Friday, April 29, 2011

தொழிற்சங்க இயக்கங்களில் அரசியல் பேதம் கூடாது: ஆர்.சரத்குமார்

சென்னை, ஏப்.29: தொழிற்சங்க இயக்கங்களில் அரசியல் பேதங்கள் தலைகாட்ட விடாமல் பாதுகாக்க வேண்டும் என்று மே தின வாழ்த்து செய்தியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் கூறியுள்ளார்.  இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:  தொழிலாளர்களுக்கும் அனைத்து அடிப்படை உரிமைகளையும், வாழ்க்கை தரம் உயரும் வகையில் நியாயமான ஊதியத்தையும் பெற்றுத் தர மே நன்னாளில் உறுதியேற்போம்.  மேலும், தொழிற்சங்க ஒற்றுமைக்குப் பாடுபடுவதுடன், தொழிற்சங்க இயக்கங்களில் கட்சி அரசியல் பேதங்கள் தலைகாட்ட விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


நன்றி : தின மணி 

Friday, April 15, 2011

சாத்தன்குளம் , நாசரேத் பகுதிகளில் சரத்குமார்

சாத்தன்குளம் , நாசரேத் பகுதிகளில் சரத்குமார் அவர்கள் பிரசாரத்தின் போது எடுக்கப்பட்ட  படம்..
காங்கிரஸ் வேட்பாளர்களை திமுகவே தோற்கடிக்கும். சரத்குமார்.
ரபரப்பான தேர்தல் களத்தில், அ.தி.மு.க. கூட்டணியில் ‘அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி’க்கு இரண்டு இடங்கள்.  எண்ணிக்கை திருப்தியா? அக்கட்சியின் தலைவர்  நடிகர் சரத்குமாரிடம் பேசினோம்.
திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்திருக்கிறீர்களே?

‘‘இல்லையே. நீண்ட நாட்கள் திட்டமிட்டு, பேச்சுவார்த்தை நடத்தித்தான் சேர்ந்திருக்கிறோம். சொல்லப்போனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே அ.தி.மு.க.வுடன்தான்  எங்களது கூட்டணி என்பதை நான் அறிவித்திருக்கிறேன்.’’

அரசியலில் விஜயகாந்த்துக்கு ‘சீனியர்’ நீங்கள். அவரது கட்சிக்கு 41 தொகுதிகள். ஆனால், உங்களுக்கு இரண்டு இடங்கள். சங்கடமாக இல்லையா?

‘‘இப்போது தொகுதிகளின் எண்ணிக்கை முக்கியமில்லை. தி.மு.க.வை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும். அதுதான் குறிக்கோள். இப்படி ஒரு பொதுவான குறிக்கோளை  எட்ட வேண்டுமானால் ஒத்த கருத்துள்ள கட்சிகள் ஒன்று சேர்ந்தால்தான் முடியும்.’’

பல்வேறு நாடார் சங்கங்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய ‘பெருந்தலைவர் காமராஜர் கட்சி’த் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட நீங்கள், அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்த  மறுநாளே அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டீர்களே?
‘‘பொதுவாக தேர்தல் வரும்போதெல்லாம் பல்வேறு நாடார் சங்கங்கள் தங்களுக்கென ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொள்வது உண்டு. அப்படித்தான் இம்முறையும் என்னை  அணுகிய அச்சங்கங்களின் நிர்வாகிகள் தலைவராக என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் ஒரு கட்சி ஆரம்பிப்பதற்கும், அங்கீகாரம் பெறுவதற்கும் நிறைய  நடைமுறைகள் உண்டு. இவற்றில் எதையுமே அந்த நிர்வாகிகள் கண்டு கொள்ளவில்லை. மாறாக,  எங்களது ‘சமத்துவ மக்கள் கட்சி’யை அழிக்கவும் முயன்றார்கள். அந் தக் குறுகிய எண்ணத்தின் பின்னணியில் பிரபல தொழிலதிபர் ஒருவரும் இருந்தார் என்பது எனக்குத் தெரிய வந்தது. அதனால் சுதாரித்துக் கொண்டேன்.’’

தி.மு.க.வோடு, காங்கிரஸ் மீண்டும் இணைந்திருப்பதால், அக்கூட்டணி பலம் வாய்ந்ததாகச் சொல்லப்படுகிறதே?

‘‘எந்தக் காரணங்களின் அடிப்படையில் காங்கிரஸ் மீண்டும் தி.மு.க. கூட்டணியில் தொடர்கிறது என்பதை நாடே அறியும். மூன்று தொகுதிகள் அதிகம் வேண்டும் என்பத ல்ல பிரச்னை. ‘ஊழலுக்கு ஆதரவுக் கரம் நீட்டினால் அதிக இடங்கள் தருவோம்’ என்கிற ஒப்பந்தம் இரு கட்சிக்கும் இடையே போடப்பட்டிருக்கலாம். அப்படியே மீண் டும் இணைந்தாலும், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வேலை செய்ய, வாக்களிக்க வேண்டாம் என்று தனது கட்சியினருக்கு தி.மு.க. கட்டளையிடாது என்பது என்ன  நிச்சயம்? இதனால் குழப்பம்தான் உருவாகும். அப்படியிருக்க, அந்தக் கூட்டணி பலம் வாய்ந்தது என்று எப்படிச் சொல்லமுடியும்?’’



தென்காசியில் ரத்ததான முகாமை ஏப்ரல் 15 2011 சரத்குமார் துவக்கி வைத்தார்


ஏப்ரல் 15 தென்காசி : தென்காசியில் நடந்த ரத்ததான முகாமை சரத்குமார் துவக்கி வைத்தார். தென்காசி கே.பி.ஆஸ்பத்திரியில் கே.பி.அறக்கட்டளை, மின்வாரிய அம்பேத்கர் பணியாளர்கள் மற்றும் பொறியாளர்கள், பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. முகாமை ச.ம.க.தலைவர் சரத்குமார் துவக்கி வைத்தார். டாக்டர் சங்கரகுமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் செந்தூர் பாண்டியன், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் மாடசாமி பாண்டியன், குற்றாலம் செயலாளர் குமார் பாண்டியன், மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், மாவட்ட துணை செயலாளர் வி.பி.மூர்த்தி, தென்காசி நகர செயலாளர் முத்துக்குமார், ஒன்றிய செயலாளர்கள் சங்கரபாண்டியன், செல்லப்பன், கலை இலக்கிய அணி சாந்தசீலன், மயில்ராஜ், மின்வாரியம் கே.பி.எம்.துரை, நெல்லை முகிலன், ச.ம.க.மாநில நிர்வாகி காளிதாசன், மாவட்ட செயலாளர் தங்கராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் துரை, ஒன்றிய செயலாளர் மிராசு, இந்திய கம்யூ., செயலாளர் செந்தில், மார்க்சிஸ்ட் கம்யூ., பால்ராஜ், புதிய தமிழகம் சந்திரன், மின்வாரிய அம்பேத்கர் பணியாளர்கள் சங்க மாநில இணை செயலாளர் முத்துக்குமார், மாரியப்பன், சசிகுமார், ஸ்டீபன் மைக்கேல்ராஜ், பீர்முகம்மது, அறக்கட்டளை தலைவர் கந்தசாமி, பீர்முகம்மது, ரெட்கிராஸ் சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Wednesday, April 13, 2011

205 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்-சரத்குமார்

நெல்லை: சட்டசபைத் தேர்தலில் 205 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.


தென்காசி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் சரத்குமார் போட்டியிடுகிறார். இன்று நெல்லையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு பிரகாசமாக உள்ளது. 205 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

ஓட்டுப் போடாத சரத்

சரத்குமாருக்கு சென்னையில்தான் ஓட்டு உள்ளது. ஆனால் தென்காசியில் போட்டியிடுவதால் அவர் தென்காசியில் இன்று முகாமிட்டு வாக்குச் சாவடிகளில் ஓட்டுப் பதிவைக் கண்காணித்து வந்ததால் சென்னை சென்று ஓட்டுப் போடவில்லை.

Sunday, April 10, 2011

Press Meet



Sarathkumar's Real Speech


பிரசாரத்தின்போது சரத்குமார் 2


பிரசாரத்தின்போது சரத்குமார்


Wednesday, April 6, 2011

ச.ம.க.வில் இணைந்த நா.ம.க. வேட்பாளர் பரமசிவன்

தென்காசி: தென்காசி தொகுதி நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர் பரமசிவன் நேற்று அக்கட்சியில் இருந்து விலகி சமத்துவ மக்கள் கட்சியில் இணைந்தார்.


தென்காசி தொகுதியில் நாடாளும் மக்கள் கட்சியின் சார்பில் பரமசிவன் என்பவர் போட்டியிடுகிறார். நேற்று அவரும், 100-க்கும் மேற்பட்டோரும் சேர்ந்து சமக தலைவர் சரத்குமாரை சந்தித்து நமகவில் இருந்து விலகி சமகவில் சேர்ந்தனர்.


இது குறித்து பரமசிவன் கூறியதாவது,

கட்சி தலைவர் கார்த்திக் 2 தடவை பிரசாரத்திற்கு வருவதாக கூறினார். ஆனால் அவர் வராமல் புறக்கணித்து வருகிறார். அவரை நம்பி எப்படி தேர்தலில் போட்டியிட முடியும். அதனால்தான் அக்கட்சியில் இருந்தும், தேர்தலில் இருந்தும் விலகி சமகவி்ற்கு ஆதரவு தெரிவித்து இணைந்துள்ளேன் என்றார்.
English summary
Tenkasi NMK candidate Paramasivan has resigned from the party and joined Sarathkumar's SMK. He has even withdrawn from the election to support SMK. 
 

கள் இறக்க அனுமதிக்கப்படும்: ஜெயலலிதா

பொள்ளாச்சி, ஏப்.6: அதிமுக ஆட்சிக்கு வரும்பட்சத்தில், தென்னை மற்றும் பனை தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கள் இறக்க அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று ஜெயலலிதா உறுதி அளித்தார்.  பொள்ளாச்சியில் புதன்கிழமை நடைபெற்ற அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா பேசியது:  தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடத்தி வரும் கருணாநிதிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். அந்த வகையில், இந்தத் தேர்தலில் தமிழகத்திற்கு சுதந்திரம் பெற்றுத் தாருங்கள். ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு மின்சாரம் மிகவும் முக்கியம். ஆனால், தமிழகத்தில் மின்சார வெட்டுப் பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. மாநிலத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள்கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமாகிவிட்டது. எந்தத் தொழிலை எடுத்தாலும், அதில் கருணாநிதி குடும்பத்தினர் உள்ளனர். திரைப்படத் தொழில், பத்திரிகை தொழில், மணல், கிரானைட் தொழில் என எல்லா துறைகளிலும் அவரது குடும்பத்தினர் புகுந்துவிட்டனர்.  இப்போது 6-வது முறையாக முதல்வராக வேண்டும் என்று கூறி கருணாநிதி வாக்கு கேட்டு வருகிறார். மீதமிருக்கும் துறைகளையும் அபகரிக்கத்தான் மீண்டும் வாக்கு கேட்டு வருகிறார். தமிழக மக்கள் ஏமாந்துவிடக்கூடாது.  இலங்கைத் தமிழர் பிரச்னையில் போர் நிறுத்தம் வேண்டி திடீரென 3 மணி நேர உண்ணாவிரத நாடகம் நடத்தியவர். ஒரே நாளில் பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட காரணமாக இருந்தவர்.  இலங்கைத் தமிழர்கள்: மத்திய அரசில் அதிமுக அங்கம் வகித்திருந்தால், மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றிருப்போம். இலங்கைத் தமிழர்களையும் காப்பாற்றி இருப்போம். ஆனால் கருணாநிதியோ, அப்படி எதுவும் செய்யவில்லை. இலங்கைத் தமிழர்களை அழித்து, தன் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டவர்.  2ஜி முறைகேட்டில் முதல்வர் குடும்பத்தினருக்கு தொடர்பு உள்ளது. ஆனால், மாட்டிக் கொண்டது ஆ.ராசா; உயிரை விட்டவர் சாதிக் பாஷா.  கருணாநிதி குடும்பத்தைத் தண்டிக்கக்கூடிய சக்தி, வாக்காளர்களாகிய உங்களிடம் தான் உள்ளது. எனவே, சிந்தித்து வாக்களியுங்கள். இப்படியே போனால், தமிழகத்தை குடும்ப வசம் ஆக்கிக் கொள்வார் கருணாநிதி. அவரது குடும்பத்தை அப்புறப்படுத்த வேண்டும்.  கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் அளவுக்கு கருணாநிதியின் குடும்பம் ஊழல் புரிந்துள்ளது. எனவே, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் அளவுக்கு, திமுக போட்டியிடும் அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழக்கும் அளவுக்கு, அதிமுகவை வெற்றி பெறச் செய்து வரலாற்றுச் சாதனையை நீங்கள் நிகழ்த்த வேண்டும்.  இத்தொகுதியில் பரம்பிக்குளம் -ஆழியாறு திட்டத்தில் ஆனைமலையாறு, நல்லாறு அணைக்கட்டு திட்டம் செயல்படுத்தப்படும். அம்பராம்பாளையம் திட்டத்தில் 294 கிராமங்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  நெசவுத் தொழிலாளர்களுக்கு இலவச மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தென்னை, பனை தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கள் இறக்க அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.  உடுமலை வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன், மடத்துக்குளம் வேட்பாளர் சி.சண்முகவேல், பொள்ளாச்சி வேட்பாளர் முத்துக்கருப்பண்ணசாமி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வால்பாறை (தனி) தொகுதி வேட்பாளர் எம்.ஆறுமுகம்  உள்ளிட்டோரை அறிமுகப்படுத்தி, ஜெயலலிதா வாக்கு சேகரித்தார்.  இதுதவிர கேரள மாநிலத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் சம்பத், சுந்தரமூர்த்தி உள்ளிட்ட 6 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியும், அவர் வாக்கு சேகரித்தார்.

ஒற்றுமையுடன், ஒருமித்து செயல்பட்டு வெல்ல வேண்டும்-சரத்குமார்


கோவை: சிறு சிறு குழப்பங்களை விளைவித்து கூட்டணியை சீர்குலைக்க முயல்கிறார்கள் எதிர்த் தரப்பினர். அதற்கு உடன்படாமல், ஒருமித்து செயல்பட்டு, ஒற்றுமையுடன் செயல்பட்டு வெற்றிக்கனியைப் பறிக்க வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.


கோவையில் இன்று அதிமுக கூட்டணி சார்பில் வ.உ.சி.மைதானத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சரத்குமார் பேசியதாவது...

6 நாட்களில் தேர்தல் வரப் போகிறது. இங்கு புதிய கூட்டணி உருவாகியிருக்கும்போது, புதிய உறவு மலர்ந்திருக்கும்போது, அங்கு சிறு சிறு குழப்பங்களை உருவாக்கி இதை சீர்குலைத்து விடலாமா என்று நினைத்து அது முடியாமல், போன ஏக்கம் எதிர்த் தரப்பிலே இருக்கிறது. எனவே அவர்களுக்கு இடம் கொடுத்து விடாதபடி ஒன்றுபட்டு, ஒருமித்து செயல்பட்டு வெற்றிக் கனியைத் தட்டிப் பறிக்க வேண்டும்.

இந்த ஐந்து ஆண்டு கால கருணாநிதி குடும்ப ஆட்சியில் விலைவாசி உயர்வு, மின் தட்டுப்பாடு, விவசாயிகளுக்குப் பாதிப்பு, மாணவர்களுக்குப் பாதிப்பு, தொழிலாளர்களுக்குப் பாதிப்பு, தொழிற்சாலைகளுக்குப் பாதிப்பு, பொருளாதார சீர்குலைவு என பல துயரங்கள். இதற்குக் காரணம், ஒரு குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சி.

இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பது தெள்ளத் தெளிவாகி விட்டது. இதை எப்படிச் சொல்கிறேன் என்றால் கடந்த 10 நாட்களாக நான் தென் மாவட்டங்களில், தென்காசி வேட்பாளரான நான் பிரசாரம் செய்யும்போது, எங்கு போனாலும் இரட்டை இலைச் சின்னத்தைக் காட்டி மக்கள் ஆரவாரமாக வரவேற்கிறார்கள்.

உலகிலேயே மிகப் பெரிய ஊழல் ஸ்பெக்ட்ரம் ஊழல்தான். ராசாதான் அந்த ஊழலுக்குச் சொந்தக்காரர். அந்த ஊழல் கட்சிக்குச் சொந்தக்காரர் கருணாநிதி. இருவரும் சொந்தக்காரர்கள்.

இன்று ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி ராசா சிறையில் இருக்கிறார். ஆனால் வெட்கமோ, தயக்கமோ இல்லாமல் இன்று தேர்தலை சந்திக்கிறது திமுக. இது மிகப் பெரிய அவமானம். பக்கத்து வீட்டுக்கு போலீஸ் வந்தாலே அவமானப்படுவோம் நாம். ஆனால் இவ்வளவு பெரிய ஊழலை செய்து விட்டு வெட்கமே இல்லாமல் வாக்கு கேட்க வருகிறார்கள்.

ஊழல் தொடர்பாக முதல்வரின் மனைவியை விசாரிக்கிறார்கள், மகளை விசாரிக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடக்கிறது என்கிறார் ப.சிதம்பரம். அதை வழிமொழிகிறார் சோனியா.

இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். இதற்காக ஒன்று திரண்டு, ஒற்றுமையோடு செயல்பட்டு வெற்றிக் கனியைப் பறிக்க வேண்டும். மக்களை பணத்தைக் கொடுத்து ஏமாற்றி விடலாம் என்று நினைக்கிறார்கள். அது நடக்காது. மக்கள் ஏமாளிகள் அல்ல, ஏமாறும் நிலையில் மக்கள் இன்று இல்லை.

ஏப்ரல் 13ம் தேதி சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டிய நாளாக மலரப் போகிறது. இது நமக்கான தேர்தல் அல்ல, மாறாக வருங்காலத்தில் இளைய தலைமுறையினர் சிறப்பாக வாழ வித்திடும் நாளாகும்.

இளம் தலைமுறையினர் சரியான பாதையில் போக வேண்டும் என்றால் தமிழகத்தில் நல்லாட்சி மலர வேண்டும், அது புரட்சித் தலைவியின் ஆட்சியாக இருக்க வேண்டும் என்றார் சரத்குமார்.

கூட்டத்தில் சிபிஎம் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். விஜயகாந்த் மட்டும் வரவில்லை.

எங்களுக்கு சீட் முக்கியமில்லை என, சரத்குமார் பேசினார்.

அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் கோவையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், தென்காசி தொகுதி வேட்பாளருமான நடிகர் சரத்குமார் பேசுகையில்,
ஜெயலலிதா தலைமையிலான கூட்டணி வெற்றி கூட்டணி. இன்னும் 6 நாட்கள் இருக்கிறது. ஆகையால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட்டு வெற்றி பெற வேண்டும். கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் மின்வெட்டு, விலைவாசி உயர்வு, மின்வெட்டால் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தொழிலாறர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டிருக்கிறது.
திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பது தெள்ள தெளிவாகி விட்டது. இதை எப்படி சரத்குமார் சொல்கிறார் என்றால், கடந்த 10 நாட்களாக தென் மாவட்டங்களில் தென்காசி வேட்பாளராக நின்கின்ற நான் சுற்றுப் பயணம் செய்கின்றபோது, அனைவரும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று சொல்லுகிறார்கள்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே சமத்துவ மக்கள் கட்சி திமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று சொன்னதுடன், ஜெயலலிதாவை சந்தித்து அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்று தெரிவித்ததுடன், இரண்டு தொகுதிகளை ஒதுக்கினார்கள்.
வெளியே வந்தவுடன் உங்களுக்கு இரண்டு தொகுதிகள்தானா என்று பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். திமுகவை அகற்ற வேண்டும் என்றுதான் கூட்டணி என்றும், சீட் எங்களுக்கு முக்கியமில்லை என்றும் நான் கூறினேன் என்றார்.

Tuesday, April 5, 2011

தென்காசி காங்கிரஸார் சரத்குமாருடன் சந்திப்பு

தென்காசி, ஏப். 4: 



தென்காசியில் ச.ம.க., வேட்பாளர் ஆர்.சரத்குமாரை சந்தித்து நகர காங்கிரஸ் நிர்வாகிகளில் ஒரு பிரிவினர் ஆதரவு தெரிவித்தனர்.தென்காசி தொகுதியில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் ச.ம.க., வேட்பாளர் ஆர்.சரத்குமார் போட்டியிடுகிறார். தென்காசியில் இரண்டு பிரிவாகச் செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சியினரில் ஒரு பிரிவினர் திங்கள்கிழமை சரத்குமாரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் ரமேஷ், நகர பொதுச்செயலர் காஜாமைதீன், மாவட்ட துணைத் தலைவர் ஜோதிடர் முருகன், இளைஞர் காங்கிரஸ் செயலர் மைதீன்பிச்சை, கபீர் உள்ளிட்டோர் சரத்குமாரைச் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். மேலும், தமிழ்நாடு கல்லுடைக்கும் தொழிலாளர் சங்கத்தினரும் திங்கள்கிழமை சரத்குமாரை சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். தென்காசி வட்டார அமைப்பாளர் முருகன், கடையநல்லூர் கிளைத் தலைவர் சண்முகநாதன், செயலர் மணிகண்டன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Source: Click Here  Dinamani

கேள்விக்குறியாகும் "க' வன்னாவின் வெற்றி!


நடிகர் சரத்குமாரும், திருநெல்வேலி மாவட்ட திமுக செயலர் வீ. கருப்பசாமிபாண்டியனும் தேர்தல் களத்தில் மோதிக்கொள்ளும் தொகுதி தென்காசி.திமுக தலைமையிலான கூட்டணியில் இப்போதையை தென்காசி எம்எல்ஏவும், அக் கட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செயலருமான வீ. கருப்பசாமிபாண்டியன் போட்டியிடுகிறார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவரும், நடிகருமான ஆர். சரத்குமார் போட்டியிடுகிறார்.

தென்காசி தொகுதி மிகுந்த தொழிற்சாலைகளோ, அதிக அளவில் விவசாயமோ இல்லாத பகுதி. இங்கு ஓரளவு பூக்கள், காய்கனிகள் உற்பத்தியாகின்றன. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் வகையில் குற்றாலம் அமைந்துள்ளது இத்தொகுதியின் கூடுதல் சிறப்பு.இத் தொகுதியில் இப்போது, 1,06,025 ஆண்கள், 1,05,878 பெண்கள் என மொத்தம் 2,11,903 வாக்காளர்கள் உள்ளனர். 


இத்தொகுதியில் தென்காசி நகராட்சி, 5 பேரூராட்சிகள், 35 ஊராட்சிகள் அடங்கியுள்ளன.1957-ம் ஆண்டு முதல் இதுவரையில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 6 முறையும், திமுக, அதிமுக தலா இரண்டு முறையும், தமாகா மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளனர். இதிலிருந்தே இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் அதிகம் என்பது தெரியவருகிறது.

காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் தான் இங்கு போட்டியிடும் கட்சிகள் இதுவரை வெற்றிபெற்று வந்துள்ளன.இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்லாமல் அதிமுக, திமுக, புதிய தமிழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள், தேமுதிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிகளுக்கு குறிப்பிட்ட அளவில் வாக்கு வங்கி உண்டு. தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியைப் பொறுத்தவரை வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வாக்குகள் என்று சொல்வதாக இருந்தால் தேவர்கள், நாயக்கர்கள், முஸ்லிம்கள், பள்ளர் என்று பரவலாக அழைக்கப்படும் தேவேந்திரகுல வேளாளர்களின் வாக்குகளைத்தான் குறிப்பிட வேண்டும். ஆனால், பிள்ளைமார் வாக்குகளும், பிராமணர்களின் வாக்குகளும்தான் வெற்றிக்காற்றைத் திசைதிருப்பும் சக்தி படைத்தவை என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து. 

கடந்த 2006 சட்டபேரவைத் தேர்தலில் இங்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் வீ. கருப்பசாமிபாண்டியன் 69,755 வாக்குகளும், மதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் இராம.உதயசூரியன் 51,097 வாக்குகளும், பாஜக வேட்பாளர் 5,190 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் காமராஜ் 5,081 வாக்குகளும் பெற்றனர்.ஆனால் 2009-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெள்ளைப்பாண்டி 57,069 வாக்குகளும், இ.கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட பொ. லிங்கம் 47,410 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் 15,644 வாக்குகளும், புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் க. கிருஷ்ணசாமி 13,582 வாக்குகளும் பெற்றனர்.அதிமுக தலைமையிலான கூட்டணியில் மக்களவைத் 

தேர்தலில் இடம்பெற்ற கட்சிகளில் மதிமுகவைத் தவிர பிறகட்சிகள் அனைத்தும் இப்போதும் அந்த அணியிலேயே நீடிக்கின்றன. இதுதவிர கூடுதலாக மனிதநேய மக்கள் கட்சியின் வாக்குகளும் இந்த அணிக்கு பலம் வாய்ந்ததாகும்.தமிழகத்தின் பிறபகுதிகளில் வாக்காளர்கள் தங்களுடைய வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கும், தென்காசி தொகுதியில் தேர்வு செய்வதற்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. குறிப்பாக இந்தத் தேர்தலில் ஜாதி மற்றும் மதம் தென்காசி தொகுதியைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கிய காரணியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கு கடந்த காலங்களில் தென்காசி பகுதியில் நடைபெற்ற பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்களே சாட்சி.

இப்போதைய நிலவரப்படி கூட்டணி கட்சிகளின் அடிப்படையிலும், ஜாதி ரீதியான வாக்கு அடிப்படையிலும், அதிமுக தலைமையிலான சமக கூட்டணி வேட்பாளர் ஆர். சரத்குமாரின் வெற்றிக்கு கூடுதல் பலம் அளிக்கும் காரணங்கள். திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ்,பாமக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆனால் இவற்றில் இப்பகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி உள்ளது. அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்து, துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவாளராக தன்னை காட்டிக் கொண்டு வெகு குறைந்த காலத்திலேயே மாவட்டச் செயலர் பதவியை வீ.கருப்பசாமிபாண்டியன் பெற்றார். இதனால் இந்த மாவட்டம் முழுவதும் திமுகவில் பல்வேறு அணிகள் காணப்படுகின்றன. இவற்றில் பதவி கிடைக்காதவர்கள், திமுகவிலேயே மாற்று அணியைச் சேர்ந்தவர்கள் கருப்பசாமிபாண்டியனுக்கு முழுமனதுடன் பணியாற்றுகிறார்களா என்பதுகூடச் சந்தேகம்தான். 

ஸ்டாலின் ஆதரவாளரான கருப்பசாமிபாண்டியன் வெற்றி அடைவதை அழகிரியே விரும்பவில்லை என்றும் அவரது ஆதரவாளர்கள் தென்காசிப் பக்கமே தலைகாட்டவில்லை என்றும் தெரிகிறது.தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியைப் பொருத்தவரை, புதிய தமிழகம் கட்சியும், தேமுதிகவும், மனிதநேய மக்கள் கட்சியும் கணிசமான வாக்கு வங்கியை உடைய கட்சிகள். அதிமுகவுக்கும் இந்தத் தொகுதியில் கணிசமான வாக்குகள் உண்டு. போதாக்குறைக்கு நாடார் சமுதாயத்தின் வாக்கும், பிரபல திரைப்பட நடிகர் என்பதால் இயற்கையாகவே அதிமுக கூட்டணி வேட்பாளரான சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாருக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கும் "க'வன்னா அண்ணாச்சி என்று பரவலாக அழைக்கப்படும் மாவட்ட திமுக செயலாளர் வீ. கருப்பசாமிபாண்டியனின் வெற்றியைக் கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

SOURCE: click here  Dinamani

தென்காசியில் நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்

தென்காசி, ஏப்ரல் 5:
தென்காசியில் நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த வேட்பாளர் பரமசிவன் இன்று திடீரென அதிமுகவில் இணைந்தார். மேலும், அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமாரை ஆதரித்து பிரசாரம் செய்யப் போவதாகவும் அறிவித்தார். வேட்புமனு பரிசீலனை முடிந்து தொகுதியில் வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் திடீரென ஒரு வேட்பாளர் வேறு கட்சியில் சேர்ந்துள்ளது தென்காசியில் பேசப்படும் விஷயமாக ஆகியுள்ளது.

தேர்தல் பிரச்சாரம்

சிறுவர்களின்  மகிழ்சில்  .....  தேர்தல் பிரச்சாரம்...

நன்றி : தினமலர்