Sunday, September 18, 2011

தி.மு.க.‌வினரு‌க்கு ம‌ண் ‌‌மீதுதா‌ன் ஆசை - சரத்குமார் கு‌ற்ற‌ம்சா‌ற்று

''ி.ு.க.வினருக்கதமிழமணமீதுதானஆசை. அதனால்தானநிலப்பறிப்பவழக்குகளிலசிக்கி வருகிறார்கள்'' எ‌ன்று அ‌கில இ‌ந்‌திய சம‌த்துவ ம‌க்க‌ள் க‌‌ட்‌சி‌த் தலைவ‌ர் சர‌‌த்குமா‌ர் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் நடைப‌ெ‌ற்ற சமத்துமக்களகட்சியின் 4வதஆண்டவிழா‌வி‌ல் கல‌ந்து கொ‌ண்டு பே‌சியபோது இதனை அவ‌ர் த‌ெ‌ரி‌வி‌த்தா‌ர்.

கடந்த 5 ஆண்டுகளிலூ.1.76 லட்சமகோடி ஊழலசெய்ததுதானி.ு.க. செய்சாதனை எ‌ன்று சர‌த்குமா‌ர் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

அண்ணஹசாரேவினஊழலஎதிரிப்பபிரசார‌த்தை வரவே‌ற்ற சர‌த்குமா‌ர், அதநேரத்திலஅரசியலசட்டத்தமாற்வேண்டுமஎன்பதஏற்றுககொள்முடியாது எ‌ன்றா‌ர்.

சட்டப்பேரவைக்கி.ு.க. உறுப்பினர்களதிருக்குறளகேட்டுவிட்டதிரும்பி சென்றவிடுவது அவர்களதேர்ந்தெடுத்மக்களுக்கசெய்யுமதுரோகம் எ‌ன்று கூ‌றிய சர‌த்குமா‌ர். ி.ு.க.வினருக்கதமிழமணமீதுதானஆசை. அதனால்தானநிலப்பறிப்பவழக்குகளிலசிக்கி வருகிறார்கள் எ‌ன்றா‌ர்.

திருமங்கலமஇடைததேர்தலிலபணத்தினமூலமவெற்றி பெற்ு.க. அழகிரி இன்றஎங்கிருக்கிறார் எ‌ன்று சர‌த்குமா‌ர் ‌வினா எழு‌ப்‌பினா‌ர்.

முதலமை‌ச்ச‌ர் ஜெயலலிததலைமையிலநடந்தவருமநல்லாட்சிக்கசமத்துமக்களகட்சி தூணாஇருந்தவருகிறது எ‌ன்று சர‌த்குமா‌ர் கூ‌றினா‌ர்.

மக்களுக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் துரோகம்: சரத்குமார்

சென்னை, செப். 18: சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்காததன் மூலம் திமுக எம்.எல்.ஏ.க்கள் மக்களுக்கு துரோகம் செய்கின்றனர் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேசினார்.சமத்தும மக்கள் கட்சியின் 4-வது ஆண்டு விழா, சென்னை கந்தன்சாவடியில் சனிக்கிழமை நடந்தது. இதில் கலந்து கொண்ட சரத்குமார் பேசியது:கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் செய்ததுதான் தி.மு.க. செய்த சாதனை. அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிரிப்பு பிரசாரம் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.சட்டப்பேரவைக்கு தி.மு.க. உறுப்பினர்கள் வருகிறார்கள். திருக்குறள் கேட்டுவிட்டு திரும்பி சென்று விடுகின்றனர். இது அவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு செய்யும் துரோகம். தி.மு.க.வினருக்கு தமிழ் மண் மீதுதான் ஆசை. அதனால்தான் நிலப்பறிப்பு வழக்குகளில் சிக்கி வருகிறார்கள். திருமங்கலம் இடைத் தேர்தலில் பணத்தின் மூலம் வெற்றி பெற்ற மு.க. அழகிரி இன்று எங்கிருக்கிறார். தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்து வரும் நல்லாட்சிக்கு சமத்துவ மக்கள் கட்சி தூணாக இருந்து வருகிறது. தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றி வருகிறார்.ராஜபட்சேவுடன் சேர்ந்து கொண்டு இந்திய இறையாண்மைக்கு சீனா அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இந்திய இறையாண்மையைக் காப்பாற்ற கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றார் சரத்குமார்.நிகழ்ச்சியில் தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். கட்சியின் துணைத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் எம்.எல்.ஏ., தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் கே.ஜே.நாதன், அவைத்தலைவர் வி.செல்வராஜ், பொதுச் செயலாளர் கரு. நாகராஜன், துணைப் பொதுச் செயலாளர்கள் சுந்தரேசன், மணிமாறன், சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மோடிக்கு சரத்குமார் வாழ்த்து

சென்னை,செப்.17:குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
.
குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திரமோடிக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்எல்ஏ தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.மேலும் அவர் மேற்கொள்ள இருக் கும் உண்ணாவிரதப் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்களையும் தெரிவித்தார். நரேந்திரமோடி மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்தார்.

இவ்வாறு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் ச.ம.க. வேட்பாளர் 3 நாளில் அறிவிப்பு

சென்னை: உயர்மட்டக் குழு கூடி 3 நாட்களுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல்  வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்  கூறினார்.
சமத்துவ மக்கள் கட்சி சார்பில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நிகழ்ச்சி சென்னை கந்தன்சாவடியில் நேற்று நடந்தது. தமிழ கம் முழுவதிலும் 2500க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு செய்தனர். அவர்களுடன் சரத்குமார் நேற்று நேர்காணல் நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் போட்டியிடுவோம். கூட்டணி தர்மபடி நடந்து கொள்வோம். தமிழக அளவில் விருப்ப மனு பெறப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி யில் எத்தனை இடம் தருகிறார்களோ, அந்த இடங்களில் நாங்கள் போட்டியிடுவோம். உயர்மட்டக் குழு கூடி 3 நாட்களுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பா ளர் விவரம் வெளியிடப்படும்.  இவ்வாறு சரத்குமார் கூறினார்.
பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், துணைத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் நாதன், கொள்கை பரப்பு செயலாளர் ஜெயபிர காஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Thursday, September 15, 2011

துப்பாக்கிச் சூடு : சரத்குமார் நிதி உதவி!

சென்னை : சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்தவர் குடும்பங்களுக்கு, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கட்சியின் அவைத் தலைவர் செல்வராஜ், பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் ஆகியோர் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் நேரில் சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பார்கள். மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் உதவித் தொகையாக வழங்குவார்கள்.

மத்திய அரசுக்கு சரத்குமார் கோரிக்கை!

சென்னை : அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு தொழில்நுட்பத்துடன் அணுமின் நிலையத்தை மத்திய அரசு அமைத்து வருகிறது. அணுமின் நிலையம் அமைப்பதை எதிர்த்து, அப்பகுதி மக்கள் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாற்று வசிப்பிடம், அவர்களுக்கு இழப்பீடு, தொழில் வேலைவாய்ப்பு, பாதுகாப்பை உறுதி செய்தல் போன்ற எந்த முன் நடவடிக்கையும் எடுக்காமல், அணு உற்பத்தியை தொடங்க நினைப்பது தவறானது. எனவே, கூடங்குளம் அணுமின் உற்பத்தியை நிறுத்தி வைத்து, அப்பகுதி மக்களின் கோரிக்கையை பரிசீலிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்

சரத்குமார் குற்றச்சாட்டு ரயில் விபத்துக்கு காரணம் நிர்வாகத்தின் கவனமின்மையே

சென்னை : சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்ட அறிக்கை: அரக்கோணம் அருகே மேல்பாக்கம் சித்தேரியில் நேற்று முன்தினம் நடந்த ரயில் விபத்து மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக இருக்கிறது. சிக்னலுக்காக நின்றுக் கொண்டிருந்த ரயிலை, அதே பாதையில் வந்து கொண்டிருந்த மின்சார ரயில் இடித்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதை பார்க்கும்போது, ரயில்வே நிர்வாகத்தின் கவனமின்மையே காரணம் என்று தெளிவாக தெரிகிறது.

ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பயணிகளுக்கு சவுகரியமான பயணத்தையும், இதுபோன்ற விபத்துக்களிலிருந்து பாதுகாப்பையும் அளிக்க வேண்டியது, ரயில்வே நிர்வாகத்தின் முழு பொறுப்பும் கடைமையாகும். இந்த கோர விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு சமத்துவ மக்கள் கட்சி சார்பில் என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருபவர்கள், விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Thursday, September 1, 2011

பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்: சரத்குமார்


தமிழக அரசு கொண்டுவந்துள்ளதீர்மானத்தை மத்தியஅரசு ஏற்று பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என ச.ம.க. தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஆர்.சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் மூவரின் கருணை மனு, குடியரசுத்தலைவரால் நிராகரிக்கப்ட்டு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், இதனை மாற்றும் அதிகாரம் தமிழக முதல்வருக்கு இல்லை என்பதைத் தெளிவாக்கி சட்டப் பேரவையில் முதல்வர் தெரிவித்தார்.

இருப்பினும், மூவரது தூக்கு தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை சட்டப் பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றியதை ச.ம.க. சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் பாராட்டி வரவேற்கிறேன்.

தமிழகத்தில் அகதி முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக மக்களுக்கு இணையாக நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். இது இலங்கைத் தமிழர்களின் நலனில் அவரது அக்கறையையும், உண்மையான உணர்வையும் பிரதிபலிக்கிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தமிழக முகாம்களில் இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு, தமிழக மக்களுக்கு இணையாக நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டும். தென் மாவட்ட மக்கள் பயன் அடையும் வகையில், விளையாட்டு திறனை ஊக்கப்படுத்தும் வகையில் குற்றாலத்தில் நீச்சல் பயிற்சி பள்ளி அமைக்க வேண்டும். இதனை ஏழை எளிய மாணவ மாணவிகளின் நலன் கருதி, திறந்த வெளி நீச்சல் பயிற்சி பள்ளியை அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார்.

முதல்வருக்கு சரத்குமார் பாராட்டு

சென்னை, ஆக.31:ரூ.70 கட்டணத்தில் கேபிள் இணைப்பு வழங்கும் வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் எம்எல்ஏ பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
.
அரசு கேபிள் கார்பரேசøனை முந்தைய  திமுக அரசு  சொந்த சுயநலத்திற்காக தொடங்கினார்கள். ரூபாய் 100 கோடி சலுகை தொடங்கப்படுவதாக அறிவித்த அரசு கேபிள் கார்பரேசனை சுயநலத்தோடு அவர்களே முடக்கிவிட்டார்கள். அதனால மக்களுக்கு கிடைப்பத்õக அறிவித்த எந்த பயனும கிடைக்கவில்லை.

ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் சமயத்தில்  அறிவித்தப்படி  அரசு கேபிள் கார்பரேசனுக்குபுத்துயிர் அளித்து அதள்கென முழு நேர அதிகாரிகளையும் பிரவிற்கென்று ஒரு தலைவரையும் நியமித்து சீரமைப்பு செய்துள்ளார்கள்.இப்பொழுது முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளபடி ஒரு இணைப்புக்கு ரூபாய் 70 செலுத்தினால் போதும என்ற அறிவிப்பின் மூலம் ரூபாய் 200 வரை செலுத்தி வந்த மக்களுக்கு ரூ. 70 முதல் 130 வரை சலுகை கிடைத்திருக்கிறதுது.

முதல்கட்டமாக இலவச சேனல்களும், படிப்படியாக கட்டண சேனல்களும் கேபிள் இணைப்பு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பு பெரிதும் வரவேற்கத்தக்கதுது.வேலூர், கோவை தஞ்சாவூர் , திருநெல்வேலி ஆகிய இடங்களில் அரசு டிஜிட்டல தலைமுனையம் அமைக்கப்பட்டிருக்கிறதுது.

மற்ற இடங்களில் தலைமுனையங்களை வாடகைக்கு எடுத்துள்ள நிலையை விரைவில் முடிவுக்கு கொண்டு வந்து அனைத்துபகுதிகளிலும் தமிழக அரசே சொந்தமாக டிஜிட்டல் தலைமுனையங்களை விரைந்து அமைத்திட முன் வரவேண்டும்.

கேபிள் தொலைக்காட்சியை எளிய கட்டணத்தில் தமிழக மக்கள் பார்ப்பதற்கு வசதி ஏற்படுத்தி கொடுத்த முதல்வருக்கு மிகுந்த பாராட்டுதல்களையும் சமக சார்பில்தெரிவித்து கொள்கிறேன்இவ்வாறு சரத்குமார் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.