கடலூர், ஜன.29-
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையை கண்டித்தும், இந்த சம்பவத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்க கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் நாகையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அவர் நாகையில் இருந்து கட்சியின் நிர்வாகிகளுடன் காரில் சிதம்பரம் வழியாக சென்னைக்கு புறப்பட்டு வந்தார். கடலூர் முதுநகர், மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகில் சரத்குமாருக்கு கடலூர் மாவட்ட செயலாளர் ராஜசேகர் தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து, சால்வை அணிவித்து வரவேற்றனர்.
பின்னர் சரத்குமாரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு என்ன?
பதில்:- இந்திய கடல் எல்லையில் மிதவை மற்றும் ரோந்து கப்பல்களை மத்திய அரசு கூடுதலாக விட வேண்டும். கட்சத் தீவை மீட்டு, மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் தாக்கப்படுதற்கு இலங்கை அரசுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை விட வேண்டும். இந்த கோரிக்கைகளை மத்திய அரசுக்கு விடுத்துள்ளோம். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்வோம்.
கேள்வி:- தேர்தல் கூட்டணி பற்றி..?
பதில்:- கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் அவர் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.வரவேற்பு நிகழ்ச்சியில் சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் பிச்சு மணி, வடலூர் நகர செயலாளர் வீரசேகரன், ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ், தெய்வகுமார், சிங்காரம், இளைஞர் அணி ரகுநாதன், சந்திரசேகர், வடலூர் நகர செயலாளர் வீரசேகரன், தமிழ்நாடு மீனவர் பேரவையின் மாநில செயலாளர் கஜேந் திரன், மாவட்ட தலைவர் சுப்புராயன், இளைஞர் பேரவை தலைவர் கோகிலன், இணை செயலாளர் ராமு, பொருளாளர் கந்தாசமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
1 1
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையை கண்டித்தும், இந்த சம்பவத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்க கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் நாகையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அவர் நாகையில் இருந்து கட்சியின் நிர்வாகிகளுடன் காரில் சிதம்பரம் வழியாக சென்னைக்கு புறப்பட்டு வந்தார். கடலூர் முதுநகர், மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகில் சரத்குமாருக்கு கடலூர் மாவட்ட செயலாளர் ராஜசேகர் தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து, சால்வை அணிவித்து வரவேற்றனர்.
பின்னர் சரத்குமாரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு என்ன?
பதில்:- இந்திய கடல் எல்லையில் மிதவை மற்றும் ரோந்து கப்பல்களை மத்திய அரசு கூடுதலாக விட வேண்டும். கட்சத் தீவை மீட்டு, மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் தாக்கப்படுதற்கு இலங்கை அரசுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை விட வேண்டும். இந்த கோரிக்கைகளை மத்திய அரசுக்கு விடுத்துள்ளோம். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்வோம்.
கேள்வி:- தேர்தல் கூட்டணி பற்றி..?
பதில்:- கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் அவர் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.வரவேற்பு நிகழ்ச்சியில் சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் பிச்சு மணி, வடலூர் நகர செயலாளர் வீரசேகரன், ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ், தெய்வகுமார், சிங்காரம், இளைஞர் அணி ரகுநாதன், சந்திரசேகர், வடலூர் நகர செயலாளர் வீரசேகரன், தமிழ்நாடு மீனவர் பேரவையின் மாநில செயலாளர் கஜேந் திரன், மாவட்ட தலைவர் சுப்புராயன், இளைஞர் பேரவை தலைவர் கோகிலன், இணை செயலாளர் ராமு, பொருளாளர் கந்தாசமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
1 1



