Sunday, April 22, 2012

கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே வழங்கவேண்டுமென கோரி ஆர்ப்பாட்டம்

கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே வழங்க வேண்டும் என்று மத்திய அரசை
வலியுறுத்தும் வகையில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் வரும் 30 ம் தேதி  நடத்தப்படும் என்று அக்கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

    குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் மின்பற்றாக்குறை காரணமாக கல்வி, தொழில், விவசாயம் என அனைத்து துறைகளிலும் மக்கள் பாதிக்கப்ப ட்டுள்ளனர். தற்போது கூடங்குளம் அணு மின்நிலையத்தில் முதல் இரண்டு அணு உலைகள் மூலம் 2 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்த மின்சாரம் அனைத்தையும் தமிழகத்துக்கே வழங்க வேண்டும்.  மத்திய அரசிடம் இந்த கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வரும் 30 ம் தேதி தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சிகள் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக ஆர்பாட்டம் நடத்தப்படும் என கூறினார்.

இதேவேளை, 'தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின்பற்றாக்குறையை கூடங்குளம் அணுஉலையால் தீர்த்துவிட முடியாது. கூடங்குளம் அணுஉலை தொடங்கப்பட்டால் தமிழ்நாட்டின் மின்தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்ற தமிழக அரசின் பிரசாரம் ஒரு அப்பட்டமான பொய்' என அணு உலை ஆராய்ச்சியாளரும் பொறியியயாளருமான நீரஜ் ஜெயின் நேற்று கோவையில் நிருபர்களுக்கு கருத்து கூறியிருந்தார்.

கூடங்குளம் அணுஉலைகளில் தற்போது நிறுவப்பட்டுள்ள உலைகளின் உற்பத்தி திறன் 2000 மெகாவாட்.கூடங்குளம் 2 அணுஉலைகளிலும் 1000 மெகாவாட் மின்உற்பத்தியாகிறது என்றால், அணுஉலையானது தன் சொந்த தேவைக்கு 10 சதவீதம் மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும். மீதமுள்ள 900 மெகாவாட் மின்சார உற்பத்தியில் தமிழ்நாட்டுக்கு 30 லிருந்து 40 சதவீதம் மின்சாரம் அளிக்கிறார்கள்.

இதில் 20 சதவீதம் மின்கடத்தல் மூலம் நஷ்டம் அடையும். அந்த 20 சதவீத்தையும் கழித்தால் மீதி 20 சதவீதம் தான் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும்.அப்படியென்றால் மொத்தம் 290 மெகாவாட் மின்சாரம்தான் கிடைக்கும்.

தமிழகத்திற்கு தற்போது 3500 மெகாவாட் மின்பற்றாக்குறை உள்ளது. இதில் 290 மெகாவாட் மின்சாரம் எவ்வளவுக்கு பயன்படுத்த முடியும் என அவர் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சட்டீஸ்கரில் கடத்தப்பட்ட கலெக்டரை பாதுகாப்பாக உடனே மீட்க வேண்டும் : சரத்குமார் கோரிக்கை

சென்னை, ஏப்.22:சத்தீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியை மீட்பதற்கு மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சத்தீஷ்கர் மாநிலத்தில் உள் சுக்மா மாவட்டத்தில் கலெக்டராக பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அலெக்ஸ் மேனன் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளார்.

அந்த மாவட்டத்தில் மக்கள் பணியை மேற்கொண்டுவிட்டு வீடு திரும்பியபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.  அவருக்கு பாதுகாப்பாக சென்ற 2 காவலர்களும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட அலெக்ஸ் மேனனை உடனடியாக மீட்பதற்கு மத்திய அரசு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஏற்கனவே ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த எம்எல்ஏவை மீட்பதில் மத்திய அரசு மெத்தனம் காட்டுவது போல் இந்த விஷயத்திலும் இல்லாமல் சத்தீஷ்கர் மாநில அரசுடன் இணைந்து ஐஏஎஸ் அதிகாரி அலெக்ஸ் மேனனை மீட்பதற்கு உரிய நடவடிக்கையை மத்திய அரசு விரைவாக எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Thursday, April 12, 2012

சரத்குமார் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மீண்டும் சித்திரை முதல் நாளை, தமிழ்ப்புத்தாண்டு தினமாக இந்த ஆண்டு முதல் அறிவித்த தமிழக முதல்வருக்கு தமிழக மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழ்ப் புத்தாண்டு தினத்தை உழவர் பெருவிழா நாளாகக் கொண்டாடி, விவசாயப் பெருமக்களுக்கு பல்வேறு சலுகைகளையும் வழங்கி தமிழகத்தில் இரண்டாவது பசுமைப் புரட்சிக்கு வித்திட்டிருப்பதும் இன்றைய தமிழ்ப் புத்தாண்டில் தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் மகிழ்ச்சியும், பெருமையும் அளிப்பதாக உள்ளது.

தமிழகம், வேளாண்மைத் துறை மட்டுமல்லாது, கல்வி, தொழில், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் வியத்தகு வளர்ச்சி பெற்று, தமிழக மக்கள் மகிழ்வோடும், சிறப்போடும் வாழ் வாங்கு வாழ வேண்டும் என இவ்வினிய தமிழ்ப் புத்தாண்டு நன்னாளில் தமிழக மக்களுக்கு என் நல்வாழ்த்துக்களை என் சார்பிலும், சமத்துவ மக்கள் கட்சி சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Wednesday, April 4, 2012

தென்காசியை தனிமாவட்டமாக அமைத்திட வேண்டும்-சரத்குமார் கோரிக்கை

சென்னை, ஏப்.- 4 - தென்காசியை தனிமாவட்டமாக அமைத்திட வேண்டும் என்றும் சட்டப் பேரவையில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் கோரியுள்ளார். பட்ஜெட் மீதான விவாதத்தின் போது சட்டப்பேரவையில் அவர் பேசியதாவது:- தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனிமாவட்டம் அமைத்திட வேண்டும் தென்காசி நகராட்சியில் கடும் குடிநீர் தட்டுபாடு நிலவுகிறது. தாமிரபரணி குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கிட 4 இடங்களில் நீர் உந்து நிலையங்கள் உள்ளன. அதில் 4 பகுதி மின் இணைப்புகள் உள்ளன. இந்த திட்டத்திற்கு நீர் வழங்கும் போது அந்த இடத்தில் மின்சாரம் இருந்தால் மறு இடத்தில் இருக்காது. இதனால் மின்சார தடையால் நீர் உந்துவதில் தடைபடுகிறது. இதை தவிர்த்திட தாமிரபரணி நீர் உந்துதல் ஆரம்ப இடத்திலிருந்து 4 நிலையங்களுக்கும் ஒரே இடத்தில் இருந்து மின் இணைப்பு வழங்க வேண்டும். இதனால் குடிநீர் நகராட்சி மக்களுக்கு போதுமான அளவில் கிடைத்துவிடும். இந்த இணைப்பிற்கு அரசு உத்தரவிட வேண்டும். தென்காசி நகரில் அமைக்கப்படவுள்ள புற வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த அரசு நிதி வழங்கியுள்ளது. சாலைக்கும் இந்த ஆண்டே நிதி வழங்கி அப்பணி நிறைவு செய்திட வேண்டும். தென்காசி நகரில் பழைய பேருந்து அருகிலுள்ள குளத்தை ஆழப்படுத்தி, படகு போக்குவரத்து இதர ஏற்பாடுகள் செய்து சுற்றுலா இடமாக மாற்றிட ஆவண செய்திட வேண்டும். ஆளுநர் உரையில் 2011-12-ல் அறிவிக்கப்பட்ட கால்நடை மருத்துவ கல்லூரியை தென்காசி தொகுதியில் அனுமத்திட வேண்டும். வீரகேரளம் புதூரில் கால்நடை மருத்துவமனை அமைத்திட வேண்டும். வீரகேரளம்புதூர் வட்டத்திலுள்ள ஊத்துமலை அதை சுற்றியுள்ள 15 ஊராட்சிகள் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுதால் இதற்கென தாமிரபரணியில் இருந்து ஒரு குடிநீர் திட்டத்தின் மூலம் ஊத்துமலையை மையமாக வைத்து குடிநீர் திட்டம் அமைத்திட வேண்டும். வீரகேரளம்புதூர்  ஊராட்சி வீராணம் ஊத்துமலை, வழியாக சங்கரன்கோவில், ஆலங்குளம், திருநெல்வேலி செல்லும் அனைத்து சாலைகளும் பழுதடைந்துள்ளன. இதற்கென ஒரு சிறப்பு நிதி ஒதுக்கி சாலைகளை சரி செய்திட வேண்டும். பாவூர்சத்திரம், சுரண்டை ஆகிய இடங்களில் விவசாயிகள் பயிரிடும் காய்கறிகள், பழங்கள், மிளகாய், வெங்காயம் இவைகளை  பாதுகாத்திட குளிர்சாதன வசதியுள்ள கிடங்குகள் அமைத்திட வேண்டும். தென்காசி தொகுதியில் சுந்தரபாண்டியபுரம், வீ.கே.புதூர் ஆகிய இடங்களில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்திட வேண்டும். ஊத்துமலையை சுற்றி மேய்ச்சல் நிலங்கள் அதிகம் இருப்பதால் வறுமைக் கோட்டு விவசாயிகள் விவசாய கூலிகளுக்காக கறவை மாடுகள், ஆடுகள் அரசின் மானிய உதவி மற்றும் வங்கி கடன் மூலம் பெற்றிட சிறப்பு திட்டம் அரசு வழங்க வேண்டும்.
குற்றாலத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுந்திடவும், மக்கள் நாள் முழுவதும் சுற்றுலாவை அனுபவிக்க ஒரு கொள்கை விளக்க பூங்கா அமைத்திட வேண்டும்.
தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தில் தென்காசி பகுதி விவசாயிகளுக்கு விதை சேமிப்புக்கு ஒதுக்கப்பட்ட ரூ.25 லட்சத்தை வேறு இடம் தேர்வு செய்து விதை சேமிப்பு கிடங்கு கட்டிட வேண்டும்.
தென்காசியில் அமைந்துள்ள பட்டு வளர்ச்சி துறையில் ஊழியர் கூடுதலாக்கி பட்டு வளர்ச்சியை விவசாயிகளிடம் விளக்கி அதிக அளவு பயிரிட வேண்டும்.
தென்காசி நகரில் நகரம் பாதுகாப்புக்காக மேலும் ஒரு காவல் நிலையம் அமைத்திட வேண்டும்.
குற்றாலத்தில் சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகம் ஒன்றை திறந்துமக்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
திருக்குற்றால குறவஞ்சியை பாடிய திருகூட ராசப்ப கவிராயருக்கு விழா எடுத்திட  வேண்டும்.
குற்றாலத்தின் அருகிலுள்ள கேரள அரசின் கல்லடா சுற்றுலா மையத்திலுள்ள அனைத்து வசதிகளுடன் கூடிய சுற்றுலா மையமாக குற்றாலத்தை அமைத்திட வேண்டும்.
தென்காசியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைத்திட வேண்டும்.
இதற்கென முன்பு மருத்துவமனையாக இருந்த இடத்தைப் பயன்படுத்திட வேண்டும்.
பாவூர்சத்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலையிலிருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் அளவுக்கு வாறுகால், சிறுபாலங்கள் அமைத்திட வேண்டும்.
தென்காசி தலைமை மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன், மற்றும் போதுமான மருத்துவர்களையும் இதர அலுவலர்களையும் நியமித்திட வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையம் பாவூர்சத்திரம் சுந்தரபாண்டியபுரம், அரியப்பபுரம் ஆகியவைகளில் பெண் மருத்துவர்களையும், போதுமான மருத்துவர் மற்றும் ஊழியர்கள் நியமித்திட வேண்டும். நோயாளிகளுக்கு ஒவ்வொரு நிலையத்திலும் 20 படுக்கைகள் அமைத்திட வேண்டும்.
தென்காசி அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன், வைப்பதற்கு கட்டிடமும், சித்த மருத்துவப் பிரிவுக்கு வழங்கப்பட்ட கருவிகளை மக்கள் பயன்படுத்திட ஒரு கட்டிடமும் கட்டிட நிதி ஒதுக்கிட வேண்டும்.
சுரண்டை பேரூராட்சி பகுதியில் அரசுப் பேரூந்து பணிமணை ஒன்ற அமைத்திட வேண்டும்.
கிராமங்களிலுள்ள அனைத்து மக்களுக்கும் கழிவறை வசதியை அரசே செய்து கொடுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.