Tuesday, July 1, 2014

உறை கிணறு தண்ணீர் சுத்தம் இல்லையென்றால் சொந்த செலவில் புதிய கிணறு: சரத்குமார்

தென்காசி, ஜுன். 24–
தென்காசி தொகுதிக்குட்பட்ட திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் ரூ.10 லட்சம் செலவில் அங்குள்ள குளத்திற்கு தென்புறம் புதிதாக உறை கிணறு அமைக்கப்பட்டு வருகிறது. இதன் அருகில் சுடுகாடு இருப்பதாக கூறி அப்பகுதியை சேர்ந்த சிலர் அங்கு உறைகிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக சரத்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனுவும் அளித்தனர். 
இதையடுத்து எம்.எல்.ஏ. நேற்று அப்பகுதியை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அங்கு திரண்டு வந்த பொதுமக்களில் சிலர் அந்த பகுதி அருகில் சுடுகாடு அமைந்திருப்பதால் அங்கு வெட்டப்படும் உறைகிணறு தண்ணீர் மாசுபட வாய்ப்பு உள்ளது. எனவே உறைகிணறு வெட்டும் பணியை நிறுத்தி விட்டு, வேறு இடத்தில் புதிதாக அமைக்க வேண்டுமென வலியுறுத்தினர். மேலும் சிலர் ஏற்கனவே அந்த பகுதியில் இருந்து ஆழ்துறை கிணறு மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டதாகவும், இதனால் தண்ணீர் சுத்தமானதாகவே இருப்பதாக தெரிவித்தனர். இரு தரப்பினரிடம் சரத்குமார் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் அவர் கூறுகையில், பஞ்சாயத்து நிதி ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் உறைகிணறு அமைக்கும் பணியை முழுவதுமாக முடித்து விட்டு, அதில் கிடைக்கும் தண்ணீரை சோதனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படும். தண்ணீர் சுத்தமானதாக இல்லையென்றால் அந்த உறைகிணற்றை முழுமையாக மூடி விட்டு, புதிதாக தனது சொந்த செலவில் வேறு ஒரு இடத்தில் உறை கிணறு அமைத்து பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அப்போது தென்காசி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சங்கரபாண்டியன், பஞ்சாயத்து தலைவர் ஆறுமுகச்சாமி, ச.ம.க. மாவட்ட நிர்வாகிகள் துரை, கண்ணன், தொகுதி ஒருங்கிணைப்பாளர் நந்து, ஊராட்சி செயலாளர் பண்டாரசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.

தி.மு.க.வை மக்கள் ஒதுக்கி விட்டனர்: சரத்குமார் பேட்டி

தூத்துக்குடி, ஜூன்.30-

தூத்துக்குடி டி.சவேரியார்புரத்தில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கொடியேற்று விழா நேற்று காலையில் நடந்தது. கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, எம்.சேவியர் நாடார் நினைவு கொடிக்கம்பத்தில் கட்சி கொடியேற்றினார்.

இதை தொடர்ந்து சரத்குமார், நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். மீனவர்கள் பிரச்சினைகளை தீர்க்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். மத்திய அரசும் செவி சாய்த்து வருகிறது.

தி.மு.க. தலைவர், தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது என்று கூறியுள்ளார். தி.மு.க.வை யாரும் அழிக்க முயற்சிக்கவில்லை. மக்களே அவர்களை ஒதுக்கி வைத்து விட்டனர்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சிறப்பான ஆட்சியால், பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. சென்னையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்தது தொடர்பாக முதல்- அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, August 15, 2012

சுதந்திர தினம்: தலைவர் சரத்குமார் வாழ்த்து

சென்னை, ஆக.- 15 - நாடெங்கும் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் விடுத்துள்ள செய்தி வருமாறு:- நாம் 66-வது சுதந்திர தின விழாவை கொண்டாடி மகிழ்வோம். நாம் ஏற்க வேண்டிய சபதங்கள் எத்தனையோ இருப்பினும் நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தைப் போற்றி பேணிக்காப்பதில் நாம் மேலும் உறுதியான நடவடிக்கைகளில் இறங்கிட வேண்டும். நம் நாட்டின் உயர்ந்த பாரம்பரிய பண்புகள் பழக்க வழக்கங்களைவிட மேற்கத்திய கலாச்சாரங்கள் உயர்ந்தவை அல்ல. அவற்றிலிருந்து தேவையானதை எடுத்துக் கொள்ள வேண்டும், அவற்றிற்கு  நாம் அடிமையாகிவிடக்கூடாது. ஜனநாயகப்  பண்புகளைப் போற்ற வேண்டும். தனி மனித ஒழுக்கங்களை எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டும். இந்தியா 100 சதவிகிதம் கல்வி வளர்ச்சி பெற்ற நாடாக அறிவிக்கும் பொருட்டு அனைவரும் பாடுபட வேண்டும், நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ், மகாத்மாகாந்தி, நேருஜி, வல்லபபாய் பட்டேல், திலகர், வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய பாரதியார், பெருந்தலைவர் காமராஜர் போன்ற சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட எண்ணற்ற தலைவர்களின் உழைப்பையும், அவர்கள் இந்த தேசத்திற்காக பாடுபட்டதையும் நம் இளைஞர்களுக்கும், சந்ததியினர்களுக்கும் விளக்க வேண்டும். அவர்கள் வழி நடக்க வேண்டும். சமத்துவம் வளர, சமதர்மம் நிலைத்திட இந்நன்னாளில் உறுதியேற்போம். அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

தீரன் சின்னமலை நினைவிடத்தில் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. அஞ்சலி

சென்னை, ஆக.- 5 - தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு அருகில் ஓடாநிலை என்ற கிராமத்தில் உள்ள தீரன் சின்னமலை நினைவிடத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. அஞ்சலி செலுத்தினார்.
பெருந்துறையில் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏவிற்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட வாகனங்களுடன் ஊர்வலமாகச் சென்று தீரன் சின்னமலை நினைவிடம் உள்ள ஓடாநிலை கிராமத்திற்கு புறப்பட்டுச் சென்று அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்தியபின் அங்கு நடந்த அரசு விழாவிலும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் துணைத் தலைவர் ஏ.நாராயணன் எம்.எல்.ஏ.,  பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், கொள்கை பரப்புச் செயலாளர் ஆர்.ஜெயப்ரகாஷ், துணைப் பொதுச் செயலாளர் என்.என்.சண்முகசுந்தரம் ஆகியோருடன் தணியரசு எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். மாவட்டச் செயலாளர்கள் ஈரோடு தெற்கு கம்பளியாம்பட்டி- செல்வராஜ், ஈரோடு வடக்கு-லாலா கணேசன், ஈரோடு மாநகர்- சின்னச்சாமி, சிவகுமார், நாமக்கல்- சுரேஷ்காந்தி, திருப்பூர் மாநகரம் - ரத்னா ஜெ.மனோகரன், திருப்பூர் தெற்கு - தளி சிவகுமார், திருப்பூர் வடக்கு - அவினாசி முருகேசன், சேலம் மாநகர்- ஜெ.கே.முருகேசன், சேலம் மேற்கு - மைக்கேல் தங்கராஜ், சேலம் கிழக்கு - ஜவஹர், கோவை மாநகர்- ஏ.கணேசன், கோவை வடக்கு - பி நேருஜி, கோவை தெற்கு - எஸ்.ஜெய்சங்கர், கரூர் - பி.மனோகரன், ஐ.கே.டி, தங்கவேல், திருச்சி மாநகர் - ஏ.பி.மஹேஷ்வரா, திருச்சி புறநகர் டி.முரளிகிருஷ்ணன் மற்றும் மாவட்ட நிர்வாகிகளும் சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Thursday, August 9, 2012

குற்றால சாரல் திருவிழாவில் சமத்துவ கட்சி தலைவர் உறுதி

தென்காசியில் ரிங் ரோடு விரைவில் அமைக்கப்படும் என்று குற்றால சாரல் திருவிழாவில் சமத்துவ கட்சி தலைவர் உறுதி கூறி உள்ளார் ..

குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் எதிர்பார்த்த சாரல் திருவிழா நேற்று துவங்கியது.குற்றாலத்தில் சாரல் திருவிழா நேற்று துவங்கியது. குற்றாலம் கலைவாணர் அரங்கில் நடந்த துவக்கவிழா நிகழ்ச்சிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ் தலைமை வகித்தார். கோட்டாட்சியர் ராஜகிருபாகரன் வரவேற்புரையாற்றினார். தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.

விழாவில் சரத்குமார் பேசுகையில், குடும்பத்துடன் பொழுது போக்குவதற்கும், சுற்றுலா செல்வதற்கும் குற்றாலம் ஏற்ற வகையில் உள்ளது. தென்காசியில் ரிங் ரோடு விரைவில் அமைக்கப்படும். அருவிக்கரை பகுதியை நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குற்றாலத்தில் சுற்றுலா தரத்தை உயர்த்தும் வகையில் ஐந்தருவியில் 6 கோடி ரூபாய் செலவில் பூங்கா அமைக்கப்படுகிறது என்றார்.
நேற்று மாலை துவங்கிய திருவிழா நாளையுடன் முடிகிறது என்பது குறி்ப்பிடத்தக்கது.

Thursday, July 26, 2012

23 தமிழக மீனவர்களையும் உடனே விடுவிக்க- ஆர்.சரத்குமார் கோரிக்கை

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்களையும் உடனே விடுவிக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான ஆர்.சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுபற்றி தென்காசி.எம்.எல்.ஏ. சரத்குமார் கூறியிருப்பதாவது:- மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 23 பேர்களை இலங்கை அரசு கைது செய்து சிறையில் அடைத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அவர்களை விடுவிக்க இந்திய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலங்கையில் போர் முடிந்த பிறகு அங்குள்ள இலங்கை மீனவர்களும் மீன்பிடி தொழிலில் ஈடுபட துவங்கி விட்டனர். எனவே நமது மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்ட வேண்டியது இந்திய அரசின் கடமையாகும். அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்துவது, தூதுவரை அனுப்புவது, என்று பிரச்சினைகளை தள்ளிப்போடுவதே மத்திய அரசின் செயலாக இருந்து வருகிறது.
...
தமிழர்களை வஞ்சித்து வரும் இலங்கை அரசும், இலங்கைக்கு துணை போகும் மத்திய அரசும், பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படாது.

நாட்டுபடகு கடலுக்கு செல்லும் நாட்களில் இயந்திர படகு மீன்பிடிக்க செல்லக்கூடாது. அது போன்று இலங்கை மீனவர்களும், தமிழக மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி மீன்பிடிப்பதில் ஒழுங்கு முறைகளை ஏற்படுத்தி கொண்டால் இது போன்ற பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்பட்டு விடும். எனவே இருநாட்டு மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்திடும் வாய்ப்பை இந்திய இலங்கை அரசுகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இலங்கை சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 23 மீனவர்களையும் மேலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழர்களையும் விடுவிக்க உடனடியாக மத்திய அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள 5 மீனவர்களையும் பிடித்து அவர்கல் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளார்கள். அவர்களையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்களையும் உடனே விடுவிக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான ஆர்.சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுபற்றி தென்காசி.எம்.எல்.ஏ. சரத்குமார் கூறியிருப்பதாவது:- மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 23 பேர்களை இலங்கை அரசு கைது செய்து சிறையில் அடைத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அவர்களை விடுவிக்க இந்திய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலங்கையில் போர் முடிந்த பிறகு அங்குள்ள இலங்கை மீனவர்களும் மீன்பிடி தொழிலில் ஈடுபட துவங்கி விட்டனர். எனவே நமது மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்ட வேண்டியது இந்திய அரசின் கடமையாகும். அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்துவது, தூதுவரை அனுப்புவது, என்று பிரச்சினைகளை தள்ளிப்போடுவதே மத்திய அரசின் செயலாக இருந்து வருகிறது.
...
தமிழர்களை வஞ்சித்து வரும் இலங்கை அரசும், இலங்கைக்கு துணை போகும் மத்திய அரசும், பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படாது.

நாட்டுபடகு கடலுக்கு செல்லும் நாட்களில் இயந்திர படகு மீன்பிடிக்க செல்லக்கூடாது. அது போன்று இலங்கை மீனவர்களும், தமிழக மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி மீன்பிடிப்பதில் ஒழுங்கு முறைகளை ஏற்படுத்தி கொண்டால் இது போன்ற பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்பட்டு விடும். எனவே இருநாட்டு மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்திடும் வாய்ப்பை இந்திய இலங்கை அரசுகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இலங்கை சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 23 மீனவர்களையும் மேலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழர்களையும் விடுவிக்க உடனடியாக மத்திய அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள 5 மீனவர்களையும் பிடித்து அவர்கல் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளார்கள். அவர்களையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

குற்றாலத்தில் சரத்குமாரின் சொந்த செலவில் கட்டப்பட்டுள்ள காசு போட்டு பயன்படுத்தும் கழிவறை


குற்றாலம்: குற்றாலத்தில் தென்காசி எம்.எல்.ஏ.வும், சமக தலைவருமான சரத்குமாரின் சொந்த செலவில் கட்டப்பட்டுள்ள காசு போட்டு பயன்படுத்தும் கழிவறை மக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறக்கப்பட உள்ளது.

தென்காசி எம்.எல்.ஏ.வும், சமக தலைவருமான சரத்குமார் ரூ.7.50 லட்சம் செலவில் குற்றலாத்தில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக காசு போட்டு பயன்படுத்தும் கழிவறையை கட்டியுள்ளார்.

மெயினருவி அருகே சுமார் 45 சதுர அடியில் அமைக்கப்பட்டு்ள்ள இந்த கழிவறையை பராமரிக்க மனிதர்கள் தேவையில்லை.
...
இரண்டு ரூபாய் அல்லது இரண்டு 1 ரூபாய் நாணயத்தை செலுத்தினால் தானாகவே கதவு திறந்து கொள்ளும். பின்னர் உள்ளே உள்ள கதவை திறந்து கொள்ளலாம்.

கழிவானது சுமார் 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பைபர் டேங்கில் சேகரிக்கப்படுகிறது. அதில் உள்ள பாக்டீரியா தொழில் நுட்பமானது கழிவுகளை சுத்தப்படுத்தி மற்றொரு டேங்கிற்கு வெறும் தண்ணீராக மட்டும் செல்கிறது.

இந்த தண்ணீரை மீண்டும் உபயோகப்படுத்தும் அளவுக்கு மறு சுழற்சி செய்யலாம்.
தற்போது குற்றாலத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவறையில் இந்த மறுசுழற்சி முறை மட்டும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. கழிவறையில் தண்ணீர், மின்விசிறி வசதி ஆகியவை உள்ளன. கழிவறையை உபயோகப்படுத்துபவர்கள் சுத்தப்படுத்த மறந்தாலும் தானாகவே சுத்தப்படுத்திக் கொள்ளும் வகையில் சென்சர் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இந்த கழிவறை மக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறக்கப்பட உள்ளது.

Monday, July 16, 2012

பாராளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க.வுன் கூட்டணி தொடரும்

சேலம் ஜூலை.- 17 - வரும் பாராளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என சேலத்தில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நடந்த முப்பெரும் விழாவில் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 110 வது பிறந்த நாள் விழா, அகில இந்திய சமத்துவ கட்சியின் தலைவர் சரத்குமாரின் 58 வது பிறந்த நாள் விழா,கட்சி வளர்ச்சி நிதி வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று முன் தினம் மாலை நடைப்பெற்றது. விழாவிற்கு சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.கே.என்.முருகேசன் தலைமை வகித்தா.மாஇல துணை பொதுச்செயலாளர் என்.என்.சண்முகசுந்தரம், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வாழப்பாடி ஜவஹர்,மேற்கு மாவட்ட செயலாளர் மைக்கேல் தங்கராஜ், நாமக்கல் மாவட்ட செயலாளர் சுரேஷ் காந்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரியும்,கட்சியின் அவைத்தலைவருமான செல்வராஜ், மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன்,மாநில துணைத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் எம்.எல்.ஏ. ஆகியோர் விழா பேரூரையாற்றினர். விழாவில் அகில இந்திய சமத்துவ கட்சியின் நிறுவன தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு 50 பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் மற்றும் மாவட்ட அளவில் அரசுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது.அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டது.6 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. படிக்காத மேதையாக இஉரந்த காமராஜர் நாட்டை ஆண்டுள்ளார். அவரது பிறந்தநாளை தமிழக அரசு கல்வி எழுச்சி நாளாக கொண்டாடி வருகிறது.ஞாயிற்றுக் கிழமை பள்ளி விடுமுறையாக இருந்தும் மாணவ,மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டது மகிழ்ச்சியை அளிக்கிறது. காமராஜர் 1954 ஆம் ஆண்டு முதல் 1963 ஆம் ஆண்டு வரை காமராஜர் தமிழகத்தின்  முதல் அமைச்சராக இருந்து சிறப்பான ஆடசி செய்தார்.கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார். குழந்தைகள் பசியாறி படிக்க வேண்டும் என்பதற்காக மதிய உணவு திட்டம் தந்தவர். தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டு வரும் நோக்கில் அவரது ஆட்சியில் 19 தொழிற்பேட்டைகளை கொண்டு வந்தார். 2 முஐ பிரதமர் பதவி தேடி வந்தும் அதை உதறி தள்ளியவர். இன்று சமத்துவ தலைவராக அவர் விளங்கி வருகிறார்.காமராஜர் விட்டு சென்ற பணிகளை நாம் தொடர்ந்திட வேண்டும். முதல்வர் ஆனபோது அவருக்கு சரித்திரம் தெரியுமா?பூகோளம் தெரியுமா? என்று தி.மு.க.வினர் கேலி செய்தனர். அவர்களுக்கு காமராஜர் அளித்த பதில் என்ன? தெரியுமா? நாட்டில் உள்ள கிராமங்களை தெரியும். நதிகள் எத்தனை இருக்கிறது என்பது தெரியும்.நகரங்கள், தொழில்கள் இருப்பது தெரியும். இது போன்ற சரித்திரமும்,பூகோளமும்தான் தனக்கு தெரியும் என்றார்.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க.நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.அரசியல் மாற்றத்திற்காக இங்கு முப்பெரும் விழா நடக்கவில்லை.நல்லவரோடு வல்லவரோடு திறமையான, உறுதியானவரோடு இருக்கிறோம். எங்கள் கூட்டணி பாராளுமன்ற தேர்தலிலும் தொடரும். இளைஞர்களும், படித்தவர்களும் அரசியலுக்கு வரவேண்டும்.நான் முதல்வராகும் எண்ணம் இல்லை. உங்களில் ஒருவராக இருக்க விரும்புகிறேன்.
சட்டமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க.கூட்டணியில் 41 தொகுதியில் நின்று 29 தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் என்னால்தான் அ.தி.மு.க.ஆட்சி நடக்கிறது என்கிறார்கள். எது உண்மை என்று மக்களுக்கு தெரியும். ஆனால் இப்போது சட்டமன்றத்தில் ஆளையே காணும். தான் சொன்னதையே மறந்துவிடக் கூடியவர் தற்போது சட்டமன்றத்திற்கு வருவதில்லை.கேட்டால் வழக்கு நிலுவையில் இருக்கிறது என்கிறார்.வழக்கு முடிய 5 ஆண்டுகள் ஆகும்.அதுவரை அவர் சட்டமன்றத்திற்கு வரமாட்டாரா? தே.மு.தி.க.வெற்றி பெற்ற தொகுதியில் மட்டும் அவர் மக்களை சந்தித்து வருகிறார். அதே போல நானும் வருகின்ற செப்டம்பர் மாதம் தே.மு.தி.க.வெற்றி பெற்ற 29 தொகுதிகளிலும் மக்களை சந்திக்க இருக்கிறேன். அதே போல் தி.மு.க.தலைவர் சிறை நிரம்பும் போராட்டம் நடத்தினார். எதற்காக நடத்தினால் இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்காகவா? பெட்ரோல் விலை உயர்வுக்காகவா? முல்லை பெரியார்,காவிரி பிரச்சனைக்காகவா? கடந்த ஆட்சி காலத்தில் தவறு செய்த தி.மு.க.முன்னாள் அமைச்சர்களை  அ.தி.மு.க.அரசு கைது செய்தவதை கண்டித்து சிறை நிரம்பும் போராட்டம் நடத்துகிறார். நம்மால் முடியும், என்னால் முடியும்,என்ற தத்துவத்தை மனதில் வைத்து செயல்பட வேண்டும். நான் தமிழக முதல்வரை சந்தித்து எம்.பி.பி.எஸ்.,என்ஜீனியரிங் கல்லூரி வரை இலவச கல்வி கொடுங்கள் என எடுத்து சொல்வேன். அப்படி செய்துவிட்டால் மக்களை உங்களை எப்போது மறக்க மாட்டார்கள் என்பேன். மக்களுக்கு என்றும் உழைக்கும் கட்சியாக வருங்காலத்தில் நாமும் ஆட்சி பீடத்தில் இருக்கும் நிலையை நீங்கள் உருவாக்கிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் கட்சி வளர்ச்சி நிதியாக ரூ.1 கோடிக்கு மேல் வழங்கப்பட்டது. விழாவில் மாநில துணை பொதுச்செயலாளர் ஏ.என்.சுந்தரேசன்,கொள்கை பரப்புச் செயலாளர் மணிமாறன், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் பன்னீர் செல்வம், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் விவேகானந்தன், இளைஞர் அணி துணை செயலாளர் அந்தோணிராஜ்,ஐஸ் ஹவுஸ் தியாகு,நடிகர் கராத்தே ராஜா, தென்மண்டல செயலாளர் என்.சுந்தர், சேலம் மாநகர் மாவட்ட பொருளாளர் பவர் விஜய்,ஆத்தூர் மண்டல செயலாளர் நடராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விஜயகாந்த்தை விட மாட்டேன், தேமுதிக ஜெயித்த தொகுதிக்கெல்லாம் போவேன்: சரத்குமார்

மேடையில் பேசும்போதே தான் என்ன பேசுகிறோம் என்பது கூடத் தெரியாதவர் விஜயகாந்த். அவரை நான் விட மாட்டேன், அவரது கட்சி ஜெயித்த ஒவ்வொரு தொகுதிக்கும் போய் அவருக்கு எதிராக பிரசாரம் செய்வேன் என்று கூறியுள்ளார் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.

சேலத்தில் காமராஜர் பிறந்த நாள், சரத்குமார் பிறந்த நாள், கட்சி நிதியளிப்பு நாள் என முப்பெரும் விழாவைக் கொண்டாடியது சரத்குமார் கட்சி.

நிகழ்ச்சியில் சரத்குமார் பேசுகையில், நம்மை நல்ல இடத்தில் வைத்திருக்கிறார் முதல்வர் அம்மா. நாம நல்லவரோடு இருக்கோம், வல்லவரோடு இருக்கோம். நான் இப்பவே அமைச்சராக தான் இருக்கிறேன். அம்மா அப்படிதான் என்னை நல்ல இடத்தில் வைத்திருக்கிறார் அவருக்கு ஒரே ஒரு கோரிக்கை இன்று கல்வி வணிகமாகிவிட்டது எனவே கல்வியை இலவசமாக தர முயற்சிக்கவும்.

ஒரு மைலுக்கு ஒரு பள்ளிக்கூடம் வேண்டும் என விரும்பியவர் காமராஜர். கல்வி ஒளியேற்றியவர் அவர். அவரின் வழியில் கல்வி ஒளி ஏற்ற கூடியவர்கள் நாம். உங்களில் ஒருவர் முதல்வர் ஆகணும் என்பதற்காக தான் இந்த முப்பெரும் விழாவே.

சிறை நிரப்பும் போராட்டம் செய்தவர்கள் முல்லை பெரியார் போன்ற மக்கள் பிரச்சனைக்காக ஏன் செய்யவில்லை? இப்போ சொல்றாரு ஈழத்தை மீட்டு தருவேன்னு அத ஏன் இங்க இருந்து சொல்றிங்க அங்க போயி (இலங்கை) கேட்க வேண்டியது தானே!.

41 பெற்று அதில் 29ஐ வென்றவர் ஒருவர். என்னால் தான் ஆட்சி அமைந்ததுனு சொல்லிக்கிட்டு இருந்தாரு, இப்போ ஆளையே காணோம். மேடையில பேசும் போதே என்ன பேசினோம்னு மறந்துடுராரு. அவர் சட்டமன்றத்திற்கு வருவதில்லை, கேட்டால் வழக்கு என்கிறார். வழக்கு ஐந்து வருடம் நீடித்தால் ஐந்து வருடமும் வரமாட்டாரா? அப்படி என்றால் அவர் கட்சிக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்த மக்களின் கதி?

அவரை விடமாட்டேன், அவரின் 29 தொகுதிகளுக்கும் இனி ஒவ்வொன்றாக போக போகிறேன் மக்கள் பணி ஆற்றுவேன்.

நான் என் தாய்க்கு பிறந்தேன். கருவில் இருக்கும் வரை நான் கருவே. நாடார் அல்ல. எனவே நமது காமராஜரையும் நாடார் என சுருக்க வேண்டாம் அவர் பாரத தலைவர் இந்த கொள்கையோடு மக்கள் பணி செய்வோம் நமக்கு பதவி முக்கியமில்லை சேவையே முக்கியம் என்று பேசினார் சரத்குமார்.

Sunday, July 15, 2012

ஜனாதிபதி தேர்தலில் சங்மாவுக்கு ஆதரவு: சரத்குமார்

சென்னை, ஜூலை.15 - ஜனாதிபதி தேர்தலில் சங்மாவை ஆதரிக்க முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். அவரது முடிவுக்கு கட்டுப்பட்டு சங்மாவை ஆதிரிப்போம் என்று சமத்துவ மக்கள் கட்சியின்  தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். ​படித்த இளைஞர்கள் அதிகம் பேர் அரசியலுக்கு வரவேண்டும், ஈடுபாடு உடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்று நடிகர் சரத்குமார் தனது பிறந்தநாள் வாழ்த்து செய்தியாக கூறினார்.
பிரபல நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார். இவர் தனது பிறந்தநாளை நேற்று காலை கொட்டிவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில்  மனைவி ராதிகா சரத்குமார்  மற்றும் மகனுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.  இதுவரை படத்தயாரிப்பாளர் சீனிவாசன், அம்மா கிரியேஷன்சிவா, ஞானவேல் ராஜா, கே.ராஜன் மற்றும் எர்ணாவூர் நாராயணன், (ச.ம.க.து.தலைவர்) ஜே.எம்.ஆரூண் (எம்.பி) கட்சி தொண்டர்கள். சினிமா ரசிகர்கள் என பலரும் திரளாக கூடி நேரில் வாழ்த்தினார்கள். பின்னர் பிறந்தநாள் வாழ்த்து செய்தியாக சரத்குமார் கூறியதாவது:-
இன்றைய கால கூட்டத்தில் அனைத்தும் மாறிக்கொண்டே வருகிறது. பல துறைகளில் மாற்றங்கள் ஏற்படுகிறது. இதை வரவேற்க வேண்டும். அதே நேரத்தில் ஏழை பணக்காரன், ஏற்ற தாழ்வுகள், கீழ் சாதி, மேல் சாதி, மத வேற்றுமைகள் இன்னும் மாறவில்லை. இது மாற வேண்டும். இதற்காக பாடுபடுவேன். கல்வியில் மாற்றம் வேண்டும். தமிழகத்தில் பல மாவட்டங்களில் கல்வி கற்பவரின் நிலை கீழ் நோக்கி இருக்கிறது. குறிப்பாக சேலம் பகுதியில் 80 சதவீதம் பேர் கல்வி கற்றவர்களாக உள்ளனர். தென்காசி பகுதியில் 84 சதவீதம் பேர் கல்வி கற்றவர்களாக உள்ளனர்.  இப்படி குறைபாடு உள்ள பகுதிகளில் முழுமையான கல்வி கிடைக்க வேண்டும். இப்போது படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். காரணம் பொருளாதாரம் உயர்த்திருந்தாலும், விஞ்ஞானம் அபார வளர்ச்சி பெற்றுயிருந்தாலும் இதற்கு மூலக்காரணமாக இருப்பவர்கள் அரசியல்வாதிகள்.
மக்களுக்கு அரசு எவ்வளவோ நன்மைகள் செய்தாலும் முழுக்க முழுக்க அரசாங்கமே அனைத்தையும் செய்ய வேண்டும் என்று எண்ணக்கூடாது. மக்களும் விழிப்புணர்ச்சி பெற்று அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். என்னுடைய கருத்தில் இன்னொன்றை ஆழமாக பதிவு செய்ய விரும்புவது அனைவருக்கும் கல்வி இலவசமாக கிடைக்க  வேண்டும். சீட்வாங்கும் போது பெற்றோர்கள் படும் கஷ்டம் பரிதாபமாக இருக்கிறது.
இப்போது தமிழ் கலாச்சாரம், பண்பாடு அதிகம் மாறிவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை இப்போது இல்லை. பழக்க வழக்கம், நடை, உடை, பாவனைகள் மாறிவிட்டது. இதனால் பாதிப்பு ஏற்படும். என்கிற நிலை வரும் போது அதை அளவோடு வைத்துக் கொள்ள வேண்டும். வெளிநாட்டவர்கள் இப்போது அதிகம் பேர் தமிழ்நாட்டில் வசிக்கிறார்கள். இவர்கள் அவர்களுடைய பண்பாட்டுக்கு தகுந்த மாதிரிதான் இங்கே நடந்து கொள்வார்கள். அதனால் பிரச்சனை ஏற்படும் போது அதை ஒழுங்குப்படுத்திக் கொள்ளலாம். இதனால் நம் நாட்டுக்கு சீரழிவு என்பது தவறு என்று நான் கருதுகிறேன். இங்கே  ஜனாதிபதி தேர்தலில் எங்கள் கட்சியின் நிலைபாட்டை கேட்கிறீர்கள்.
ஜனாதிபதி தேர்தலில் சங்மாவை ஆதரிப்பதென முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். அவரது முடிவுக்குக் கட்டுப்பட்டு சங்மாவை ஆதரிப்போம்.
இவ்வாறு நடிகர் சரத்குமார்  தெரிவித்துள்ளார்.