Thursday, July 26, 2012
23 தமிழக மீனவர்களையும் உடனே விடுவிக்க- ஆர்.சரத்குமார் கோரிக்கை
குற்றாலத்தில் சரத்குமாரின் சொந்த செலவில் கட்டப்பட்டுள்ள காசு போட்டு பயன்படுத்தும் கழிவறை

குற்றாலம்:
குற்றாலத்தில் தென்காசி எம்.எல்.ஏ.வும், சமக தலைவருமான சரத்குமாரின் சொந்த
செலவில் கட்டப்பட்டுள்ள காசு போட்டு பயன்படுத்தும் கழிவறை மக்கள்
பயன்பாட்டிற்காக இன்று திறக்கப்பட உள்ளது.
தென்காசி
எம்.எல்.ஏ.வும், சமக தலைவருமான சரத்குமார் ரூ.7.50 லட்சம் செலவில்
குற்றலாத்தில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக காசு போட்டு பயன்படுத்தும்
கழிவறையை கட்டியுள்ளார்.
மெயினருவி அருகே சுமார் 45 சதுர அடியில்
அமைக்கப்பட்டு்ள்ள இந்த கழிவறையை பராமரிக்க மனிதர்கள் தேவையில்லை.
...
இரண்டு ரூபாய் அல்லது இரண்டு 1 ரூபாய் நாணயத்தை செலுத்தினால் தானாகவே கதவு
திறந்து கொள்ளும். பின்னர் உள்ளே உள்ள கதவை திறந்து கொள்ளலாம்.
கழிவானது சுமார் 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பைபர் டேங்கில்
சேகரிக்கப்படுகிறது. அதில் உள்ள பாக்டீரியா தொழில் நுட்பமானது கழிவுகளை
சுத்தப்படுத்தி மற்றொரு டேங்கிற்கு வெறும் தண்ணீராக மட்டும் செல்கிறது.
இந்த தண்ணீரை மீண்டும் உபயோகப்படுத்தும் அளவுக்கு மறு சுழற்சி
செய்யலாம்.
தற்போது குற்றாலத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவறையில் இந்த
மறுசுழற்சி முறை மட்டும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. கழிவறையில் தண்ணீர்,
மின்விசிறி வசதி ஆகியவை உள்ளன. கழிவறையை உபயோகப்படுத்துபவர்கள்
சுத்தப்படுத்த மறந்தாலும் தானாகவே சுத்தப்படுத்திக் கொள்ளும் வகையில்
சென்சர் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இந்த கழிவறை மக்கள்
பயன்பாட்டிற்காக இன்று திறக்கப்பட உள்ளது.
Monday, July 16, 2012
பாராளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க.வுன் கூட்டணி தொடரும்
சேலம் ஜூலை.- 17 - வரும் பாராளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன்
கூட்டணி தொடரும் என சேலத்தில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நடந்த
முப்பெரும் விழாவில் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். அகில இந்திய
சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 110 வது பிறந்த
நாள் விழா, அகில இந்திய சமத்துவ கட்சியின் தலைவர் சரத்குமாரின் 58 வது
பிறந்த நாள் விழா,கட்சி வளர்ச்சி நிதி வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா
சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று முன் தினம் மாலை நடைப்பெற்றது. விழாவிற்கு
சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.கே.என்.முருகேசன் தலைமை வகித்தா.மாஇல
துணை பொதுச்செயலாளர் என்.என்.சண்முகசுந்தரம், சேலம் கிழக்கு மாவட்ட
செயலாளர் வாழப்பாடி ஜவஹர்,மேற்கு மாவட்ட செயலாளர் மைக்கேல் தங்கராஜ்,
நாமக்கல் மாவட்ட செயலாளர் சுரேஷ் காந்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரியும்,கட்சியின் அவைத்தலைவருமான செல்வராஜ், மாநில
பொதுச்செயலாளர் கரு.நாகராஜன்,மாநில துணைத் தலைவர் எர்ணாவூர் நாராயணன்
எம்.எல்.ஏ. ஆகியோர் விழா பேரூரையாற்றினர். விழாவில் அகில இந்திய சமத்துவ
கட்சியின் நிறுவன தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு 50
பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் மற்றும் மாவட்ட அளவில் அரசுத்
தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை
வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது.அகில இந்திய சமத்துவ
மக்கள் கட்சி தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டது.6 வது ஆண்டில்
அடியெடுத்து வைத்துள்ளது. படிக்காத மேதையாக இஉரந்த காமராஜர் நாட்டை
ஆண்டுள்ளார். அவரது பிறந்தநாளை தமிழக அரசு கல்வி எழுச்சி நாளாக கொண்டாடி
வருகிறது.ஞாயிற்றுக் கிழமை பள்ளி விடுமுறையாக இருந்தும் மாணவ,மாணவிகள்
உற்சாகமாக கலந்து கொண்டது மகிழ்ச்சியை அளிக்கிறது. காமராஜர் 1954 ஆம் ஆண்டு
முதல் 1963 ஆம் ஆண்டு வரை காமராஜர் தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்து
சிறப்பான ஆடசி செய்தார்.கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார். குழந்தைகள்
பசியாறி படிக்க வேண்டும் என்பதற்காக மதிய உணவு திட்டம் தந்தவர். தமிழகத்தை
முதன்மை மாநிலமாக கொண்டு வரும் நோக்கில் அவரது ஆட்சியில் 19
தொழிற்பேட்டைகளை கொண்டு வந்தார். 2 முஐ பிரதமர் பதவி தேடி வந்தும் அதை உதறி
தள்ளியவர். இன்று சமத்துவ தலைவராக அவர் விளங்கி வருகிறார்.காமராஜர் விட்டு
சென்ற பணிகளை நாம் தொடர்ந்திட வேண்டும். முதல்வர் ஆனபோது அவருக்கு
சரித்திரம் தெரியுமா?பூகோளம் தெரியுமா? என்று தி.மு.க.வினர் கேலி செய்தனர்.
அவர்களுக்கு காமராஜர் அளித்த பதில் என்ன? தெரியுமா? நாட்டில் உள்ள
கிராமங்களை தெரியும். நதிகள் எத்தனை இருக்கிறது என்பது தெரியும்.நகரங்கள்,
தொழில்கள் இருப்பது தெரியும். இது போன்ற சரித்திரமும்,பூகோளமும்தான் தனக்கு
தெரியும் என்றார்.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க.நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.அரசியல் மாற்றத்திற்காக இங்கு முப்பெரும் விழா நடக்கவில்லை.நல்லவரோடு வல்லவரோடு திறமையான, உறுதியானவரோடு இருக்கிறோம். எங்கள் கூட்டணி பாராளுமன்ற தேர்தலிலும் தொடரும். இளைஞர்களும், படித்தவர்களும் அரசியலுக்கு வரவேண்டும்.நான் முதல்வராகும் எண்ணம் இல்லை. உங்களில் ஒருவராக இருக்க விரும்புகிறேன்.
சட்டமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க.கூட்டணியில் 41 தொகுதியில் நின்று 29 தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் என்னால்தான் அ.தி.மு.க.ஆட்சி நடக்கிறது என்கிறார்கள். எது உண்மை என்று மக்களுக்கு தெரியும். ஆனால் இப்போது சட்டமன்றத்தில் ஆளையே காணும். தான் சொன்னதையே மறந்துவிடக் கூடியவர் தற்போது சட்டமன்றத்திற்கு வருவதில்லை.கேட்டால் வழக்கு நிலுவையில் இருக்கிறது என்கிறார்.வழக்கு முடிய 5 ஆண்டுகள் ஆகும்.அதுவரை அவர் சட்டமன்றத்திற்கு வரமாட்டாரா? தே.மு.தி.க.வெற்றி பெற்ற தொகுதியில் மட்டும் அவர் மக்களை சந்தித்து வருகிறார். அதே போல நானும் வருகின்ற செப்டம்பர் மாதம் தே.மு.தி.க.வெற்றி பெற்ற 29 தொகுதிகளிலும் மக்களை சந்திக்க இருக்கிறேன். அதே போல் தி.மு.க.தலைவர் சிறை நிரம்பும் போராட்டம் நடத்தினார். எதற்காக நடத்தினால் இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்காகவா? பெட்ரோல் விலை உயர்வுக்காகவா? முல்லை பெரியார்,காவிரி பிரச்சனைக்காகவா? கடந்த ஆட்சி காலத்தில் தவறு செய்த தி.மு.க.முன்னாள் அமைச்சர்களை அ.தி.மு.க.அரசு கைது செய்தவதை கண்டித்து சிறை நிரம்பும் போராட்டம் நடத்துகிறார். நம்மால் முடியும், என்னால் முடியும்,என்ற தத்துவத்தை மனதில் வைத்து செயல்பட வேண்டும். நான் தமிழக முதல்வரை சந்தித்து எம்.பி.பி.எஸ்.,என்ஜீனியரிங் கல்லூரி வரை இலவச கல்வி கொடுங்கள் என எடுத்து சொல்வேன். அப்படி செய்துவிட்டால் மக்களை உங்களை எப்போது மறக்க மாட்டார்கள் என்பேன். மக்களுக்கு என்றும் உழைக்கும் கட்சியாக வருங்காலத்தில் நாமும் ஆட்சி பீடத்தில் இருக்கும் நிலையை நீங்கள் உருவாக்கிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் கட்சி வளர்ச்சி நிதியாக ரூ.1 கோடிக்கு மேல் வழங்கப்பட்டது. விழாவில் மாநில துணை பொதுச்செயலாளர் ஏ.என்.சுந்தரேசன்,கொள்கை பரப்புச் செயலாளர் மணிமாறன், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் பன்னீர் செல்வம், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் விவேகானந்தன், இளைஞர் அணி துணை செயலாளர் அந்தோணிராஜ்,ஐஸ் ஹவுஸ் தியாகு,நடிகர் கராத்தே ராஜா, தென்மண்டல செயலாளர் என்.சுந்தர், சேலம் மாநகர் மாவட்ட பொருளாளர் பவர் விஜய்,ஆத்தூர் மண்டல செயலாளர் நடராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க.நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.அரசியல் மாற்றத்திற்காக இங்கு முப்பெரும் விழா நடக்கவில்லை.நல்லவரோடு வல்லவரோடு திறமையான, உறுதியானவரோடு இருக்கிறோம். எங்கள் கூட்டணி பாராளுமன்ற தேர்தலிலும் தொடரும். இளைஞர்களும், படித்தவர்களும் அரசியலுக்கு வரவேண்டும்.நான் முதல்வராகும் எண்ணம் இல்லை. உங்களில் ஒருவராக இருக்க விரும்புகிறேன்.
சட்டமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க.கூட்டணியில் 41 தொகுதியில் நின்று 29 தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் என்னால்தான் அ.தி.மு.க.ஆட்சி நடக்கிறது என்கிறார்கள். எது உண்மை என்று மக்களுக்கு தெரியும். ஆனால் இப்போது சட்டமன்றத்தில் ஆளையே காணும். தான் சொன்னதையே மறந்துவிடக் கூடியவர் தற்போது சட்டமன்றத்திற்கு வருவதில்லை.கேட்டால் வழக்கு நிலுவையில் இருக்கிறது என்கிறார்.வழக்கு முடிய 5 ஆண்டுகள் ஆகும்.அதுவரை அவர் சட்டமன்றத்திற்கு வரமாட்டாரா? தே.மு.தி.க.வெற்றி பெற்ற தொகுதியில் மட்டும் அவர் மக்களை சந்தித்து வருகிறார். அதே போல நானும் வருகின்ற செப்டம்பர் மாதம் தே.மு.தி.க.வெற்றி பெற்ற 29 தொகுதிகளிலும் மக்களை சந்திக்க இருக்கிறேன். அதே போல் தி.மு.க.தலைவர் சிறை நிரம்பும் போராட்டம் நடத்தினார். எதற்காக நடத்தினால் இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்காகவா? பெட்ரோல் விலை உயர்வுக்காகவா? முல்லை பெரியார்,காவிரி பிரச்சனைக்காகவா? கடந்த ஆட்சி காலத்தில் தவறு செய்த தி.மு.க.முன்னாள் அமைச்சர்களை அ.தி.மு.க.அரசு கைது செய்தவதை கண்டித்து சிறை நிரம்பும் போராட்டம் நடத்துகிறார். நம்மால் முடியும், என்னால் முடியும்,என்ற தத்துவத்தை மனதில் வைத்து செயல்பட வேண்டும். நான் தமிழக முதல்வரை சந்தித்து எம்.பி.பி.எஸ்.,என்ஜீனியரிங் கல்லூரி வரை இலவச கல்வி கொடுங்கள் என எடுத்து சொல்வேன். அப்படி செய்துவிட்டால் மக்களை உங்களை எப்போது மறக்க மாட்டார்கள் என்பேன். மக்களுக்கு என்றும் உழைக்கும் கட்சியாக வருங்காலத்தில் நாமும் ஆட்சி பீடத்தில் இருக்கும் நிலையை நீங்கள் உருவாக்கிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் கட்சி வளர்ச்சி நிதியாக ரூ.1 கோடிக்கு மேல் வழங்கப்பட்டது. விழாவில் மாநில துணை பொதுச்செயலாளர் ஏ.என்.சுந்தரேசன்,கொள்கை பரப்புச் செயலாளர் மணிமாறன், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் பன்னீர் செல்வம், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் விவேகானந்தன், இளைஞர் அணி துணை செயலாளர் அந்தோணிராஜ்,ஐஸ் ஹவுஸ் தியாகு,நடிகர் கராத்தே ராஜா, தென்மண்டல செயலாளர் என்.சுந்தர், சேலம் மாநகர் மாவட்ட பொருளாளர் பவர் விஜய்,ஆத்தூர் மண்டல செயலாளர் நடராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விஜயகாந்த்தை விட மாட்டேன், தேமுதிக ஜெயித்த தொகுதிக்கெல்லாம் போவேன்: சரத்குமார்
மேடையில் பேசும்போதே தான் என்ன பேசுகிறோம் என்பது கூடத் தெரியாதவர்
விஜயகாந்த். அவரை நான் விட மாட்டேன், அவரது கட்சி ஜெயித்த ஒவ்வொரு
தொகுதிக்கும் போய் அவருக்கு எதிராக பிரசாரம் செய்வேன் என்று கூறியுள்ளார்
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.
சேலத்தில் காமராஜர் பிறந்த நாள், சரத்குமார் பிறந்த நாள், கட்சி நிதியளிப்பு நாள் என முப்பெரும் விழாவைக் கொண்டாடியது சரத்குமார் கட்சி.
நிகழ்ச்சியில் சரத்குமார் பேசுகையில், நம்மை நல்ல இடத்தில் வைத்திருக்கிறார் முதல்வர் அம்மா. நாம நல்லவரோடு இருக்கோம், வல்லவரோடு இருக்கோம். நான் இப்பவே அமைச்சராக தான் இருக்கிறேன். அம்மா அப்படிதான் என்னை நல்ல இடத்தில் வைத்திருக்கிறார் அவருக்கு ஒரே ஒரு கோரிக்கை இன்று கல்வி வணிகமாகிவிட்டது எனவே கல்வியை இலவசமாக தர முயற்சிக்கவும்.
ஒரு மைலுக்கு ஒரு பள்ளிக்கூடம் வேண்டும் என விரும்பியவர் காமராஜர். கல்வி ஒளியேற்றியவர் அவர். அவரின் வழியில் கல்வி ஒளி ஏற்ற கூடியவர்கள் நாம். உங்களில் ஒருவர் முதல்வர் ஆகணும் என்பதற்காக தான் இந்த முப்பெரும் விழாவே.
சிறை நிரப்பும் போராட்டம் செய்தவர்கள் முல்லை பெரியார் போன்ற மக்கள் பிரச்சனைக்காக ஏன் செய்யவில்லை? இப்போ சொல்றாரு ஈழத்தை மீட்டு தருவேன்னு அத ஏன் இங்க இருந்து சொல்றிங்க அங்க போயி (இலங்கை) கேட்க வேண்டியது தானே!.
41 பெற்று அதில் 29ஐ வென்றவர் ஒருவர். என்னால் தான் ஆட்சி அமைந்ததுனு சொல்லிக்கிட்டு இருந்தாரு, இப்போ ஆளையே காணோம். மேடையில பேசும் போதே என்ன பேசினோம்னு மறந்துடுராரு. அவர் சட்டமன்றத்திற்கு வருவதில்லை, கேட்டால் வழக்கு என்கிறார். வழக்கு ஐந்து வருடம் நீடித்தால் ஐந்து வருடமும் வரமாட்டாரா? அப்படி என்றால் அவர் கட்சிக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்த மக்களின் கதி?
அவரை விடமாட்டேன், அவரின் 29 தொகுதிகளுக்கும் இனி ஒவ்வொன்றாக போக போகிறேன் மக்கள் பணி ஆற்றுவேன்.
நான் என் தாய்க்கு பிறந்தேன். கருவில் இருக்கும் வரை நான் கருவே. நாடார் அல்ல. எனவே நமது காமராஜரையும் நாடார் என சுருக்க வேண்டாம் அவர் பாரத தலைவர் இந்த கொள்கையோடு மக்கள் பணி செய்வோம் நமக்கு பதவி முக்கியமில்லை சேவையே முக்கியம் என்று பேசினார் சரத்குமார்.
சேலத்தில் காமராஜர் பிறந்த நாள், சரத்குமார் பிறந்த நாள், கட்சி நிதியளிப்பு நாள் என முப்பெரும் விழாவைக் கொண்டாடியது சரத்குமார் கட்சி.
நிகழ்ச்சியில் சரத்குமார் பேசுகையில், நம்மை நல்ல இடத்தில் வைத்திருக்கிறார் முதல்வர் அம்மா. நாம நல்லவரோடு இருக்கோம், வல்லவரோடு இருக்கோம். நான் இப்பவே அமைச்சராக தான் இருக்கிறேன். அம்மா அப்படிதான் என்னை நல்ல இடத்தில் வைத்திருக்கிறார் அவருக்கு ஒரே ஒரு கோரிக்கை இன்று கல்வி வணிகமாகிவிட்டது எனவே கல்வியை இலவசமாக தர முயற்சிக்கவும்.
ஒரு மைலுக்கு ஒரு பள்ளிக்கூடம் வேண்டும் என விரும்பியவர் காமராஜர். கல்வி ஒளியேற்றியவர் அவர். அவரின் வழியில் கல்வி ஒளி ஏற்ற கூடியவர்கள் நாம். உங்களில் ஒருவர் முதல்வர் ஆகணும் என்பதற்காக தான் இந்த முப்பெரும் விழாவே.
சிறை நிரப்பும் போராட்டம் செய்தவர்கள் முல்லை பெரியார் போன்ற மக்கள் பிரச்சனைக்காக ஏன் செய்யவில்லை? இப்போ சொல்றாரு ஈழத்தை மீட்டு தருவேன்னு அத ஏன் இங்க இருந்து சொல்றிங்க அங்க போயி (இலங்கை) கேட்க வேண்டியது தானே!.
41 பெற்று அதில் 29ஐ வென்றவர் ஒருவர். என்னால் தான் ஆட்சி அமைந்ததுனு சொல்லிக்கிட்டு இருந்தாரு, இப்போ ஆளையே காணோம். மேடையில பேசும் போதே என்ன பேசினோம்னு மறந்துடுராரு. அவர் சட்டமன்றத்திற்கு வருவதில்லை, கேட்டால் வழக்கு என்கிறார். வழக்கு ஐந்து வருடம் நீடித்தால் ஐந்து வருடமும் வரமாட்டாரா? அப்படி என்றால் அவர் கட்சிக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்த மக்களின் கதி?
அவரை விடமாட்டேன், அவரின் 29 தொகுதிகளுக்கும் இனி ஒவ்வொன்றாக போக போகிறேன் மக்கள் பணி ஆற்றுவேன்.
நான் என் தாய்க்கு பிறந்தேன். கருவில் இருக்கும் வரை நான் கருவே. நாடார் அல்ல. எனவே நமது காமராஜரையும் நாடார் என சுருக்க வேண்டாம் அவர் பாரத தலைவர் இந்த கொள்கையோடு மக்கள் பணி செய்வோம் நமக்கு பதவி முக்கியமில்லை சேவையே முக்கியம் என்று பேசினார் சரத்குமார்.
Sunday, July 15, 2012
ஜனாதிபதி தேர்தலில் சங்மாவுக்கு ஆதரவு: சரத்குமார்
சென்னை, ஜூலை.15 - ஜனாதிபதி தேர்தலில் சங்மாவை ஆதரிக்க முதல்வர்
ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். அவரது முடிவுக்கு கட்டுப்பட்டு சங்மாவை
ஆதிரிப்போம் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற
உறுப்பினருமான நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். படித்த இளைஞர்கள்
அதிகம் பேர் அரசியலுக்கு வரவேண்டும், ஈடுபாடு உடையவர்களாகவும் இருக்க
வேண்டும் என்று நடிகர் சரத்குமார் தனது பிறந்தநாள் வாழ்த்து செய்தியாக
கூறினார்.
பிரபல நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார். இவர் தனது பிறந்தநாளை நேற்று காலை கொட்டிவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் மனைவி ராதிகா சரத்குமார் மற்றும் மகனுடன் கேக் வெட்டி கொண்டாடினார். இதுவரை படத்தயாரிப்பாளர் சீனிவாசன், அம்மா கிரியேஷன்சிவா, ஞானவேல் ராஜா, கே.ராஜன் மற்றும் எர்ணாவூர் நாராயணன், (ச.ம.க.து.தலைவர்) ஜே.எம்.ஆரூண் (எம்.பி) கட்சி தொண்டர்கள். சினிமா ரசிகர்கள் என பலரும் திரளாக கூடி நேரில் வாழ்த்தினார்கள். பின்னர் பிறந்தநாள் வாழ்த்து செய்தியாக சரத்குமார் கூறியதாவது:-
இன்றைய கால கூட்டத்தில் அனைத்தும் மாறிக்கொண்டே வருகிறது. பல துறைகளில் மாற்றங்கள் ஏற்படுகிறது. இதை வரவேற்க வேண்டும். அதே நேரத்தில் ஏழை பணக்காரன், ஏற்ற தாழ்வுகள், கீழ் சாதி, மேல் சாதி, மத வேற்றுமைகள் இன்னும் மாறவில்லை. இது மாற வேண்டும். இதற்காக பாடுபடுவேன். கல்வியில் மாற்றம் வேண்டும். தமிழகத்தில் பல மாவட்டங்களில் கல்வி கற்பவரின் நிலை கீழ் நோக்கி இருக்கிறது. குறிப்பாக சேலம் பகுதியில் 80 சதவீதம் பேர் கல்வி கற்றவர்களாக உள்ளனர். தென்காசி பகுதியில் 84 சதவீதம் பேர் கல்வி கற்றவர்களாக உள்ளனர். இப்படி குறைபாடு உள்ள பகுதிகளில் முழுமையான கல்வி கிடைக்க வேண்டும். இப்போது படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். காரணம் பொருளாதாரம் உயர்த்திருந்தாலும், விஞ்ஞானம் அபார வளர்ச்சி பெற்றுயிருந்தாலும் இதற்கு மூலக்காரணமாக இருப்பவர்கள் அரசியல்வாதிகள்.
மக்களுக்கு அரசு எவ்வளவோ நன்மைகள் செய்தாலும் முழுக்க முழுக்க அரசாங்கமே அனைத்தையும் செய்ய வேண்டும் என்று எண்ணக்கூடாது. மக்களும் விழிப்புணர்ச்சி பெற்று அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். என்னுடைய கருத்தில் இன்னொன்றை ஆழமாக பதிவு செய்ய விரும்புவது அனைவருக்கும் கல்வி இலவசமாக கிடைக்க வேண்டும். சீட்வாங்கும் போது பெற்றோர்கள் படும் கஷ்டம் பரிதாபமாக இருக்கிறது.
இப்போது தமிழ் கலாச்சாரம், பண்பாடு அதிகம் மாறிவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை இப்போது இல்லை. பழக்க வழக்கம், நடை, உடை, பாவனைகள் மாறிவிட்டது. இதனால் பாதிப்பு ஏற்படும். என்கிற நிலை வரும் போது அதை அளவோடு வைத்துக் கொள்ள வேண்டும். வெளிநாட்டவர்கள் இப்போது அதிகம் பேர் தமிழ்நாட்டில் வசிக்கிறார்கள். இவர்கள் அவர்களுடைய பண்பாட்டுக்கு தகுந்த மாதிரிதான் இங்கே நடந்து கொள்வார்கள். அதனால் பிரச்சனை ஏற்படும் போது அதை ஒழுங்குப்படுத்திக் கொள்ளலாம். இதனால் நம் நாட்டுக்கு சீரழிவு என்பது தவறு என்று நான் கருதுகிறேன். இங்கே ஜனாதிபதி தேர்தலில் எங்கள் கட்சியின் நிலைபாட்டை கேட்கிறீர்கள்.
ஜனாதிபதி தேர்தலில் சங்மாவை ஆதரிப்பதென முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். அவரது முடிவுக்குக் கட்டுப்பட்டு சங்மாவை ஆதரிப்போம்.
இவ்வாறு நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார். இவர் தனது பிறந்தநாளை நேற்று காலை கொட்டிவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் மனைவி ராதிகா சரத்குமார் மற்றும் மகனுடன் கேக் வெட்டி கொண்டாடினார். இதுவரை படத்தயாரிப்பாளர் சீனிவாசன், அம்மா கிரியேஷன்சிவா, ஞானவேல் ராஜா, கே.ராஜன் மற்றும் எர்ணாவூர் நாராயணன், (ச.ம.க.து.தலைவர்) ஜே.எம்.ஆரூண் (எம்.பி) கட்சி தொண்டர்கள். சினிமா ரசிகர்கள் என பலரும் திரளாக கூடி நேரில் வாழ்த்தினார்கள். பின்னர் பிறந்தநாள் வாழ்த்து செய்தியாக சரத்குமார் கூறியதாவது:-
இன்றைய கால கூட்டத்தில் அனைத்தும் மாறிக்கொண்டே வருகிறது. பல துறைகளில் மாற்றங்கள் ஏற்படுகிறது. இதை வரவேற்க வேண்டும். அதே நேரத்தில் ஏழை பணக்காரன், ஏற்ற தாழ்வுகள், கீழ் சாதி, மேல் சாதி, மத வேற்றுமைகள் இன்னும் மாறவில்லை. இது மாற வேண்டும். இதற்காக பாடுபடுவேன். கல்வியில் மாற்றம் வேண்டும். தமிழகத்தில் பல மாவட்டங்களில் கல்வி கற்பவரின் நிலை கீழ் நோக்கி இருக்கிறது. குறிப்பாக சேலம் பகுதியில் 80 சதவீதம் பேர் கல்வி கற்றவர்களாக உள்ளனர். தென்காசி பகுதியில் 84 சதவீதம் பேர் கல்வி கற்றவர்களாக உள்ளனர். இப்படி குறைபாடு உள்ள பகுதிகளில் முழுமையான கல்வி கிடைக்க வேண்டும். இப்போது படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். காரணம் பொருளாதாரம் உயர்த்திருந்தாலும், விஞ்ஞானம் அபார வளர்ச்சி பெற்றுயிருந்தாலும் இதற்கு மூலக்காரணமாக இருப்பவர்கள் அரசியல்வாதிகள்.
மக்களுக்கு அரசு எவ்வளவோ நன்மைகள் செய்தாலும் முழுக்க முழுக்க அரசாங்கமே அனைத்தையும் செய்ய வேண்டும் என்று எண்ணக்கூடாது. மக்களும் விழிப்புணர்ச்சி பெற்று அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். என்னுடைய கருத்தில் இன்னொன்றை ஆழமாக பதிவு செய்ய விரும்புவது அனைவருக்கும் கல்வி இலவசமாக கிடைக்க வேண்டும். சீட்வாங்கும் போது பெற்றோர்கள் படும் கஷ்டம் பரிதாபமாக இருக்கிறது.
இப்போது தமிழ் கலாச்சாரம், பண்பாடு அதிகம் மாறிவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை இப்போது இல்லை. பழக்க வழக்கம், நடை, உடை, பாவனைகள் மாறிவிட்டது. இதனால் பாதிப்பு ஏற்படும். என்கிற நிலை வரும் போது அதை அளவோடு வைத்துக் கொள்ள வேண்டும். வெளிநாட்டவர்கள் இப்போது அதிகம் பேர் தமிழ்நாட்டில் வசிக்கிறார்கள். இவர்கள் அவர்களுடைய பண்பாட்டுக்கு தகுந்த மாதிரிதான் இங்கே நடந்து கொள்வார்கள். அதனால் பிரச்சனை ஏற்படும் போது அதை ஒழுங்குப்படுத்திக் கொள்ளலாம். இதனால் நம் நாட்டுக்கு சீரழிவு என்பது தவறு என்று நான் கருதுகிறேன். இங்கே ஜனாதிபதி தேர்தலில் எங்கள் கட்சியின் நிலைபாட்டை கேட்கிறீர்கள்.
ஜனாதிபதி தேர்தலில் சங்மாவை ஆதரிப்பதென முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். அவரது முடிவுக்குக் கட்டுப்பட்டு சங்மாவை ஆதரிப்போம்.
இவ்வாறு நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Comments (Atom)
