காமராஜரின் 109வது பிறந்தநாள் விழாவை ஒட்டி, நேற்று அவரது சிலைகள் மற்றும் படத்துக்கு மலர் தூவி பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் எர்ணாவூர் நாராயணன் எம்எல்ஏ, தலைமை நிலைய செயலாளர் ஜெயபிரகாஷ், வடசென்னை மாவட்ட செயலாளர் சேவியர் மற்றும் நிர்வாகிகளும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

No comments:
Post a Comment