Tuesday, May 31, 2011

தென்காசி பகுதியில் அரசு பாலிடெக்னிக், என்ஜினீயரிங் கல்லூரி தொடங்க நடவடிக்கை

தென்காசி,மே 30:  
தென்காசி பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் என்ஜினீயரிங் கல்லூரி அமைக்க இப்போது இடங்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது என தென்காசி சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.சரத்குமார் தெரிவித்தார். 

குற்றாலத்தில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  கடந்த இருதினங்களாக தென்காசி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பேரூராட்சி, நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் இப்போது என்ன பணிகள் நடைபெற்று வருகின்றன. உடனடி தேவை என்ன, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் எந்தளவில் நடைபெற்றுள்ளன, காலதாமதத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன்.  

தென்காசியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு வரும் பகுதியில் உடனடியாக சர்வீஸ் சாலை அமைக்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். தென்காசி பகுதியில் ரிங்ரோடு, புதைசாக்கடை திட்டம், தென்காசி தொகுதியில் உள்ள அனைத்து குளங்களையும் தூர்வாரி மராமத்துப் பணிகள் மேற்கொள்வது, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டும் பணி, குடியிருப்பில் உள்ள குற்றாலம் குடிநீர்த்தேக்கத்தை உடனடியாகப் பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பணிகளை நிறைவேற்றுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை செய்து வருகிறேன்.  கீழப்பாவூர்,சுரண்டை பகுதியில் உற்பத்தியாகும் காய்கனிகள் மற்றும் விவசாயப் பொருள்களைப் பாதுகாக்கும் வகையில் குளிர்சாதனக் கிட்டங்கி அமைக்கவும், தென்காசி பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் என்ஜினீயரிங் கல்லூரி அமைக்கவும் இடத்தைத் தேர்வு செய்து உரிய துறை அமைச்சர்கள் மூலமாக திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்.  

சுரண்டையில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை, செண்பக கால்வாய் திட்டத்தை நிறைவேற்றவும், அரசு மருத்துவமனையில் உடனடியாக சிடி ஸ்கேன் வசதியை ஏற்படுத்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  சிடி ஸ்கேன் வசதி ஏற்படுத்த காலதாமதம் ஏற்படுமேயானால் நன்கொடையாளர்கள் மூலமாக சிடி ஸ்கேன் வசதி செய்து தரமுடியுமா என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

மேலும் தனியார் நிறுவனம் மூலம் உயர்தரமான ஸ்கேன் சென்டரை இங்கு தொடங்குவதன் மூலம், சிறிய அளவிலான மருத்துவ பரிசோதனைகளை இலவசமாகவும், சிடி ஸ்கேன் போன்றவற்றை சட்டப்பேரவை உறுப்பினரின் பரிந்துரைக் கடிதம் கொண்டு வருபவர்களுக்கு 50 சவிகித கட்டணத் தள்ளுபடியுடன் மருத்துவ வசதியை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறேன். 

தென்காசி அரசு மருத்துவமனையில் தேவையான அளவு மருத்துவர்களை நியமிக்கவும், கால்நடை மருத்துவமனை அமைக்கவும், சுமார் 500 பேர் பணிபுரியக்கூடிய அளவில் தொழிற்சாலை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  தென்காசியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் 1-ம் தேதி முதல் செயல்படத் தொடங்கும்


மேலும் பாவூர்சத்திரம், சுரண்டை மற்றும் ஊத்துமலை பகுதியிலும் கிளை அலுவலகம் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.  

‘பேக்கேஜ்’ சுற்றுலாவுக்கு சரத்குமார் ஏற்பாடு

‘’தென்காசி தொகுதியின் தேவைகள், நடந்து வரும் திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். தென்காசி ரயில்வே மேம்பாலம் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 
தென்காசியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் விரைவில் அமைக்கப்படும். பாவூர்சத்திரம் பகுதியில் காய்கறி பதப்படுத்தும் குளிர்பதன நிலையம் அமைத்தல்,

சுரண்டையில் கால்நடை மருத்துவநிலையம் அமைத்தல், தென்காசியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி அமைத்தல், செண்பக கால்வாய் திட்டம் ஆகியவற்றின் சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்றாலத்தில் அருவிகளில் குளிப்பது தவிர வேறு பொழுதுபோக்கு அம்சம் இல்லாததால் தென்காசி பகுதியில் அணைக்கட்டுகளை ஒருங்கிணைத்து பேக்கேஜ் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்படும்.

குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

பேட்டியின் போது, கட்சியின் அமைப்புச் செயலர் காளிதாசன், கட்சியின் மேற்கு மாவட்டச் செயலர் தங்கராஜ்,சுந்தர், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Monday, May 30, 2011

தென்காசி தொகுதியில் அடிப்படை வசதிகள்நிறைவேற்ற முன்னுரிமை வழங்கப்படும்

தென்காசி:தென்காசி தொகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முன்னுரிமை கொடுப்பேன் என எம்.எல்.ஏ.சரத்குமார் கூறினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:""தென்காசி தொகுதியில் வளர்ச்சி பணிகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என்னென்ன பணிகள் நடந்துள்ளது, தொய்வான பணிகள் எவை என்பது குறித்து அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டுள்ளேன். அது கிடைக்கப்பெற்ற பிறகு உரியை நடவடிக்கை மேற்கொள்வேன். ஆலங்குளம் யூனியன் பகுதியில் நன்றி தெரிவித்து வருகிறேன். தென்காசி தொகுதி முழுவதும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க ஒரு மாதம் ஆகலாம். வரும் ஜூன் 3ம் தேதி கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டம் துவங்குகிறது. கூட்ட தொடர் முடிந்த பிறகு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பணியை தொடர்வேன்.

தென்காசியில் எம்.எல்.ஏ.அலுவலகம் நாளை (1ம் தேதி) முதல் துவங்கப்படுகிறது. சுரண்டை, பாவூர்சத்திரம், ஊத்துமலை பகுதியில் எம்.எல்.ஏ.அலுவலகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தென்காசி பகுதியில் அத்யாவசிய தேவை சர்வீஸ் ரோடு. இதனை உடனே அமைக்க கூறியுள்ளேன். ரிங் ரோடு, பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற உரிய ஆலோசனை பெறப்பட்டு வருகிறது. குற்றாலம் கோடை கால குடிநீர் தேக்கம் குடியிருப்பில் உள்ளது. இந்த நீர் தேக்கம் 40 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படவில்லை. தொகுதியில் உள்ள அனைத்து குளங்களையும் தூர் வாரி மராமத்து பணி செய்ய முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.தென்காசியில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் பழைய அரசு ஆஸ்பத்திரியில் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு இன்ஜினியரிங் கல்லூரி அமைக்க முயற்சி மேற்கொண்டுள்ளேன். சுரண்டையில் அரசு பஸ் டெப்போ அமைக்கப்படும். சுரண்டை செண்பக கால்வாய் சீரமைக்கப்படும். தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சி.டி.ஸ்கேன் வசதிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு காலதாமதம் ஆகிறது. இதனால் இதனை அமைக்க நன்கொடையாளர் மூலம் முயற்சி மேற்கொள்கிறேன். தனியார் மூலமாக ஹை லெவல் சி.டி.ஸ்கேன் வைத்து சிறிய அளவிலான பரிசோதனைக்கு இலவசமாகவும், பெரிய அளவிலான சோதனைக்கு எம்.எல்.ஏ.பரிந்துரை கடிதத்துடன் சென்றால் 50 சதவீத மானியத்திலும் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சுரண்டை சிவகுருநாதபுரத்தில் கால்நடை ஆஸ்பத்திரி அமைக்கப்படும். தொகுதி பற்றி முழுமையாக அறிய 3 மாத கால அவகாசம் தேவை. பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், சாலை வசதி, சுகாதார வசதி, பஸ் வசதி போன்ற அடிப்படை வசதிகள் நிறைவேற்ற முன்னுரிமை வழங்கப்படும். தென்காசி பகுதியில் பெரிய அளவிலான தொழிற்சாலை அமைக்கப்படும். இதன் மூலம் நூற்றுக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். சிற்றாறு தூய்மை படுத்தப்படும். தமிழகத்தில் தென்காசி தொகுதியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றி காட்டுவேன்'' என்றார் எம்.எல்.ஏ.சரத்குமார்.
சுரண்டை பகுதியில்சரத்குமார் நன்றி தெரிவிப்பு
சுரண்டை:சுரண்டை பகுதியில் தென்காசி எம்.எல்.ஏ.,சரத்குமார் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.தென்காசி தொகுதி எம்எல்ஏ சரத்குமார் சுரண்டை பகுதியில் உள்ள பரங்குன்றாபுரம், மருதுபுரம், வாடியூர், மரியதாய்புரம், கரையாளனூர், குறிச்சான்பட்டி, குருந்தன்மொழி, மேலக்கலங்கல், கீழக்கலங்கல் ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.பின்னர் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு இவற்றுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அவர் பேசும்போது: - ""இப்பகுதியில் உள்ள குடிநீர் பிரச்னைகளை அதிகாரிகளுடன் கலந்துபேசி அதற்கான தீர்வு காண்பேன். தென்காசி தொகுதியை தமிழகத்தில் முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன்'' என்றார்.நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் சுரண்டை எஸ்.வி.கணேசன், பாவூர்சத்திரம் காளிதாசன், மாவட்ட சமக செயலாளர் தங்கராஜ், துணை செயலாளர் பாண்டியாபுரம் கண்ணன், துரை, சேர்ந்தமரம் ராயப்பன், கீழப்பாவூர் ஒன்றிய சமக துணை செயலாளர் ஆர்.வி.ராமர், சிவன், ஆலங்குளம் ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் வாடியூர் அந்தோணிசாமி, தங்கம், பிரபாகரன், வின்சென்ட் நாடார், மாடசாமி, அருள், பரமசிவன், பூண்டிராஜ், திரிகூடபதி சேகர், சுரண்டை பாலன், அரவிந்த் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

தென்காசி வளர்ச்சிக்கு பாடுபடுவேன்: பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த சரத்குமார்

தென்காசி தொகுதியை ஒரு மாதத்திற்குள் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அந்த தொகுதி எம்எல்ஏ சரத்குமார் கூறியுள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது.
அதில் தென்காசி தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார், தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் அவர் தென்காசி தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்கள் முன்னிலையில் பேசிய சரத்குமார், தென்காசி தொகுதியை மேம்படுத்திட ஒரு மாதத்திற்குள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் பணிகள் நடைபெறும்.
தொழில்துறையில் பின்தங்கியுள்ள தென்காசியில், வேலை வாய்ப்புகளை பெருக்கிடவும், அரசு மருத்துவமனையில் ஸ்கேன் வசதிகள் செய்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்

Sunday, May 29, 2011

சமக.,வினர் கொண்டாட்டம்


ஆலங்குளம் : சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியின் வெற்றியை ஆலங்குளம் நகர சமக வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். அதிமுக கூட்டணியில் சமக தென்காசி, நான்குநேரி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தென்காசி தொகுதியில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியையும், அதிமுக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியையும் ஆலங்குளம் நகர சமகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு நகர சமக தலைவர் சோனா மகேஷ் தலைமை வகித்தார். சமக ஒன்றிய செயலாளர் ராபர்ட், அதிமுக நகர செயலாளர் சுப்பிரமணியன், தேமுதிக நகர செயலாளர் பழனிசங்கர், ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சமக இளைஞரணி குமரேசன், முத்துசாமி, ராஜா, தேமுதிக நிர்வாகிகள் திருமலை செல்வம், அல்போன்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சாத்தான்குளம்:  தேர்தல் முடிவு அன்று சாத்தான்குளம் ச.ம.க வினர்  ஒன்றிய தலைவர்  ஜான் ராஜா  மற்றும் ஒன்றிய பிரிதிநிதி லிங்கேசன் தலைமைஇல்  காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செய்து  காமராஜர் பேருந்து நிலையத்தில் உள்ள பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இந்த கொண்டாடத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் , தொண்டர்களும் , ச.ம.க தொண்டர்களும் பரவலாக கலந்து கொண்டனர்..



இது போலவே தமிழ்நாடு முழுவதும் ச.ம.க வினர்   கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து வெற்றியை கொண்டடி வருகிறார்கள்.

தென்காசியில் எம்.எல்.ஏ.அலுவலகம் புதுப்பொலிவுடன் பச்சை நிறத்தில் பளிச்சிடுகிறது

தென்காசி:தென்காசியில் எம்.எல்.ஏ.அலுவலகம் புதுப்பொலிவுடன் பச்சை நிறத்தில் பளிச்சிடுகிறது.தென்காசி எம்.எல்.ஏ.வாக ச.ம.க.தலைவர் சரத்குமார் வெற்றி பெற்றார். அவர் எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற பின்னர் நேற்று முதன் முதலாக தென்காசி தொகுதிக்கு வந்தார். சரத்குமாரை வரவேற்க எம்.எல்.ஏ.அலுவலகமும் தயார் நிலையில் உள்ளது.
தென்காசி தாலுகா அலுவலகம் அருகில் மேலவாலிபன்பொத்தைக்கு செல்லும் வழியில் எம்.எல்.ஏ.அலுவலகம் உள்ளது. பொதுப்பணித் துறையினர் எம்.எல்.ஏ.அலுவலகத்தை சுத்தப்படுத்தி பச்சை நிறத்தில் வர்ணம் தீட்டியுள்ளனர். கதவு, சன்னல்களுக்கு பெயிண்ட் அடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. எம்.எல்.ஏ.தனி அறையில் ஏ.சி.வசதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கம்ப்யூட்டர் பொருத்தி இணையதள வசதி அளிக்கப்பட உள்ளது.

அதிமுக அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம்

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்று சமக தலைவரும் தென்காசி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நடிகர் சரத்குமார் கூறினார்.

சரத்குமார் மற்றும் நாங்குநேரி தொகுதி சமக சட்டமன்ற உறுப்பினர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சனிக்கிழமையன்று நெல்லை வந்தனர். அவர்களுக்கு பாளை கேடிசி நகரில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் வக்கீல் கணேசன், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் லாரன்ஸ் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
என்னை அபார வெற்றிபெற செய்த தென்காசி தொகுதி மக்களுக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று (நேற்று) முதல் தொகுதியில் 5 நாட்கள் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வந்துள்ளேன். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. தென்காசி தொகுதியை பொறுத்தவரைக்கும் பல கோரிக்கைகள் உள்ளன. குறிப்பாக கருப்பாநதி திட்டம், தென்காசி தனி மாவட்டம், மேம்பால சர்வீஸ் ரோடு உள்ளிட்ட பணிகளை நிறைவேற்ற சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன்.
மேலும் தொகுதியில் உள்ள மக்கள் எந்நேரமும் என்னை தொடர்பு கொள்ள வசதிகள் செய்யப்படும். ஆலங்குளம் ஒன்றியத்தில் இன்று (நேற்று) வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஜெயலலிதா தலைமையிலாக அமைந்துள்ள அதிமுக அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம்.
குற்றால சீசன் விரைவில் தொடங்க உள்ளது, சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் நிறைவேற்றப்படும். குற்றாலத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குளத்தை மீட்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநில துணைப் பொதுச்செயலாளர் இளஞ்சேரன், மேற்கு மாவட்ட செயலளார் தங்கராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Thursday, May 26, 2011

விஜயகாந்துடன் சரத்குமார் சந்திப்பு





தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று அவரது கட்சி அலுவலகத்தில் சமத்துவ மக்கள் கட்சிதலைவர் சரத்குமார் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 
.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக,  சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. இந்த கூட்டணி அமோக வெற்றி பெற்றதையடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு பெறுகிறார்.

அவரை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இன்று கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் கட்சி அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தென்காசி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதற்காக விஜயகாந்தும் சரத்குமாருக்கு வாழ்த்து தெரிவித்தார்.  இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். 



சரத்குமாருடன் நடிகைகள்  பசி சத்யா, பாத்திமா பாபு, நளினி, நடிகர் சின்னி ஜெயந்த் ஆகியோர் சென்றிருந்தனர். மேலும் சின்னத்திரை நடிகர்களும்  விஜயகாந்தை சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

நன்றி :  தினமணி

Tuesday, May 24, 2011

சமக., நன்றி தெரிவிக்கும் விழா

கோவில்பட்டி : கோவில்பட்டியில் அஇசமக சார்பில் அதிமுக கூட்டணி வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது.
கோவில்பட்டி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் சட்டசபை தேர்தலில் சமக மற்றும் அதிமுக கூட்டணி வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது. கோவில்பட்டி கடலைக்காரத்தெரு சந்திப்பில் நடந்த விழாவிற்கு சமக நகர செயலாளர் பரமசிவம் தலைமை வகித்தார். தொடர்ந்து சமக சார்பில் போட்டியிட்டு தென்காசி தொகுதியில் வெற்றி பெற்ற கட்சித்தலைவர் சரத்துகுமார், நான்குனேரி தொகுதியில் வெற்றி பெற்ற எர்ணாவூர் நாராயணன் ஆகியோருக்கும், கோவில்பட்டி சட்டசபை தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தும், வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் பலர் பேசினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் பாஸ்கர், பொதுக்குழு உறுப்பினர் முத்துகணேஷ், நகர இளைஞரணி காமராஜ், நகர துணை செயலாளர் ரமேஷ், பொருளாளர் ஜெயமணி, வர்த்தக அணி வெற்றி, சோலைநாராயணன், தொண்டரணி தனபால், வார்டு செயலாளர்கள் பெரியசாமி, தங்கராஜ், தேவகனி, கணபதி, கண்ணன், சரவணன், சந்தனராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி : தின மலர் 

தென்காசி தொகுதியில் 28ம் தேதிஎம்.எல்.ஏ.சரத்குமார் நன்றி அறிவிப்பு


தென்காசி:தென்காசி தொகுதியில் எம்.எல்.ஏ.சரத்குமார் வரும் 28ம் தேதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.தென்காசி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக ச.ம.க.தலைவர் சரத்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். சரத்குமார் வெற்றி பெற்ற பின்னர் முதன் முதலாக வரும் 28ம் தேதிதென்காசி தொகுதிக்கு வந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். ஜூன் 1ம் தேதி வரை தென்காசி தொகுதியில் சுற்று பயணம் செய்து சரத்குமார் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

இதில் விடுபட்டு போன பகுதிகளுக்கு சட்டசபை கூட்ட தொடர் முடிந்த பின்னர் சரத்குமார் சுற்று பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி கூறுகிறார். தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளையும், திட்டங்களையும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் தெரிவித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒப்புதலோடு அனைத்தையும் நிறைவேற்ற பாடுபடுவேன் என எம்.எல்.ஏ.சரத்குமார் கூறினார்.
நன்றி : தின மலர் 

Wednesday, May 18, 2011

சரத்குமாருக்கு உற்சாக வரவேற்பு

தென்காசியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

நடிகர்கள் ராதாரவி, செந்தில், விஜயகுமார், மயில்சாமி, நடிகைகள், மனோரமா, சத்யப்ரியா, குயிலி, சி.ஐ.டி. சகுந்தலா, புவனனேஸ்வரி, இயக்குனர் அமீர், கே.ஆர்., ஏ.எம்.ரத்னம், சேரன், பாபுராஜ், சித்ரா லட்சுமணன், முருகன் மற்றும் சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் நேரில் வந்து வாழ்த்தினார்கள்.

பின்னர் கொட்டிவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பினார். பின்னர் நிருபர்களுக்கு சரத்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. கூட்டணியில் எங்களுக்கு கிடைத்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளோம். அதற்காக ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கிறோம். 205 தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று கூறியிருந்தேன் அதன்படியே நடத்துள்ளது.


அ.தி.மு.க. ஆட்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். ஊழல், விலைவாசி உயர்வு, மின்சார தடை, அடிப்படை வசதி போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் எதிரொலியாக மக்கள் தங்களது தீர்ப்பை வழங்கியுள்ளார். திரைப்படத்துறை சுந்திரமாக இயங்குவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு மவுனமாக உள்ளது. அதை நாங்கள் கண்டிக்கிறோம். ராஜபக்ஷேவை குற்றவாளி கூண்டில் நிறுத்தவேண்டும் இவ்வாறு சரத்குமார் கூறினார்.

Sunday, May 8, 2011

தி.மு.க. எனும் அரசியல் ஆக்டோபஸ்


ட்சித் தலைவராக கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தது லட்சக்கணக்கான தொண்டர்கள்!ஆட்சி முதல்வராக கருணாநிதியை அமரவைத்து அழகு பார்த்தது கோடிக்கணக்கான மக்கள்!

ஆனால், உண்மையில் கட்சியையும் ஆட்சியையும் கைக்குள் வைத்து, பவர் பாலிடிக்ஸைப் பக்குவமாகச் செய்துவருபவர்கள் யார் யார் தெரியுமா?.....
'திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல. எனக்குப் பின்னால் என் மகன். அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும்என்பது கருணாநிதி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். ஆனால், கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவை மிஞ்சியதாக இருக்கிறது இந்த ஹோம் கேபினெட்!

கருணாநிதியின் தலைமையில் தி.மு.. வந்த பிறகு நடந்த இரண்டு முக்கியமான பிரிவுகளும் அவரது மகன்களுக்காகவே நடந்தன என்பதுதான் அரசியல் வரலாறு அறிந்தவர்கள் கருத்து. இன்று லட்சக்கணக்கான தொண்டர்களைக்கொண்ட கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் புகுந்து, மணிக்கணக்கில் இரண்டு முறை விசாரணை நடத்தி முடித்ததற்கும் இதே குடும்பமே காரணமானது. 'ஒரு தாயின் வயிற்றில் பிறக்க முடியாத காரணத்தால் தனித் தனி தாயின் வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பிகள் நாம்என்றார் அண்ணா. ஆனால், இன்று ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் மட்டும்தான் கழகம் என்று ஆகிவிட்டது!



42 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருக்கிறார் கருணாநிதி. 'தலைமை நாற்காலியைப் பெரியாருக்காகக் காலியாக வைத்திருக்கிறேன். பொதுச் செயலாளர் பதவி மட்டும்தான் இனி தி.மு.-வில் இருக்கும்என்ற அண்ணாவின் முழக்கம்தான், அவரைக் கடற்கரை ஓரத்தில் புதைக்கும்போது ஓரமாகத் தூக்கிப் போடப்பட்ட முதல் கொள்கை.

அடுத்த தலைவர் நாவலர் நெடுஞ்செழியனா, கலைஞர் கருணாநிதியா என்ற சண்டை வந்தபோது, தலைவராக கருணாநிதியும் ,பொதுச் செயலாளராக நெடுஞ்செழியனும் உட்கார வைக்கப்பட்டார்கள். அதில் இருந்து 10-வது முறையாக பொதுக்குழு மூலமாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார் கருணாநிதி.


1980-ல் கட்சிக்குள் மெதுவாகத் தனது மகன் ஸ்டாலினை கருணாநிதி அழைத்து வந்தார். இளைஞர் அணிச் செயலாளர் என்ற பொறுப்பு தரப்பட்டது. பொதுவாகவே, கட்சியில் துணை அமைப்புகள் சும்மா ஒப்புக்குத்தான் இருக்கும். ஆனால், ஸ்டாலின் வந்த பிறகு இளைஞர் அணி, தலைமைக் கழகத்துக்கு இணையான அணியாக மாற்றப்பட்டது. அறிவாலயம் கருணாநிதிக்கு என்றால்... அன்பகம் ஸ்டாலினுக்கு.

இளைஞர் அணியில் மாவட்ட அமைப்பாளர்கள்... கட்சியின் மாவட்டச் செயலாளர்களாகவே வலம் வந்தார்கள். அதன் பிறகு அமைச்சரவையில் ஸ்டாலின் ஆட்களுக்குப் பிரதிநிதித்துவம் தரப்பட்டது. வேட்பாளர் தேர்வில் கோட்டா வந்தது. ஸ்டாலின் துணைப் பொதுச் செயலாளர் ஆனார். அதன் பிறகு பொருளாளர் பதவி கிடைத்தது. அடுத்து அமைச்சர், துணை முதலமைச்சராகவும் ஆனார். இன்று, ஆட்சியும் கட்சியும் இவரது கண் அசைவில் தான் நடக்கின்றன.

கருணாநிதியின் மருமகனாகவும் மனசாட்சியாகவும் இருந்த முரசொலி மாறனின் மறைவுக்குப் பிறகு, அவரது இரண்டாவது மகன் தயாநிதியை மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் நிறுத்தினார்கள். உடனேயே கேபினெட் அமைச்சராக்கப்பட்டார். டெல்லி அரசியல் இவரது கட்டுப்பாட்டுக்கு வந்தது. இவரது அண்ணன் கலாநிதி மாறன் நடத்தி வந்த நாளிதழில் ஒரு கருத்துக்கணிப்பு வெளியானதைத் தொடர்ந்து குடும்பத்துக்குள் குழப்பம். நேரடி அரசியலில் இறங்காமல் அதே சமயம், தென் மாவட்டத்து அரசியலைத் தனது ஆளுகைக்குள் வைத்திருந்த மு..அழகிரியின் செல்வாக்கை அந்தக் கருத்துக் கணிப்பு குறைத்து மதிப்பிட்டு இருந்தது. கலாநிதி, தயாநிதி ஆகியோருக்கும் அழகிரிக்குமான மோதலில், கருணாநிதி மகன் பக்கம்தான் நின்றார்.

தயாநிதி, கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். இனி, டெல்லியைக் கவனிக்க யார் என்ற கேள்வி எழுந்தபோது, கருணாநிதி தனது மகள் கனிமொழியை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கினார். அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் அழகிரியும் நிற்க... குடும்பக் கோபங்கள் தணிந்து தயாநிதியும் மறுபடி நுழைய... ஒரே குடும்பத்தில் இருந்து ஐந்து பேர் கட்சியின் முக்கியப் பதவிகளைப் பிடித்தார்கள்.
இன்றைய நிலையில் தி.மு.-வின் ஐம்பெரும் தலைவர்கள் இவர்கள்தான்!

 

குடும்பத் தலைவர் ஒருவர் அரசியலில் இருந்தால், அவரை நம்பி மற்றவர்கள் அமைதியாக இருப்பார்கள். ஆனால், இங்கே எல்லோருமே தலை எடுத்து வலம் வருகிறார்கள்.


ராஜாத்தி அம்மாளைப் பார்க்க அவரது சி..டி. காலனி வீட்டிலோ அல்லது அவர் ஆழ்வார்பேட்டைப் பகுதியில் நடத்தி வரும் ராயல் ஃபர்னிச்சர் கடையிலோ எப்போதும் கூட்டம் இருக்கும். அவரது கோட்டாவில் அமைச்சராக வந்தவர் பூங்கோதை.


ஊழல் வழக்கில் சிக்கிய ஒருவரைக் காப்பாற்ற பூங்கோதை முயற்சித்ததாகத் தகவல் கசிந்து, அவரது பதவியையே பறித்தார் கருணாநிதி. அப்படிப்பட்ட பூங்கோதை மறுபடியும் கேபினெட்டுக்குள் நுழைத்ததும்... அழகிரி குறித்து நீரா ராடியாவிடம் தரக்குறைவாக கமென்ட் அடித்த பூங்கோதைக்கே ஆலங்குளம் தொகுதியில் மீண்டும் போட்டியிட அனுமதி வாங்கித் தந்ததும், ராஜாத்தியின் ராஜ்யத்தை ஊருக்குச் சொல்லும்

கனிமொழிக்குத் தரப்படும் முக்கியத்துவம் கருணாநிதியின் இன்னொரு மகளான செல்வியைச் சினம்கொள்ளவைத்தது. அவரே அப்பாவுக்காகப் பிரசாரம் செய்வதும், தொகுதி மக்களிடம் குறை கேட்கப் போவதுமாக எப்போதாவது செய்கிறார்.


கருணாநிதியின் கடைசி மகனான தமிழரசு, சேப்பாக்கம் தொகுதியைக் கவனித்துக்கொள்கிறார். மதுரையில் அழகிரிக்கு இணையான மரியாதை அவரது மனைவி காந்திக்குத் தரப்படுகிறது. தனித் தனி கட் அவுட்டுகளில் காந்தி சிரிக்கிறார். அவரது மகள் கயல்விழி, தி.மு.-வின் பிரசாரக் குழுச் செயலாளர். அவரது கணவர், வெங்கடேஷ் தென் மாவட்ட மந்திரிகளைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். செல்வி மகள் எழிலரசியின் கணவர் டாக்டர் ஜோதிமணி, இப்போது வளர்ந்து வரும் முக்கிய மான அதிகார மையம்!

இந்த ஐந்து ஆண்டு காலத்தில் சினிமாக்காரர்கள் சின்னாபின்னமானதைப்போல வேறு யாரும் ஆகவில்லை!

திரைத் துறையில் இருந்துதான் கருணாநிதி அரசியலுக்கு வந்தார் என்பதும், அவரது மேகலா பிக்சர்ஸ் கதைகளும் பழைய விஷயங்கள். கடந்த 20 ஆண்டுகளாக இந்தத் துறையில் சன் டி.வி. கால் பதித்து புதிய படங்களை வாங்கினார்கள். 'அவர்களுக்கு விற்பனை செய்யப்படாத படங்களை ரேட்டிங் குறைத்துக் காண்பிக்கிறார்கள் என்ற புகார்கள் எழுந்தன. குடும்பத்துக்குள் குழப்பம் ஏற்பட்ட சமயத்தில் கருணாநிதியே 'கலைஞர் டி.வி.’ என்ற தனிக் கடையைத் தொடங்கினார். படங்கள் வாங்குவதில் சன் - கலைஞர் தொலைக்காட்சிகளுக்குள் போட்டி கிளம்பியது. இதில் பல தயாரிப்பாளர்கள் மூளை குழம்பிப் போனார்கள்.
Add caption

அடுத்து படத் தயாரிப்புகளில் வாரிசுகள் குதித்தார்கள். ரெட் ஜெயன்ட் மூவீஸ் ஆரம்பித்தார் ஸ்டாலினின் மகன் உதயநிதி. க்ளவுட் நைன் தொடங்கினார் அழகிரியின் மகன் துரை தயாநிதி. பெரிய நடிகர்களை இவர்கள் குத்தகைக்கு எடுக்க ஆரம்பித்தார்கள். கால்ஷீட் கொடுக்காத நடிகர்களை மிரட்டுவது வரை நிலவரம் கலவரம் ஆனது. தியேட்டர்களை மொத்தமாகக் குத்தகைக்கு எடுப்பதும்... தங்கள் படத்தை ரிலீஸ் பண்ண, மற்ற படங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதுமான சோகக் கதைகளை எந்தத் தயாரிப்பாளர்களாலும் சொல்ல முடியவில்லை.


பாராட்டு விழாக்களுக்கு நடிகர்களை வரவழைக்க மிரட்டுவதை மேடை ஏறி அஜீத் சொன்னார். விஜய் கஷ்டம் ஊர் அறிந்தது. காலம் காலமாக தி.மு.-காரராக அறிமுகமான அவரது அப்பா எஸ்..சந்திரசேகரன், ஜெயலலிதா வைப் போய்ப் பார்த்தார். பல தயாரிப்பாளர்கள் ரகசியமாகப் போய் ஜெயலலிதாவை சந்தித்துத் திரும்பினார்கள்.

தமிழரசுவின் மகன் அருள்நிதி, 'வம்சம்படத்தில் நடித்து ஹீரோ ஆனார். கருணாநிதியின் அக்கா மகன் அமிர்தம் கலைஞர் டி.வி -யைக் கவனித்து வருகிறார். அவருக்கு உதவியாக அவரது மகன், குணாநிதியும் இருக்கிறார்.

கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவின் மகன் மு..முத்து. அவரது மகன் அறிவுநிதி, சினிமாவில் பாடுகிறார். சென்னையில் திடீரென அவரது கட்-அவுட்கள் முளைக்கும். அதை கருணாநிதி குடும்ப உறுப்பினரே கிழித்துவிட்டார். 'நான் கலைஞரின் மூத்த பேரன். அந்த அந்தஸ்தை வேறு யாரும் பறிக்க முடியாதுஎன்று இவர் சொல்லி வருவது, சினிமா எடுக்க வேண்டிய கிளைக் கதைகளில் ஒன்று!



டந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வரை தயாளுவை எந்த மீடியாக்களும் சீண்டியது இல்லை. முக்கியமான கூட்டங்களுக்கு மட்டும் வருகை தரும் அவர், இரண்டு ஆண்டுகளாக எதிலும் கலந்துகொள்ளவில்லை.

உடல்நிலையைக் காரணம் காட்டி அமைதியானார். கலைஞர் டி.வி-க்கான பங்குகளில் 60 சதவிகிதம் அவருக்கு உண்டு என்பதுகூட சிறு தகவலாகத்தான் இருந்தது. ஆனால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடைய ஷாகித் பால்வாவிடம் கலைஞர் டி.வி. 214 கோடிகளை வாங்கியது என்பதை சி.பி.. தனது அறிக்கையில் சொன்னதுமே, தயாளு அகில இந்தியா முழுவதும் அறியப்பட்டார். 'இத்தனை வருஷம் சும்மா இருந்த என்னை இப்படி மாட்டிவிட்டுட்டீங்களேஎன்று கருணாநிதியிடம் வருத்தப்படத்தான் முடிந்தது தயாளுவால். நிச்சயம் அவரிடம் விசாரித்துதான் ஆக வேண்டும் என்று சி.பி.. அடம்பிடிக்க.... தயாளு சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு அழைத்து வரப் பட்டார். இதோடு சி.பி.. விடுகிறதா என்பது தெரிய வில்லை. முழு க்ளைமாக்ஸை மார்ச் 31 அன்று பார்க்கலாம்!

இவருக்கு நேர் மாறானவர் ராஜாத்தி! எப்போதும் சர்ச்சைகள் இவரை வளைய வரும். சர்க்காரியா கமிஷன் விசாரணையிலேயே அவர் பெயர் வந்தது. இப்போது ஸ்பெக்ட்ரம் தரகர் நீரா ராடியாவுடன் ராஜாத்தியும் அவரது ஆடிட்டர் ரத்னமும் பேசியதும், வோல்டாஸ் கட்டடத்தைக் கை மாற்றித் தரும் விவகாரத்தில் ராஜாத்தியின் உதவியாளர் சரவணன் சம்பந்தப்பட்டதும்... முற்றுப்புள்ளி வைக்கப்படாத பெரிய ரகசியங்கள். ராடியா கைதானால் இவர்களுக்கும் சிக்கல் வரலாம்!
  1. மதுரை கவுன்சிலர் லீலாவதி கொலையில் சிலர் கைது செய்யப்பட்டதும், அவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதும் நடந்தது. தண்டனைக் கைதிகளான அவர்கள் முன்கூட்டியே விடுதலை ஆனது வரை சர்ச்சை தொடர்ந்தது!
                                       
தென் மாவட்டத்தில் தன்னுடைய பேச்சைக் கேட்காமல் அழகிரி தன்னிச்சையாகச் செயல்பட்டதாகச் சொல்லி, அவரைக் கட்சியைவிட்டே 2000-ம் ஆண்டில் நீக்கினார் கருணாநிதி. ஆட்சி மாறி கருணாநிதி கைது செய்யப்பட்ட பிறகுதான் மீண்டும் அழகிரி குடும்பத்துக்குள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்!


2. தி.மு.-வின் முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் அழகிரி சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு விசாரணையின் இறுதியில் அழகிரி விடுதலை செய்யப்பட்டார். இன்று வரை தென் மாவட்டங்களில் மறக்க முடியாத குற்றச்சாட்டு இது!


3. ஸ்டாலினுக்கு மிக நெருக்கமாக இருந்தஅண்ணா நகர் ரமேஷின் தற்கொலை இன்று வரை மர்மம் உடைபடாத ரகசியம். அந்தத் தற்கொலைக்குப் பரிகாரமும் செய்யப்படவில்லை. பச்சைக் குழந்தைகள் மூவரும் மனைவியுமாக ரமேஷ§டன் இறந்த ஐந்து மரணங்களுக்கான குற்றவாளிகளை ஆட்சியில் இருந்த ஐந்து ஆண்டுகளில் இவர்கள் கண்டுபிடிக்கவும் இல்லை. தண்டிக்கவும் இல்லை!

4. மதுரை தினகரன் நாளிதழில் வெளியான கருத்துக் கணிப்பைத் தொடர்ந்து அந்த அலுவலகம் எரிக்கப்பட்டது. வினோத்குமார், கோபிநாத், முத்துராமலிங்கம் ஆகிய மூவரது மரணங்கள் தொடர்பான வழக்கு அப்பீலில் இன்று வரைக்கும் இருக்கிறது!

5.  மத்திய அமைச்சர் பதவியை அழகிரி, தயாநிதி மாறன், கனிமொழி ஆகிய மூவருக்கும் வாங்குவதற்காக கருணாநிதி டெல்லிக்குச் சென்று காத்திருந்ததும்... அதைவைத்து ஆங்கில, இந்தி மீடியாக்கள் கமென்ட் அடித்ததும் நடந்தது. அதுவரை மரியாதைக்குரிய மனிதராக டெல்லி மீடியாக்களில் சொல்லப்பட்ட கருணாநிதி, முதன்முதலாக ஏளனம் செய்யப்பட்டார்!

6. சென்னையில் உள்ள பிரபல ஓட்டல்களில் ஏதாவது பேரனை வைத்து ஏதாவது ஒரு புகார் எழுந்து அடங்குவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. போலீஸாரும் ஹோட்டல் அதிபர்களும் கை பிசைந்து நிற்கிறார்கள்!

7.  கனிமொழியும் ஸ்பெக்ட்ரம் தரகர் நீரா ராடியாவும் பேசிய தொலைபேசி உரையாடல்கள் இன்று வரை இரண்டு தரப்பாலும் மறுக்கப்படவில்லை!

8.  ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், கலைஞர் டி.வி-யும் கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் கனிமொழி ஆகியோரும் சிக்கி இருக்கிறார்கள். இந்தச் சிக்கலில் இருந்து அவர்கள் எப்போது விடுபடுவார்கள் என்பது சி.பி.-க்கே தெரியாது!


டுத்து புதிய வாரிசுகள் மெள்ள உள்ளே நுழைகிறார்கள். செல்வியின் மகள் எழிலரசி வீணை கற்றுக்கொண்டது பாராட்டத்தக்க அம்சம். அதற்காக, கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அவரது கச்சேரி கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டது.

ஸ்டாலின் மருமகள் கிருத்திகா, ஒரு பத்திரிகையாளராக வலம் வருகிறார். அவரது குறும்படங்கள் பெரிதாகக் காட்டப்படுகின்றன. ஸ்டாலின் மகள் செந்தாமரை, சென்னை வேளச்சேரி பகுதியில் சன் ஷைன் என்ற பெயரில் பள்ளியைத் தொடங்கி, கல்வித் துறைக்குள் நுழைந்திருக்கிறார். அவரது கணவர், சபரீசன் பெயர் அவ்வப்போது சர்ச்சை களில் அடிபடும்.

தமிழரசுவின் மகள் பூங்குழலியும் அவரது கணவரும் அடுத்து வளர்ந்து வருகிறார்கள். கடைசியாக கனிமொழியின் மகன் ஆதித்யன் பற்றிச் சொல்லியாக வேண்டும்


சில மந்திரிகள் அவருடன் கிரிக்கெட் விளையாடி காக்கா பிடிக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
தமிழ்ச் சினிமாவுலகத்தில் கோபாலபுரத்து பேரன்களின் ஆதிக்கம் பற்றி இன்றைய ஜூனியர் விகடனில் வந்திருக்கும் ஒரு சிறப்புக் கட்டுரை இது :
காலங்காலமாக தி.மு.க-வுக்கும், அதன் தலைவருக்கும் அனுதாபிகள் திரை உலகப் படைப்பாளிகள். ஆனால், இப்போது அவர்கள் உதடுகள் மூடிக் கிடக்கின்றன.புதியபடங்களுக்குபூஜை போடுவது தொடங்கி,முடிப்பதுவரை,  'அவசரம் வேண்டாம்... தேர்தல் முடியட்டும்’ என்ற வார்த்தைகளைத்தான் தயாரிப்பாளர்கள் வாயில் இருந்து கேட்க முடிகிறது!

 கடந்த மூன்றரை வருடங்களாகத் திரையரங்கு​களைக் கைப்பற்றி வைத்திருந்த பெரிய குடும்பத்தின் சினிமாப் படைத் தளபதிகளும் போர் நிறுத்தம் போன்றதொரு அமைதியில் இருக்கிறார்கள். மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் தேர்வு மற்றும் தேர்தல் காலம் என்பதால்தான் இத்​தனை அமைதி!

புகழ் பெற்ற நிறுவனங்கள் படத் தயாரிப்பை நிறுத்திவிட்டன. புதியவர்கள் உள்ளே நுழைய பயப்படுகிறார்கள். கனவுத் தொழிற்​​சாலையில் அப்படி என்னதான் நடக்கிறது..?....???.



கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும்... தியேட்டர்களுக்கு முழு வரி விலக்கு, படப்பிடிப்பு நடத்த கட்டணக் குறைப்பு, படப்பிடிப்புக்கு ஒரு முனை அனுமதி என்றெல்லாம் சலுகைகளை வாரி இறைத்தார். ஆனால், இந்த சலுகைகளை சினிமா உலகம் அனுபவிக்கத் தொடங்கும் முன்பே, ஆட்சியாளர்களின் ஆசை, தமிழ்த் திரையை நோக்கிப் பாய்ந்தது. முதலில் படங்​களை வாங்கி வெளியிட ஆரம்பித்தவர்கள், தடாலடியாக மொத்த சினிமா உலகத்தையும் வளைத்தனர்.


சன் பிக்சர்ஸ், உதயநிதி ஸ்டாலினின் 'ரெட்ஜெயன்ட்', தயாநிதி அழகிரியின் 'கிளவுட் நைன்' மற்றும் கலைஞர் டி.வி. போன்றவை சினிமா வியாபாரத்துக்குள் குதித்தன; படத் தயாரிப்பிலும் இறங்கின. ஆட்சி அதிகாரம், பண பலம் இருந்ததால் ஒட்டு மொத்தத் திரையுலகமும் இவர்கள் கட்டளைக்கும், கட்டுப்பாட்டுக்கும் விழுந்தன.

''சன் நிறுவனம் 1992-ம் ஆண்டு தொடங்கப்​பட்டது. பப்ளிக் லிமிடெட் கம்பெனியாக வளர்ந்தது. அடுத்ததாக சன் பிக்சர்ஸைத் தொடங்கியது. ஆனால், 'ரெட் ஜெயன்ட்', 'கிளவுட் நைன்', கலைஞர் டி.வி. ஆகிய மூன்றும், மூன்று ஆண்டுகளுக்குள் முளைத்தவை.



கோடிக்கணக்கில் பணம் போட்டு படங்களைத் தயாரிக்கவும், அல்லது தயாரித்த படங்களை கோடிகளைக் கொட்டி வாங்கவும் இவர்களுக்குப் பணம் எங்கே இருந்து வருகிறது..? அவை முறைப்படியானதுதானா..?

இந்தத் தொழிலில் முப்பது நாற்பது வருடங்களாக வலம் வரும் தயாரிப்பாளர்கள்கூட இரண்டு மூன்று தோல்விகளுக்குப் பிறகு அமைதியாகிவிடும்போது, இவர்​களால் மட்டும் அடுத்தடுத்து எப்படிப் படங்கள் எடுத்து வெளியிட முடிகிறது..?'' என்ற கேள்வி கோடம்பாக்கம் வட்டாரத்தில் சுழன்றடிக்கிறது.

''கூந்தல் உள்ளவள் அள்ளி முடிகிறாள் என்பது மாதிரி, பணம் வைத்திருப்பவர்கள் படம் எடுக்​கிறார்கள். அதை நாங்கள் தவறு சொல்லவில்லை. ஆனால், தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி அடுத்தவர்​களைப் படம் எடுக்கவிடாமலும், எடுத்த படத்தை ஓட விடாமலும், தங்கள் படத்தில்தான் முக்கிய ஹீரோக்​கள் நடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும் எந்த வகை​யில் நியாயம்...?'' என்றும் இவர்கள் கேட்கிறார்கள்.

கடந்த வருடம் 150 நேரடித் தமிழ்ப் படங்கள் வெளியாகின. இதில் 10 படங்கள் மட்டுமே வசூல் ரீ​தியாகத் தயாரிப்பாளர்களை சந்தோஷப்​படுத்தின. கிட்டத்தட்ட 100 படங்கள் வந்ததும்... போனதும் தெரியவில்லை. சில படங்கள் நன்றாக இருந்தும், திரையரங்குகளில் மூன்று நாட்கள் தாண்டும் முன்பே எடுக்கப்பட்டன. அத்தனை படங்​களின் தயாரிப்பாளர்களும் முக்காடு போட்டுக் கொண்டார்கள்.

இது பற்றி வேதனையோடு பேசும் தயாரிப்பாளர் ஒருவர், ''முன்பெல்லாம் ஒரு படம் பூஜை போடப்பட்ட அன்றே வியாபாரம் ஆகிற நிலை இருந்தது. தயாரிப்பாளர் முதல் ஷெட்யூல் முடிப்பார். எடுத்தவற்றை ஸ்டில்களாக பிரின்ட் போட்டு ஆல்பமாகத் தயாரிப்பார். மீடியேட்டர்கள் அலுவலகத்துக்கு வந்து ஆல்பம் பார்ப்பார்கள். விநியோகஸ்தர்களை அழைத்து வருவார்கள். ஹீரோ வேல்யூ பொறுத்து, வியாபாரம் பேசி ஒரு தொகையை முன் பணமாகக் கொடுப்பார்கள். இப்படியே சில ஏரியாக்கள் வியாபாரமாகிவிடும்.
தியேட்டர்காரர்களிடம் இருந்து வாங்கியும், விநியோகஸ்​தர்கள் தங்களது பங்காகவும் கொடுக்கும் பணத்திலேயே, தயாரிப்பாளர் படத்தை முடித்துவிடுவார். வியாபார முடிவில் விநியோகஸ்தர்களிடம் பேசிய தொகைக்கும் படத்துக்கு ஆன செலவுக்கும் இடையே நிற்கும் தொகை 'டெபிசிட்’ எனவும் 'லாபம்’ எனவும் பார்க்கப்படும். இதுதான் காலம் காலமாக தமிழ் சினிமாவில் நிலவிய வியாபார முறை. எல்லாப் படங்களுக்கும் வியாபாரம் இருந்தது.

ஆனால், இதுவரை நிலவி வந்த வியாபாரக் கட்டமைப்புக்குள் வராமல் அதிகாரத்தைப் பயன்படுத்தி, விநியோகஸ்தர்களைப் புறக்கணித்து நேரடியாக அரசியல் குடும்பங்கள் தமிழகத் திரையரங்குகளைப் பங்கு போட்டுக் கொண்டதில் தொடங்கியது பிரச்னை. சம்பாவும் அவர்களே... குறுவையும் அவர்களே என்றாக... மற்ற தயாரிப்பாளர்கள் ஊடுபயிர் ஆனார்கள்.

ஓர் ஊரில் நான்கு நல்ல தியேட்டர்கள் இருந்தால், அவற்றை ஆளுக்கு ஒருவர் தங்களது ஆளுமைக்குள் கொண்டுவந்தார்கள். '10-ம் தேதி எனது படம், 15 நாட்கள் கழித்து 25-ம் தேதி உனது படம்’ என தங்களுக்குள் செனட் அமைத்துக் கொண்டு படங்களை ரிலீஸ் செய்து தள்ளினார்கள். தடாலடியான விளம்பரங்களால், இவர்கள் ரிலீஸ் செய்யும் படங்களுக்கு ஓப்பனிங் எகிறிவிட... தியேட்டர்காரர்கள் காட்டில் மழையோ மழை!

விநியோகஸ்தர்கள் ஓரங்கட்டப்பட, பெரிய பட்ஜெட் படங்கள் பாதுகாப்பாக இவர்கள் கையில் வந்து விழ, சின்ன மற்றும் மீடியம் பட்ஜெட்டில் படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் நிலைமை பரிதாபமானது. எடுத்த படத்தை தியேட்டர்களுக்குக் கொண்டு செல்ல முடியாத நிலை!

இதில் உச்சபட்சக் கொடுமை என்னவென்றால், அரசியல் குடும்பங்களது படங்களை 15 நாட்களுக்குக் குறையாமல் ஓட்டும் தியேட்டர் அதிபர்கள் (ரசிகர்​களைப் பெரிய அளவில் கவராத 'தூங்கா நகரம்’ இன்னும் ஏராளமான தியேட்டர்களில் ஓடுகிறது!) மற்ற படங்களை ஓரிரு நாட்களில் தூக்கி எறிவதுதான்.

இவர்கள் தவிர்த்து வேறு யார் படத்தை ரிலீஸ் செய்ய தியேட்டர்களை புக் செய்யச் சென்றாலும், ''சார், 20-ம் தேதி அந்தப் படம் வருகிறது. உங்கள் படத்துக்கு ஒரு வாரம்தான்...'' என்று தயாரிப்பாளரின் 25 நாள் கனவை(?!) ஆரம்பத்திலேயே நசுக்கிவிடுவார்கள்.

தயாரிப்பாளர் தயங்கி நிற்கையில்... வரிசையாக அதிகார மையம் தயாரிக்கும் படங்களின் ரிலீஸ் தேதிகளை விளக்கி, 'ஆகஸ்ட் கடைசியில் நாங்கள் சொல்கிறபோது, உங்கள் படத்தை ரிலீஸ் செய்யலாம்’ என ஜனவரி மாதம் பேசுகிறார்கள். அதாவது எட்டு மாதங்கள் பொறுமையாக இரு என்பார்கள்.

இதுகூடப் பரவாயில்லை. கோடிகளைக் கொட்டிப் படமெடுத்த தயாரிப்பாளர், 'சரி, நீங்கள் சொல்லும் தேதியில் ரிலீஸ் செய்கிறேன்... ஏதாவது, அட்வான்ஸ் கொடுங்கள், வட்டி கட்ட வேண்டும்’ என்று தியேட்டர்​களிடம் கேட்டால். நமுட்டுச் சிரிப்பும் நக்கல் பார்வையுமே பதிலாகக் கிடைக்கும். ''படத்தை ரிலீஸ் செய்கிறோமே, அது போதாதா..?'' என்கிற பஞ்ச் டயலாக் கேட்டு தயாரிப்பாளர்களுக்கு மயக்கம் வராத குறைதான்.

தியேட்டர்காரர்களிடம் கமிட்மென்ட் இல்லாத நிலையில் படத்தை ரிலீஸ் செய்தால், வெள்ளிக்கிழமை வெளியாகும் படம் திங்கள் அன்றுகூட திரையில் இருப்பதில்லை. இராம.நாராயணனின் டப்பிங் படங்களையோ, ராஜ கன்னிகளின் குளியல் படங்​களையோ போட்டு அடுத்த வியாழக்கிழமைவரை காலம் தள்ளுகிறார்கள். வெள்ளியன்று ரெட் ஜெயன்ட்டோ, கிளவுட் நைனோ!

நல்ல படங்களை தியேட்டரில் போய்ப் பார்க்க விரும்பும் ரசிகர்கள், 'எது நல்ல படம்?’ என்பதற்கு அளவுகோலாக, ஊடக விமர்சனங்களையும், படம் பார்த்தவர்களின் கமென்ட்டுகளையும்தான் எடுத்துக் கொள்வார்கள். விமர்சனம் படித்துவிட்டு அல்லது படம் பார்த்தவர்கள் கூறுவதைக் கேட்டு, ஆடியன்ஸ் தியேட்டருக்கு வருவதற்குக்கூட இப்போ​தெல்லாம் அவகாசம் கொடுக்காமல் படத்தை எடுத்து ​விடுகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன் வெளியான 'தென்மேற்கு பருவக்காற்று’, வெளியான மூன்றாவது நாளே பல திரையரங்குகளில் காணாமல் போனது. பத்திரிகை விமர்சனங்கள் வெளியாகி படம் பார்க்கும் ஆர்வத்தில் மக்கள் தியேட்டருக்குப் போனபோது, பல ஊர்களில் படம் இல்லை!
அதேபோல், 'களவாணி’ திரைப்படத்தை ஒரு குறிப்பிட்ட நிறுவனம் ஓட விடாமல் விரட்டி விரட்டி அடித்தது.  'மதராசபட்டினம்’ மற்றும் 'தில்லாலங்கடி’ படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதற்காக, களவாணியை 15 நாட்களிலேயே திரையரங்குகளில் இருந்து களவாடினார்கள். 'பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்துக்காக 'எந்திரன்’ ரிலீஸை ஒரு வாரம் தள்ளிவைத்தார்கள்.

வேறு படங்களை ஒப்பந்த ரீதியில் ரிலீஸ் செய்திருந்தால்கூட, அந்த ஒப்பந்தத்தை அலட்சியம் செய்துவிட்டு அதிகார மையத்தின் படங்களை ரிலீஸ் செய்தார்கள். இப்படியாக கழகத்தார் மட்டுமே வாசிக்கும் 'முரசொலி’போல ஆகிவிட்டது தமிழ்த் திரை!. கிட்டத்தட்ட 80 படங்கள் சென்ஸார் முடிந்து காத்திருக்கின்றன. நூற்றுக்கணக்கான படங்கள், சென்ஸாருக்குத் தயாராக இருக்கின்றன.
விலைவாசி உயர்வைப் பற்றி குறிப்பிடும்போதெல்லாம் முதல்வர் கருணாநிதி அண்டை மாநிலங்களை மேற்கோள் காட்டுவது உண்டு. இது பற்றி பேசும் தயாரிப்பாளர் ஒருவர், ''ஆந்திராவில் ஒரு படம் ஃபிளாப் என்றாலும் மூன்று வாரங்கள் ஓடும். கன்னடம் மற்றும் மலையாளப் பட உலகிலும் இதுதான் சூழ்நிலை. 100 நாட்கள் வெள்ளி விழா எல்லாம் இந்த மாநிலங்களில் சாத்தியம், சகஜம். ஆனால், தமிழ் சினிமாவின் தலை எழுத்துதான் தாறுமாறாகப் போய்விட்டது. படம் நன்றாக இல்லை என்றால்... ஒரு நாள், சுமார் என்றால்... மூன்று நாள், வெற்றிப் படம்  என்றால்... ஒரு வாரம். அவ்வளவுதான்.

ஏன்,அண்டைமாநிலங்களில்ஆளும்கட்சிக்காரர்கள் படம்எடுக்கவில்லையா? அல்லது அவர்களது வாரிசுகள் பட வியாபாரத்தில் இல்லையா? இருக்கிறார்கள். அங்கெல்லாம் மனசாட்சியோடு, நேர்மையோடு சினிமா வியாபாரம் நடக்கிறது. இங்கு, 'தடி எடுத்தவன் தண்டல்காரன், வல்லவன் வகுத்ததே வாய்க்கால்’ என்கிற பழமொழியை நினைவூட்டுவதுபோல முதல்வர் குடும்பத்தினர் தமிழ் சினிமாவை மேலாதிக்கம் செய்கிறார்கள்...'' என்கிறார்.

இதோ தேர்தல் நெருங்கிவிட்டது. முதல்வருக்குக் கூடிக் கூடி விழா எடுத்து அதன் பலனை அனுபவித்​தவர்கள் ஒருபுறம் இருக்க... பணத்தைக் கொட்டிப் படம் எடுத்து,அதைரிலீஸ்செய்ய முடியாமல் தவிக்கும் தயாரிப்பாளர்களும், சுதந்திரமாகச் செயல்பட முடியாமல் தவிக்கும் படைப்பாளிகளும் இன்னொரு புறம். இவர்கள்தான், 'தேர்தல் முடியட்டும்...’ என்று நம்பிக்கையோடு காத்துக் கிடக்கிறார்கள்.
''தேர்தலுக்குப் பிறகும் இதே நிலைமை தொடருமானால், அண்டை மாநிலங்களுக்கு ஓடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இருந்தால் சொல்லுங்கள்...?'' என்று சில தயாரிப்பாளர்கள் கேட்கிறார்கள். சொல்லுங்கள்!

ஐம்பது நாள் ஓட்டணும்?

ரெட் ஜெயன்ட் முதலில் தயாரித்த 'குருவி’ எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை. அடுத்த படம் 'ஆதவன்.’ அதன் ரிசல்ட்டும் சரியாக இல்லை. ஒரு வாரத்தில் தியேட்டர்கள் காத்தாட... படத்தை எடுப்பதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்தார்கள். இந்தத் தகவல் கிடைத்​தவுடன், அதிகார மையத்தைச் சேர்ந்தவர் எடுத்தார் போனை... பிடித்தார் திரையரங்குகளை!

'தியேட்டர் நடத்தணும்ல...’ என்கிற ரீதியில் எகிற... வடிவேலு பாணியில் பல்டி அடித்தார்கள் திரையரங்க ஓனர்கள். இப்ப, '50 நாள்தானே ஓட்டணும்... பாருங்க...’ என்றபடி அதிகார மையத்தின் படங்களை பிரின்ட் தேயத் தேய ஓட்டுகிறார்கள்!

தீர்மானம் என்னாச்சு?

கடந்த ஜனவரியில் தயாரிப்பாளர்கள் சங்கம் அவசரக் கூட்டம் ஒன்றைக் கூட்டியது. 'வாரத்துக்கு இரண்டு படங்கள் மட்டுமே ரிலீஸ் செய்ய அனுமதி வழங்கப்படும். அதோடு, இனி எந்த சேனலும் ஒரு படத்தின் விளம்பரத்தை ஒரு நாளைக்கு ஐந்து தடவைக்கு மேல் போடக் கூடாது, திரையரங்கங்கள் அரசாங்கம் நிர்ணயித்த கட்டணத்தைக் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். பெரிய படங்கள் 100 பிரின்ட்டுகளுக்குள் திரையிடப்பட்டால் மட்டுமே வரி விலக்கு, மான்யம்...’ என்றெல்லாம் தீர்மானம் போட்டுப் பரபரப்பு ஏற்படுத்தினார்கள்.

விஜய் நடித்த 'காவலன்’ படத்தையும், கார்த்தி நடித்த 'சிறுத்தை’யும் முடக்கப் போடப்படுகிற திட்டம் என்பதை விவரமானவர்​கள் அறிந்து கொண்டார்​கள். அவர்கள் எதிர்பார்த்தது மாதிரியே, போதுமான விளம்பரம் இல்லை என்பதால், பெரிய விலை கொடுத்து காவலனை வாங்குவதற்கு விநியோகஸ்​தர்கள் தயங்க, நடிகர் விஜய் கிட்டத்தட்ட சொந்தமாக ரிலீஸ் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

அதைப் போலவே, 'சிறுத்தை’யும் சொந்தமாக வெளியிடப்​பட்டது. ஆனால் இதே நேரத்தில்,  'இளைஞன்’ படம் தமிழ்நாட்டில் உள்ள நம்பர் ஒன் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

அதே நேரம், கவுன்சில் போட்ட தீர்மானத்தின்படி விளம்பரத்திலும் கட்டுப்பாடு வரவில்லை. பிரின்ட் போடுவதிலும், டிக்கெட் விலையிலும் கட்டுப்பாடு இல்லை.

தடாலடி விளம்பரம்

சேனல்களில் செய்யப்படும் விளம்பரம்தான் ஒரு படத்துக்கான ஓப்பனிங்கை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. அதிகார மையம் வாங்கியோ அல்லது தயாரித்தோ ரிலீஸ் செய்யும் படங்களுக்கான விளம்பரம், ரிலீஸுக்கு முந்தைய ஒரு வாரத்தில் இருந்து ரிலீஸாகி, குறைந்தபட்சம் ஆறு வாரங்கள்வரை செய்யப்படுகிறது.

டி.வி-யில் 10  நிமிடங்களுக்கு ஒரு முறை என 24 மணி நேரமும் கலங்கடிக்கும் விளம்பரங்களின் மொத்த மதிப்பு 30 கோடியைத் தாண்டுமாம். இந்த விலை கொடுத்து எந்த ஒரு தயாரிப்பாளரும் தனது படத்துக்கு விளம்பரம் செய்ய முடியாது!

நன்றி : ஜூனியர்விகடன்

இது கொஞ்சம் ஓரவஞ்சனையான கட்டுரைதான்..! நேரடி பேரன்களான உதநிதியையும், தயாநிதியையும் தாக்கிய அளவுக்கு, ஒண்ணுவிட்ட பேரன்களான மாறன் பிரதர்ஸை இக்கட்டுரையில் குற்றம் சொல்லவில்லை..! மறைமுகமாகவே சொல்லியிருக்கிறார்கள்..!

பேரன்களின் கைகளில் பெரிய படங்கள் சிக்குவதற்கு முதல் காரணமே அவர்களிடத்தில் படத்தைக் கொடுத்துவிட்டால் தியேட்டர்கள் கிடைப்பது மிக எளிது என்பதுதான்.. இரண்டாவது காரணம், பணம் மொத்தமாக ஒரே பேமெண்ட்டில் கிடைத்துவிடும் என்பது. மூன்றாவது இலவசமாக படங்களுக்கு அவர்களே தினத்துக்கு நூற்றியெட்டு விளம்பரங்களை கொடுத்துவிடுவார்கள் என்பதினாலும்தான்..!

இப்போது பேரன்களை தேடி வந்து படங்களை கொடுக்க முன் வரும் தயாரிப்பாளர்களை ஒரு காலத்தில் விநியோகஸ்தர்களும், மீடியேட்டர்களும், தியேட்டர்காரர்களும்தான் காப்பாற்றியிருப்பார்கள். காப்பாற்றியிருக்கிறார்கள். அவர்கள் 70, 80, 90 சதவிகிதம் என்று பணத்தினை கொடுத்துவிட்டு மீதியை படத்தின் ரிலீஸுக்கு பின்பு தருகிறோம் என்று சொல்லி பெட்டியை வாங்கிச் செல்வார்கள்.

படம் நன்றாக ஓடினால் சிலர் சொன்னது போலவே திருப்பித் தருவார்கள். பலர் வசூல் குறைவு என்று பொய் சொல்லி குறைத்துத் தருவார்கள். வசூல் அதிகம் என்பது தயாரிப்பாளருக்குத் தெரியும் என்றாலும் அவரால் பகைத்துக் கொள்ள முடியாத நிலை. ஏனெனில் சினிமாவில் யாருக்கு எங்கே சுழி உண்டு. பள்ளம் உண்டு, கப்பல் கவிழும் என்பதெல்லாம் தெரியவே தெரியாது. இதனால் எதற்கும் தயாராகவே இருப்பார்கள்.

அடுத்தப் படத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று அன்போடு சொல்லி, சிலர் குறைந்த பணத்தைக் கொடுத்து செட்டில் செய்துவிடுவார்கள். சரி வந்தவரையிலும் லாபம் என்று சொல்லி தயாரிப்பாளர் திருப்திபட்டுக் கொள்வார்.

ஆனால் இந்த பேரன்மார்கள் வந்தவுடன் செய்த வேலை.. ஒரு படம் பிடித்துவிட்டது என்றால்.. மொத்தமாக ஒரு தொகை பேசி அப்படியே செக்கை கையில் கொடுத்துவிட்டுப் போவதுதான். இதனால் விநியோகஸ்தர், தியேட்டர்காரர்கள் கூட்டணியில் முன்பு இருந்த மிச்சப் பணம் வருமா? வராதா என்ற டென்ஷன் இப்போது இல்லை.. “அதான் மொத்தமும் வந்திருச்சுல்ல.. விட்டு்ட்டு அடுத்த வேலையை பார்ப்போம்..” என்று ஓடி விடுவார்கள்..!

அத்தோடு சொந்த டிவிக்களில் ஓசி விளம்பரமும், சிறந்த தியேட்டர்கள் கிடைத்து இதனால் கூடுதலாக பண வசூலுடன் படத்திற்கு பெயரும் கிடைப்பதால் ஹீரோக்களுக்கும் அடுத்தக் கட்டத்தில் கல்லா கட்டும் வாய்ப்பு நிறையவே கிடைத்தது. இதனாலேயே இந்தப் பேரன்களிடம் படத்தைக் கொடுத்துவிட்டால் படமும் ஓடும். நாமளும் இதை வைச்சே அடுத்த படத்தில் சம்பளத்தை உயர்த்தலாம் என்று பெரிய ஹீரோக்களும் கணக்குப் போட்டு இவர்களை ஆதரித்தார்கள். இதனாலேயேதான் பேரன்கள் ஜொலித்தார்கள்.

இதற்கு காரணம் பேரன்கள் கை காட்டும் படங்களைத் திரையிட திரையங்குகள் தயாராக இருந்ததுதான். இதற்கு அடிப்படையான விஷயம்... இவர்கள் மேலிடத்தின், ஆட்சி அதிகாரத்தின் நேரடி வாரிசுகள்.. பேரன்கள் என்பதுதான். இவர்கள் ஆட்சியாளர்களாக இல்லாமல் இருந்திருந்தால் தியேட்டர்காரர்கள் ஏன் ஓடாத படத்தை 25 நாட்களாக ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.?

இப்போதைக்கு தியேட்டர் வாடகைக்கு மேல் 50 சதவிகிதம் வசூல் வராத படங்களை உடனுக்குடன் தியேட்டரை விட்டு தூக்கிவிடுகிறார்கள் தியேட்டர்காரர்கள். இந்த பாச்சா இந்த பேரன்களிடம் மட்டும் நடப்பதில்லை. 'இளைஞன்' படமும், 'தூங்கா நகரமும்' இன்னமும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருப்பதே இதற்குச் சாட்சி..!

'தென்மேற்குப் பருவக் காற்று' படம் தூக்கப்பட்டபோது அதன் ஓப்பனிங்கில் எப்போதும்போல் கூட்டம் இல்லை. இதனாலேயே 3-வது நாளே சில திரையரங்குகளில் தூக்கிவிட்டார்கள். ஆனால் அதன் பின்பு படத்தின் ரிசல்ட் பரவலாக பல இடங்களிலும் பேசப்பட்ட பின்புதான் நிலைத்து ஓடத் துவங்கியது. அதையும் பாதியோடு நிறுத்திவிட்டு, அதாவது தியேட்டர்காரர்கள் வசூலில் திருப்திபட்டுக் கொண்டிருந்த நேரத்திலேயே பேரன்களின் படங்களுக்காக அந்தப் படம் தூக்கப்பட்டது என்பதுதான் உண்மையான கதை. இதைத்தான் அதிகாரத் துஷ்பிரயோகம் என்கிறார்கள் சினிமாவுலகில்..!

அதேபோல் டிவிக்களில் விளம்பரங்கள் செய்யக் கூடிய அளவுக்கு சத்துள்ள தயாரிப்பாளர்கள் இன்றைய சினிமாவில் மூன்றே பேர்கள்தான். அதுவும் இந்த மூன்று பேரன்கள்தான்..! இவர்களைத் தவிர லட்சணக்கணக்கில், கோடிக்கணக்கில் விளம்பரங்களை வாரி வழங்கி தியேட்டர்களுக்கு ரசிகர்களை ஈர்க்கும் வித்தையை மற்றவர்களால் செய்யவே முடியாது..!

சன் தொலைக்காட்சி விநியோகம் செய்த அத்தனை திரைப்படங்களுக்கும் அது கொடுத்த விளம்பரத்திற்கு உண்மையாக கட்டணம் செலுத்தியிருந்தால் அது அந்தப் படத்தின் தயாரிப்புச் செலவுகளைக்கூட அதிகமாகவே இருந்திருக்கும். அந்த அளவுக்கு தனது சக்தியை சகலவிதத்திலும் பயன்படுத்தியது சன் தொலைக்காட்சி..!

இதனாலேயே ஏதோ மாசத்துக்கு ஒரு படத்துக்குப் போனால் போதும் என்கிற மனநிலையில் இருக்கும் ரசிகனைக்கூட மெதுவாக தனது படத்தினை பார்க்க வைத்தது..! அதற்குத் தோதாக இவர்களுடைய திரையரங்குகளில் அத்திரைப்படம் டிவியில் விளம்பரம் ஓடும்வரையிலும் ஓடிக் கொண்டுதான் இருந்தது..!

இந்த அளவுக்கு மற்ற தயாரிப்பாளர்களால் விளம்பரங்கள் செய்ய முடியுமா..? முடியாது..? தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களின் கூட்டமே குறைந்து கொண்டே போய்க் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் ரசிகனின் கண் பார்வையிலும், காதுகளிலும் அதிகம் பேசப்படும் திரைப்படங்களே அதிகம் பார்க்கப்படுகின்றன. இதனால் பாதிக்கப்பட்டது லோ பட்ஜெட் படங்களே..! அந்தத் திரைப்படங்கள் சுமாரான, நல்லவைகளாக இருந்தும்கூட பாடாவதி தியேட்டர்கள் மட்டுமே கிடைத்த காரணத்தால் அந்தத் தியேட்டர்களைப் புறக்கணிக்கும் ரசிகர்களால் பார்க்க முடியாமல் போய்விட்டது..! இவர்களையும் மீறி விதிவிலக்காக முன்பு 'களவாணி' அபாரமாகவும் தற்போது 'யுத்தம் செய்' சுமாராகவும் ஓடின என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

தற்போது டிவி விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தாலும், கலைஞர் டிவியில் 'தூங்கா நகர'த்திற்கும், 'இளைஞனு'க்கும் நடந்த விளம்பர யுத்தங்களை யாராலும் கணக்கில் எடுக்க முடியாது. அத்தனை விளம்பரங்கள். கூட்டம் போனதா என்பதில்லை இங்கே பிரச்சினை.. ஒரு அமைப்பு கட்டுப்பாடு ஒன்று விதிக்கிறது. ஆனால் அதே அமைப்பின் சில உறுப்பினர்கள் மட்டும் அதனை மீறுகிறார்கள். மற்றவர்களால் அதனை மீற முடியவில்லை என்றால் இது அராஜகம்தானே..!

பணம் இருக்கு. செலவு செய்கிறார்கள் என்று சொன்னால்கூட திரையரங்கு அதிபர்களின் முதுகு வளையும் தன்மையினால் அவர்களையும் அதிகாரத்தைக் காட்டி மடக்கி வைத்திருக்கிறார்களே... இதற்கென்ன பதில்..?
இதில் குற்றத்தை சுமப்பவர்களும் திரையுலகத்தில்தான் உள்ளார்கள். குற்றம் சாட்டுபவர்களும் திரையுலகத்தில்தான் உள்ளார்கள். ஆனால் குரலை எழுப்பாமலேயே தங்களுக்குள்ளேயே கிசுகிசுவாக பேசிக் கொள்கிறார்கள். இவ்வளவுதான் இவர்களது தைரியம்..! ஆட்சி மாற்றம் நடந்தால் மட்டுமே இவர்களது குரல் ஒலிக்கும்...! (நன்றி - truetamilan)

உங்க கமெண்ட் .... ?