாராயணனும் போட்டியிட இருக்கிறோம்.
அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெற எங்கள் கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் பாடுபடுவார்கள் என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment