|
சென்னை, ஏப்.22:சத்தீஷ்கர் மாநிலத்தில்
மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ்
அதிகாரியை மீட்பதற்கு மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று சமத்துவ
மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் வலியுறுத்தி உள்ளார்.
|
|
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்
கூறியிருப்பதாவது: சத்தீஷ்கர் மாநிலத்தில் உள் சுக்மா மாவட்டத்தில்
கலெக்டராக பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அலெக்ஸ் மேனன்
மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளார்.
அந்த மாவட்டத்தில் மக்கள் பணியை மேற்கொண்டுவிட்டு வீடு திரும்பியபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அவருக்கு பாதுகாப்பாக சென்ற 2 காவலர்களும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட அலெக்ஸ் மேனனை உடனடியாக மீட்பதற்கு மத்திய அரசு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஏற்கனவே ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த எம்எல்ஏவை மீட்பதில் மத்திய அரசு மெத்தனம் காட்டுவது போல் இந்த விஷயத்திலும் இல்லாமல் சத்தீஷ்கர் மாநில அரசுடன் இணைந்து ஐஏஎஸ் அதிகாரி அலெக்ஸ் மேனனை மீட்பதற்கு உரிய நடவடிக்கையை மத்திய அரசு விரைவாக எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். |
Sunday, April 22, 2012
சட்டீஸ்கரில் கடத்தப்பட்ட கலெக்டரை பாதுகாப்பாக உடனே மீட்க வேண்டும் : சரத்குமார் கோரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment