Thursday, April 12, 2012

சரத்குமார் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மீண்டும் சித்திரை முதல் நாளை, தமிழ்ப்புத்தாண்டு தினமாக இந்த ஆண்டு முதல் அறிவித்த தமிழக முதல்வருக்கு தமிழக மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழ்ப் புத்தாண்டு தினத்தை உழவர் பெருவிழா நாளாகக் கொண்டாடி, விவசாயப் பெருமக்களுக்கு பல்வேறு சலுகைகளையும் வழங்கி தமிழகத்தில் இரண்டாவது பசுமைப் புரட்சிக்கு வித்திட்டிருப்பதும் இன்றைய தமிழ்ப் புத்தாண்டில் தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் மகிழ்ச்சியும், பெருமையும் அளிப்பதாக உள்ளது.

தமிழகம், வேளாண்மைத் துறை மட்டுமல்லாது, கல்வி, தொழில், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் வியத்தகு வளர்ச்சி பெற்று, தமிழக மக்கள் மகிழ்வோடும், சிறப்போடும் வாழ் வாங்கு வாழ வேண்டும் என இவ்வினிய தமிழ்ப் புத்தாண்டு நன்னாளில் தமிழக மக்களுக்கு என் நல்வாழ்த்துக்களை என் சார்பிலும், சமத்துவ மக்கள் கட்சி சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment