சேலம் ஜூலை.- 17 - வரும் பாராளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன்
கூட்டணி தொடரும் என சேலத்தில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நடந்த
முப்பெரும் விழாவில் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். அகில இந்திய
சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 110 வது பிறந்த
நாள் விழா, அகில இந்திய சமத்துவ கட்சியின் தலைவர் சரத்குமாரின் 58 வது
பிறந்த நாள் விழா,கட்சி வளர்ச்சி நிதி வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா
சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று முன் தினம் மாலை நடைப்பெற்றது. விழாவிற்கு
சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.கே.என்.முருகேசன் தலைமை வகித்தா.மாஇல
துணை பொதுச்செயலாளர் என்.என்.சண்முகசுந்தரம், சேலம் கிழக்கு மாவட்ட
செயலாளர் வாழப்பாடி ஜவஹர்,மேற்கு மாவட்ட செயலாளர் மைக்கேல் தங்கராஜ்,
நாமக்கல் மாவட்ட செயலாளர் சுரேஷ் காந்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரியும்,கட்சியின் அவைத்தலைவருமான செல்வராஜ், மாநில
பொதுச்செயலாளர் கரு.நாகராஜன்,மாநில துணைத் தலைவர் எர்ணாவூர் நாராயணன்
எம்.எல்.ஏ. ஆகியோர் விழா பேரூரையாற்றினர். விழாவில் அகில இந்திய சமத்துவ
கட்சியின் நிறுவன தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு 50
பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் மற்றும் மாவட்ட அளவில் அரசுத்
தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை
வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது.அகில இந்திய சமத்துவ
மக்கள் கட்சி தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டது.6 வது ஆண்டில்
அடியெடுத்து வைத்துள்ளது. படிக்காத மேதையாக இஉரந்த காமராஜர் நாட்டை
ஆண்டுள்ளார். அவரது பிறந்தநாளை தமிழக அரசு கல்வி எழுச்சி நாளாக கொண்டாடி
வருகிறது.ஞாயிற்றுக் கிழமை பள்ளி விடுமுறையாக இருந்தும் மாணவ,மாணவிகள்
உற்சாகமாக கலந்து கொண்டது மகிழ்ச்சியை அளிக்கிறது. காமராஜர் 1954 ஆம் ஆண்டு
முதல் 1963 ஆம் ஆண்டு வரை காமராஜர் தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்து
சிறப்பான ஆடசி செய்தார்.கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார். குழந்தைகள்
பசியாறி படிக்க வேண்டும் என்பதற்காக மதிய உணவு திட்டம் தந்தவர். தமிழகத்தை
முதன்மை மாநிலமாக கொண்டு வரும் நோக்கில் அவரது ஆட்சியில் 19
தொழிற்பேட்டைகளை கொண்டு வந்தார். 2 முஐ பிரதமர் பதவி தேடி வந்தும் அதை உதறி
தள்ளியவர். இன்று சமத்துவ தலைவராக அவர் விளங்கி வருகிறார்.காமராஜர் விட்டு
சென்ற பணிகளை நாம் தொடர்ந்திட வேண்டும். முதல்வர் ஆனபோது அவருக்கு
சரித்திரம் தெரியுமா?பூகோளம் தெரியுமா? என்று தி.மு.க.வினர் கேலி செய்தனர்.
அவர்களுக்கு காமராஜர் அளித்த பதில் என்ன? தெரியுமா? நாட்டில் உள்ள
கிராமங்களை தெரியும். நதிகள் எத்தனை இருக்கிறது என்பது தெரியும்.நகரங்கள்,
தொழில்கள் இருப்பது தெரியும். இது போன்ற சரித்திரமும்,பூகோளமும்தான் தனக்கு
தெரியும் என்றார்.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க.நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.அரசியல் மாற்றத்திற்காக இங்கு முப்பெரும் விழா நடக்கவில்லை.நல்லவரோடு வல்லவரோடு திறமையான, உறுதியானவரோடு இருக்கிறோம். எங்கள் கூட்டணி பாராளுமன்ற தேர்தலிலும் தொடரும். இளைஞர்களும், படித்தவர்களும் அரசியலுக்கு வரவேண்டும்.நான் முதல்வராகும் எண்ணம் இல்லை. உங்களில் ஒருவராக இருக்க விரும்புகிறேன்.
சட்டமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க.கூட்டணியில் 41 தொகுதியில் நின்று 29 தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் என்னால்தான் அ.தி.மு.க.ஆட்சி நடக்கிறது என்கிறார்கள். எது உண்மை என்று மக்களுக்கு தெரியும். ஆனால் இப்போது சட்டமன்றத்தில் ஆளையே காணும். தான் சொன்னதையே மறந்துவிடக் கூடியவர் தற்போது சட்டமன்றத்திற்கு வருவதில்லை.கேட்டால் வழக்கு நிலுவையில் இருக்கிறது என்கிறார்.வழக்கு முடிய 5 ஆண்டுகள் ஆகும்.அதுவரை அவர் சட்டமன்றத்திற்கு வரமாட்டாரா? தே.மு.தி.க.வெற்றி பெற்ற தொகுதியில் மட்டும் அவர் மக்களை சந்தித்து வருகிறார். அதே போல நானும் வருகின்ற செப்டம்பர் மாதம் தே.மு.தி.க.வெற்றி பெற்ற 29 தொகுதிகளிலும் மக்களை சந்திக்க இருக்கிறேன். அதே போல் தி.மு.க.தலைவர் சிறை நிரம்பும் போராட்டம் நடத்தினார். எதற்காக நடத்தினால் இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்காகவா? பெட்ரோல் விலை உயர்வுக்காகவா? முல்லை பெரியார்,காவிரி பிரச்சனைக்காகவா? கடந்த ஆட்சி காலத்தில் தவறு செய்த தி.மு.க.முன்னாள் அமைச்சர்களை அ.தி.மு.க.அரசு கைது செய்தவதை கண்டித்து சிறை நிரம்பும் போராட்டம் நடத்துகிறார். நம்மால் முடியும், என்னால் முடியும்,என்ற தத்துவத்தை மனதில் வைத்து செயல்பட வேண்டும். நான் தமிழக முதல்வரை சந்தித்து எம்.பி.பி.எஸ்.,என்ஜீனியரிங் கல்லூரி வரை இலவச கல்வி கொடுங்கள் என எடுத்து சொல்வேன். அப்படி செய்துவிட்டால் மக்களை உங்களை எப்போது மறக்க மாட்டார்கள் என்பேன். மக்களுக்கு என்றும் உழைக்கும் கட்சியாக வருங்காலத்தில் நாமும் ஆட்சி பீடத்தில் இருக்கும் நிலையை நீங்கள் உருவாக்கிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் கட்சி வளர்ச்சி நிதியாக ரூ.1 கோடிக்கு மேல் வழங்கப்பட்டது. விழாவில் மாநில துணை பொதுச்செயலாளர் ஏ.என்.சுந்தரேசன்,கொள்கை பரப்புச் செயலாளர் மணிமாறன், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் பன்னீர் செல்வம், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் விவேகானந்தன், இளைஞர் அணி துணை செயலாளர் அந்தோணிராஜ்,ஐஸ் ஹவுஸ் தியாகு,நடிகர் கராத்தே ராஜா, தென்மண்டல செயலாளர் என்.சுந்தர், சேலம் மாநகர் மாவட்ட பொருளாளர் பவர் விஜய்,ஆத்தூர் மண்டல செயலாளர் நடராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க.நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.அரசியல் மாற்றத்திற்காக இங்கு முப்பெரும் விழா நடக்கவில்லை.நல்லவரோடு வல்லவரோடு திறமையான, உறுதியானவரோடு இருக்கிறோம். எங்கள் கூட்டணி பாராளுமன்ற தேர்தலிலும் தொடரும். இளைஞர்களும், படித்தவர்களும் அரசியலுக்கு வரவேண்டும்.நான் முதல்வராகும் எண்ணம் இல்லை. உங்களில் ஒருவராக இருக்க விரும்புகிறேன்.
சட்டமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க.கூட்டணியில் 41 தொகுதியில் நின்று 29 தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் என்னால்தான் அ.தி.மு.க.ஆட்சி நடக்கிறது என்கிறார்கள். எது உண்மை என்று மக்களுக்கு தெரியும். ஆனால் இப்போது சட்டமன்றத்தில் ஆளையே காணும். தான் சொன்னதையே மறந்துவிடக் கூடியவர் தற்போது சட்டமன்றத்திற்கு வருவதில்லை.கேட்டால் வழக்கு நிலுவையில் இருக்கிறது என்கிறார்.வழக்கு முடிய 5 ஆண்டுகள் ஆகும்.அதுவரை அவர் சட்டமன்றத்திற்கு வரமாட்டாரா? தே.மு.தி.க.வெற்றி பெற்ற தொகுதியில் மட்டும் அவர் மக்களை சந்தித்து வருகிறார். அதே போல நானும் வருகின்ற செப்டம்பர் மாதம் தே.மு.தி.க.வெற்றி பெற்ற 29 தொகுதிகளிலும் மக்களை சந்திக்க இருக்கிறேன். அதே போல் தி.மு.க.தலைவர் சிறை நிரம்பும் போராட்டம் நடத்தினார். எதற்காக நடத்தினால் இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்காகவா? பெட்ரோல் விலை உயர்வுக்காகவா? முல்லை பெரியார்,காவிரி பிரச்சனைக்காகவா? கடந்த ஆட்சி காலத்தில் தவறு செய்த தி.மு.க.முன்னாள் அமைச்சர்களை அ.தி.மு.க.அரசு கைது செய்தவதை கண்டித்து சிறை நிரம்பும் போராட்டம் நடத்துகிறார். நம்மால் முடியும், என்னால் முடியும்,என்ற தத்துவத்தை மனதில் வைத்து செயல்பட வேண்டும். நான் தமிழக முதல்வரை சந்தித்து எம்.பி.பி.எஸ்.,என்ஜீனியரிங் கல்லூரி வரை இலவச கல்வி கொடுங்கள் என எடுத்து சொல்வேன். அப்படி செய்துவிட்டால் மக்களை உங்களை எப்போது மறக்க மாட்டார்கள் என்பேன். மக்களுக்கு என்றும் உழைக்கும் கட்சியாக வருங்காலத்தில் நாமும் ஆட்சி பீடத்தில் இருக்கும் நிலையை நீங்கள் உருவாக்கிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் கட்சி வளர்ச்சி நிதியாக ரூ.1 கோடிக்கு மேல் வழங்கப்பட்டது. விழாவில் மாநில துணை பொதுச்செயலாளர் ஏ.என்.சுந்தரேசன்,கொள்கை பரப்புச் செயலாளர் மணிமாறன், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் பன்னீர் செல்வம், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் விவேகானந்தன், இளைஞர் அணி துணை செயலாளர் அந்தோணிராஜ்,ஐஸ் ஹவுஸ் தியாகு,நடிகர் கராத்தே ராஜா, தென்மண்டல செயலாளர் என்.சுந்தர், சேலம் மாநகர் மாவட்ட பொருளாளர் பவர் விஜய்,ஆத்தூர் மண்டல செயலாளர் நடராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment