சென்னை, ஜூலை 13:அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் 10 மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகளை அக்கட்சித் தலைவர் சரத்குமார் எம்எல்ஏ நியமித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: | |
| . | |
வட சென்னை மாவட்ட செயலாளராக பதவி வகிக்கும் எம்.ஏ.சேவியர் அப்பொறுப்போடு கூடுதல் பொறுப்பாக மாநில இளைஞரணி துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் வழக்கறிஞர் ஆர்.அய்யாவு மற்றும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஏ.பிரான்சிஸ் அந்தோணிராஜ் ஆகிய இருவரும் மாநில இளைஞரணி துணை செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளராக பதவி வகித்த பி.குமார் மாநில வழக்கறிஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகர மாவட்ட செயலாளர் ஜி.ஈஸ்வரன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மதுரை மண்டல அமைப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். டாக்டர் டி.பிரபாகரன் மதுரை கிழக்கு மாவட்ட செயலாளராகவும், வீர.ராஜ்குமார் மதுரை வடக்கு மாவட்ட செயலாளராகவும், எஸ்.சுதாகர் மத்தியசென்னை மாவட்ட செயலாளராகவும், கே.தமிழ்சாமி திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராகவும், அப்துல் பாசித் ராமநாதபுரம் மத்திய மாவட்ட செயலாளராகவும், சி.எம்.சின்னசாமி பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். வழக்கறிஞர் எஸ்.சிவா திருப்பூர் மாநகர் மாவட்ட துணைச் செயலாளராகவும், முருகன் விருதுநகர் நகரச் செயலாளராகவும், எஸ்.விஜயன் ஆலங்குளம் (வடக்கு) ஒன்றிய செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் கே.எம். தர்மராஜ் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு ஈரோடு மாநகர் (ஆட்டோ ஓட்டுநர் பிரிவு) தொழிற்சங்க செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. |
Wednesday, July 13, 2011
ச.ம.கட்சி நிர்வாகிகள் மாற்றம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment