தென்காசி ரேஷன் கடையில் நேற்று சரத்குமார் எம்எல்ஏ திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் சரத்குமார் நேற்று தென் காசி நகர்ப்பகுதியில் நன்றி தெரி வித்து பேசினார். கொடிமரம் பகுதியில் நன்றி தெரிவித்துக்கொண்டிருந்தபோது அந்த பகுதி ரேஷன் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கிருந்த மக்கள் ரேஷன் கடையில் மாற்றுப்பொருட்கள் வாங்கினால்தான் அரிசி கொடுக்கப்படும் என்று வற்புறுத்துவதாக தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்கு சென்று அங்கிருந்த பணியாளர்களிடம் இதுகுறித்து விசாரித்தார்.
பின்னர் பணியாளர்களிடம், தமிழக முதல்வர் ஏழை மக்களுக்காக நிறைவேற்றி வரும் திட்டங்களில் முதன்மையானவை இலவச அரிசி வழங்கும் திட்டமாகும்.
அரிசி வழங்கும்போது தொகுதி மக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமலும் எவ்வித குறைவுமின்றி சிறப்பாக செயல்பட்டு முதலமைச்சரின் திட்டத்தை செயல்படுத்திட ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் சரத்குமார் நேற்று தென் காசி நகர்ப்பகுதியில் நன்றி தெரி வித்து பேசினார். கொடிமரம் பகுதியில் நன்றி தெரிவித்துக்கொண்டிருந்தபோது அந்த பகுதி ரேஷன் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கிருந்த மக்கள் ரேஷன் கடையில் மாற்றுப்பொருட்கள் வாங்கினால்தான் அரிசி கொடுக்கப்படும் என்று வற்புறுத்துவதாக தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்கு சென்று அங்கிருந்த பணியாளர்களிடம் இதுகுறித்து விசாரித்தார்.
பின்னர் பணியாளர்களிடம், தமிழக முதல்வர் ஏழை மக்களுக்காக நிறைவேற்றி வரும் திட்டங்களில் முதன்மையானவை இலவச அரிசி வழங்கும் திட்டமாகும்.
அரிசி வழங்கும்போது தொகுதி மக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமலும் எவ்வித குறைவுமின்றி சிறப்பாக செயல்பட்டு முதலமைச்சரின் திட்டத்தை செயல்படுத்திட ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

No comments:
Post a Comment