தூத்துக்குடி :
தூத்துக்குடியில் சமக.,நிறுவனத் தலைவர் சரத்குமாரின் 58வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் விழா கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் தலைமை வகித்து பேசினார். முன்னதாக 58 தொண்டர்கள் ரத்ததானம் செய்தனர்.
மாநகரச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் வரவேற்றார். சமத்துவ தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநில தலைவர் சுதாகர் நலத்திட்டம் வழங்கி பேசினார். இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கிரிக்கெட் பந்து, மட்டையுடன் கூடிய விளையாட்டு உபகரணங்களை மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் சரத்பாலா வழங்கினார்.
மேலும் ஏழை, எளிய மக்கள் 58 பேருக்கு இலவச வேட்டி, சேலை, குடம் வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட துணை செயலாளர் ராஜேஷ், மாவட்ட துணை செயலாளர் மலர்விழி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பிரபாகர், மாவட்ட இளைஞரணி செயலாளர் வில்சன், மாநில செயற்குழு உறுப்பினர் அல்போன்ஸ்ராஜ், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் இருதயகுமார், மகளிரணி செயலாளர் முத்துமதி, மாவட்ட பொருளாளர் ராஜா, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர்களான மாவை சக்திவேல், தாளமுத்து, ஒன்றிய செயலாளர் ஜெகன், ஸ்ரீவைகுண்ட ஒன்றிய செயலாளர் ராஜன், ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் ராஜபாண்டியன், ஒன்றிய வர்த்தக அணி துணை செயலாளர் திவான் ராஜசேகர், மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் ராஜா மற்றும் கட்சித் தொண்டர்கள் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பிரதிநிதி சரத்ஜெகன் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment